சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் – பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பெங்களூரு: சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை, பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனைய சேவையை பிரதமர் நரேந்திர‌ மோடி நேற்று தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் விதான சவுதாவுக்கு காரில் சென்று, அங்கு கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மாலை அணிவித்து மரியாதை … Read more

கட்டுப்பாட்டை இழந்த கார், சைக்கிள் மீது மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தகளி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சாபுவின் கார், உண்ணி என்பவரின் சைக்கிளில் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரியான சாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

ஜம்முவில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கப்ரென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். வீரர்கள் கொடுத்த பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த கம்ரான் பாய் என அடையாளம் … Read more

வரும் 14 முதல் 16-ம் தேதி வரை ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பாலி தீவுக்கு பிரதமர் பயணம்

புதுடெல்லி: இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சர்வதேச அளவில் நிதி, எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு, உதவிகள் செய்யும் நோக்குடன் ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென் கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் … Read more

குஜராத் தேர்தலில் போட்டியிடும் காங். வேட்பாளர்கள் 3ம் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின்  3வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் 43 பேர் அடங்கிய காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் 2வது பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இதில், 46 வேட்பாளர்களின் பெயர்கள் … Read more

திருப்பதியில் 5 லட்சம் பேர் விறுவிறுப்பு ரூ.300 தரிசன டிக்கெட் 80 நிமிடத்தில் விற்றது

திருமலை: திருப்பதியில் 5 லட்சத்து 6,600 பக்தர்கள் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை 80 நிமிடத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நேற்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. டிக்கெட் வெளியிட்ட உடனே பக்தர்கள் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால், 80 நிமிடங்களில் 5 லட்சத்து … Read more

காதலித்து திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணை நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்த காதலன்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சித்தார்த் நகரில் வசித்து வந்தவர் ஸ்வேதா விஜய் ரன்வாடே (26). இவருக்கும் ராஜ்குரு நகரை சேர்ந்த பிரதீக் கிசான் தாமலே என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணம் உடனே நடக்க வேண்டும் என்று பிரதீக் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்வேதா கால அவகாசம் கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஸ்வேதா திருமணம் வேண்டாம் என்று கூறியதையடுத்து, பிரதீக் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையே … Read more

கூட்டணியை மாற்றினாலும் பீகாரில் நிதிஷ் மீண்டும் முதல்வரானது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், காங்கிரஸ், ஆர்ஜேடி.யுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்றார். தற்போது, பீகாரில் மகாகத் பந்தன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து முஜாபர்பூரை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் எம்ஆர். ஷா, எம்எம். … Read more

அன்று குழந்தை நட்சத்திரம்… இன்று ஐஏஎஸ் அதிகாரி – உத்வேகத்தால் உதவி கலெக்டரான பெண்

மாண்டியா: கர்நாடக மாநிலத்தின் நெல் களஞ்சியமான மாண்டியா மாவட்டத்தில் இப்போது பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயர் கீர்த்தனா. இவர் மாண்டியாவின் புதிய உதவி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளவர். அதற்காக அவர் கொண்டாடப்படாவில்லை. அவர் சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகில் நிறைய படங்களில் நடித்தவர் என்பதும் மக்கள் அவரை கொண்டாடிவருவதற்கு காரணம். குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகின் ஜாம்பவான்களுடன் நடித்தது மட்டுமல்லாமல், கீர்த்தனா பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். அவர் சுமார் 32 படங்கள் மற்றும் 48 … Read more

உக்ரைன் மருத்துவ மாணவர்கள் எத்தனை பேர் பிற நாடுகளில் படிப்பை தொடர்கின்றனர்?: அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களில் எத்தனை பேர், ஒன்றிய அரசின் சிறப்பு சலுகையை பயன்படுத்தி பிற நாடுகளில் படிப்பை தொடர்கின்றனர் என்ற அறிக்கையை தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய ராணுவம் போர் தொடுத்ததால் அங்கு படித்து வந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இந்த போர் 8 மாதமாக தொடர்வதால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், இந்தியாவில் தங்கள் மருத்துவ படிப்பை அனுமதிக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் … Read more