உஷார் மக்களே!: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவ.16ம் தேதி உருவாகும்.. இந்திய வானிலை மையம் கணிப்பு..!

டெல்லி: தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடகடலோர தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக உள் மாவட்டங்கள், கேரளா வழியாக மேற்கு – வட மேற்கு திசையில் அரபிக்கடலை … Read more

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறு

68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டமன்றம் வரும் ஜனவரி மாதத்துடன் காலாவதியாக உள்ள நிலையில் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 55,74,793 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ள நிலையில் 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் தேர்தலை அடுத்து மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7,881 வாக்கு சாவடிகளில் 789 பதற்றமானவை என்றும், … Read more

இமாச்சலப் பிரதேச தேர்தல்.. வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற பிரதமர் மோடி, அமித் ஷா அழைப்பு

மாண்டி: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அழைப்பு விடுத்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலை 8 மணி தொடங்கி வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அவரது மனைவி சாதனா தாக்கூர், மகள்கள் சந்திரிகா தாக்கூர், பிரியங்கா … Read more

மோசடி கும்பல்களிடம் இருந்து 3,900 ஏக்கர் நதி நிலம் உபி.யில் அதிரடி மீட்பு

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில் கங்கை, ராம்கங்கை நதிகள் பெயரில் பதிவான ரூ.300 கோடி மதிப்பிலான 3,912 ஏக்கர் நிலம். நில மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் கங்கை நதி 15 கிமீ, ராம்கங்கை நதி 40 கிமீ தூரம் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ரஷீத் அலி நடத்திய ஆய்வில் ஜலாலாபாத், காலன் தாலுகாக்களில் கங்கை, ராம்கங்கை நதிகளின் பெயரில் கடந்த 1952ம் ஆண்டு நிலங்கள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் … Read more

என்னப்பா சொல்றீங்க..!! 1001 ரூபாய் விலைக்கு தங்க தோசையா..!!

சாதா தோசை, மசால் தோசை, கல் தோசை, பொடி தோசை, நெய் தோசை ,கறிவேப்பிலை தோசை, கொத்தமல்லி தோசை, புதினா தோசை என்று தோசையில் ஏகப்பட்ட வகைகள் உண்டு . இப்படி பலவகையான தோசைகளை உணவகங்கள் தயார் செய்து விற்பனை செய்து வரும் நிலையில் தங்க தோசை என்று அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒரு உணவகம் . இது உணவு பிரியர்களிடையே மிக வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த ஒரு தங்க தோசை ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடக … Read more

கியான்வாபி மசூதி வழக்கை விசாரிக்க தனி அமர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என்று புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட களஆய்வில், அங்குள்ள ஒசுகானாவின் (தொழுகைக்கு முன்பு முஸ்லிம்கள் கை, கால்களை சுத்தம் செய்யும் பகுதி) நடுவில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே கள ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் … Read more

பயணிகளுக்கு யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி: இந்திய ரயில்வே நிர்வாகம்

டெல்லி: இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய யுடிஎஸ் செல்லிடப்பேசி செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பயணிகள், ரயில் டிக்கெட் எடுக்கும் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, 20 கிலோ மீட்டருக்குள் இருக்கலாம். புறநகர்ப் பகுதி அல்லாத ரயில் நிலையங்களில், இதுவரை 2 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவு என்பது … Read more

பிரதமர் மோடி யோசனையில் உதித்தது காசி தமிழ்ச் சங்கமம் – சிறப்பு தகவல்களை பகிரும் நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி

புதுடெல்லி: ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையில் உதித்தது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி’’ என்று பல சிறப்பு தகவல்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அதன் அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக இருப்பது உத்தர பிரதேசத்தின் வாரணாசி. தெய்வீக நகரமான வாரணாசியுடன் பல நூற்றாண்டுகளாக தமிழகம் கொண்டுள்ள உறவு, பாரம்பரியம், கலாச்சாரத்தின் அடையாளமாக காசி தமிழ்ச் சங்கமம் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய அரசின் … Read more

இமாச்சலப்பிரதேசத்தில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ஒரேகட்டமாக 68 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

2 நாட்களில் 4 மாநிலங்கள்: பிரதமரின் சுற்றுப் பயணம்

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களில் 4 தென் மாநிலங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் ரூ.25,000 கோடி மதிப்பிலான பல்வேறு மெகா திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் தெற்கு கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்களில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். அப்போது, இந்தியாவை வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். … Read more