சுவாமியே..சரணம் ஐயப்பா!: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் ரூ.52 கோடி வருமானம்..தேவசம் போர்ட் அறிவிப்பு..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் 52 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில், கடந்த 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைந்திருந்த நிலையில், நடப்பாண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. சன்னிதானம் செல்லும் 4 பாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் முன்பதிவு திறம்பட செயல்படுத்தப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் … Read more

2வது மாடியில் இருந்து குதித்த மாணவர்..!

ராகிங் தொல்லையால், பல்கலைக் கழக விடுதி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகார் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்ரூகார் பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியின் 2-வது மாடியில் தங்கியிருந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி … Read more

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை: பாபா ராம்தேவுக்கு குவியும் கண்டனம்

புனே: பெண்கள் ஆடை பற்றி யோகா குரு பாபா ராம்தேவ் பேசிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. அருவருக்கத்தக்க கருத்தை கூறிய ராம்தேவ் நாட்டிலுள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்நவிஸ். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் வந்திருந்தனர். அப்போது பேசிய ராம்தேவ், … Read more

கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம்: திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் துறைமுக போராட்டத்தில் கைதானவர்கள் விடுவிக்க கோரி திருவனந்தபுரம் காவல் நிலையம் மீது மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 36 போலீசார் காயமடைந்தனர். திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வர கூடிய  விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். துறைமுக திட்டத்தை கைவிடக் கோரி 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பேராயர் மற்றும் 50 ஆயர்கள் … Read more

அருவியில் செல்ஃபி எடுத்தபோது கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெலகாவி: அருவியில் செல்ஃபி எடுத்தபோது, கர்நாடக மாணவிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள அராபிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை அருகேயுள்ள கிட்வட் அருவிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். பெலகாவி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி, கோல்காபூர் மாவட்டம் சந்கட் தாலுகாவில் உள்ளது. மாணவிகள் சிலரின் பெற்றோரும் உடன் சென்றிருந்தனர். அருவி நீரில் மாணவிகள் அனைவரும் … Read more

உணவுக்கு கூட பணமில்லை!: பெங்களூருவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த ஐ.டி. ஊழியர் 2 வயது மகளை கொன்ற கொடூரம்..!!

பெங்களூரு: பெங்களூருவில் கடன் தொல்லையில் சிக்கி தவித்த ஐ.டி. ஊழியர் ஒருவர் உணவுக்கு கூட பணம் இல்லை என கூறி தனது இரண்டு வயது குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. குஜராத்தை சேர்ந்த ராகுல் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். ஐ.டி. ஊழியரான ராகுல் 6 மாதங்களுக்கு முன்பு வேலையை இழந்துள்ளார். பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழந்த அவர், தனது சொந்த வீட்டிலேயே நகைகளை திருடி … Read more

சபரிமலையில் 2 நாளில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!!

சபரிமலையில் கடந்த 2 நாட்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனாலும் கூட்டம் இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து … Read more

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: 1,621 வேட்பாளர்களில் 139 பேர் மட்டுமே பெண்கள்

அகமதாபாத்: குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெறும் 139 பேர் மட்டுமே பெண்கள். 56 பேர் சுயேச்சைகள். 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். குஜராத் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 8.57% ஆக … Read more

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேர் கைது

அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 12 கூலி தொழிலாளர்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி பிரிவு போலீசார் அங்கிருந்த ஒரு லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதனை சோதனையிட்ட போது செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. 2 கார், … Read more

"முட்டாளே சாவர்க்கரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது"- ராகுலை சாடிய ராஜ் தாக்கரே!

சாவர்க்கர் மீது ராகுல் காந்தி விமர்சனம் வைத்திருந்த நிலையில், அதையொட்டி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார் மகாராஷ்ட்ரா நவிர்மன் சேனா-வின் தலைவர் ராஜ் தாக்ரே. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்ட போது, “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தந்தவாதியான சாவர்க்கர், ஆங்கிலேயர்களிடம் பென்ஷன்வாங்கிக்கொண்டு, காங்கிரஸ் போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்தார்” என்றார். மேலும் சாவர்க்கர் எழுதியதாக ஒரு கடிதத்தையும் காண்பித்தார் ராகுல். அதில் கடைசி வரியில், “ஐயா நான் உங்கள் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன். … Read more