15 ஆண்டுகளுக்கு மேலான அரசு வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புது டெல்லி: 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்கள் 2023 ஏப்ரல் முதல் அழிக்கப்படும் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கழகங்கள் வசமுள்ள பழமையான பேருந்துகளும் இதில் உள்ளடங்கும். கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் … Read more

ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த நல்வாய்ப்பு; பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி:‘ஜி-20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு. இதை உலகின் நலனுக்காக நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.ஒவ்வொரு மாதத்தி    ன் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடி வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான முக்கிய … Read more

பாரதியார் இல்லத்தை நினைவகமாக மாற்றுவது யார்? – உ.பி, அரசு தீவிரம்; தமிழக அரசின் முயற்சிக்கு சிக்கல்

புது டெல்லி: உத்தர பிரதேசம் வாரணாசியின் ஹனுமர் படித்துறை பகுதியில் பாரதியார் இளம் வயதில் வாழ்ந்த இல்லம் உள்ளது. ‘சிவமடம்’ என்றழைக்கப்படும் இங்கு பாரதியார் நான்கரை ஆண்டுகள் வாழ்ந்தார். தற்போது இந்த இல்லத்தில் பாரதியாரின் சகோதரி மருமகன் பி.வி.கிருஷ்ணன் (97), அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய், பாரதியார் வசித்த இல்லத்தை நினைவகமாக மாற்ற குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முழு வீட்டையும் அரசிடம் ஒப்படைக்க கிருஷ்ணன் … Read more

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வாகிறார். 58 வயதான இவர் சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.

`குழந்தைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்துகிறது பாஜக’- தேர்தல் ஆணையத்தை நாடிய காங்கிரஸ்!

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில், குழந்தைகளை ஈடுபடுத்துவதாக கூறி பாஜக மீது காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் `சிறு குழந்தைகளை வைத்து பாஜக பிரசாரம் செய்கிறது. குழந்தைகளை தவறான வகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர்’ என்று புகாரளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக சிறுமியொருவர் காணொளி வாயிலாக பாஜக-வுக்கு வாக்கு சேகரித்திருந்தார். அச்சிறுமியை அழைத்து, பிரதமர் மோடி நேரில் சந்தித்து தன் பாராட்டுகளை தெரிவித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அவற்றை குறிப்பிட்டு காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் … Read more

ஊழல் வழக்கில் கைதான அமைச்சருக்கு திஹார் சிறையில் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி: பாஜக தலைவர் நட்டா சரமாரி புகார்

புது டெல்லி: ‘‘திஹார் சிறையில் தனது அமைச்சருக்காக, ஆம் ஆத்மி கட்சி மசாஜ் சென்ட்டரை திறந்து வைத்துள்ளது’’ என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகார் தெரிவித்தார். டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சி எம்.பி. ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தொழிற்சாலைகள் நிறைந்த வசீர்பூர் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தனர். அப்போது நட்டா பேசியதாவது: ஊழலுக்கு எதிரான கட்சி என்று ஆம் ஆத்மி கூறிக் … Read more

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம்: அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

டெல்லி: கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திராப்பூரில் உள்ள பல்ஹர்ஷா ரயில் நிலையத்தில் புனே செல்லும் ரயில் வந்து நின்றது. அதில் ஏறுவதற்காக பயணிகள் ரயில்வே நடைமேம்பாலம் வழியாக அதிக அளவில் நடந்து சென்றனர். அப்போது நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் நடந்து சென்ற சிலர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து காயம் அடைந்தனர். காயம் … Read more

லேசான காய்ச்சல் ஏற்படும்போது ஆன்டிபயாடிக் மருந்துகளை தவிருங்கள்: மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

புது டெல்லி: உடலில் காய்ச்சல், சளி ஏற்படும்போது மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவர்கள் லேசான காய்ச்சல் ஏற்படும்போது தேவைக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. … Read more

பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள் மெகபூபா எச்சரிக்கை

ஸ்ரீ நகர்: ‘ஜம்மு காஷ்மீரில் இனிவரும் தேர்தல்களில் இளைஞர்கள் களமிறங்க வேண்டும். பாஜ.வுக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நேற்று ஸ்ரீநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:இந்தியா பாஜ.வுக்கு சொந்தமானதல்ல. அதற்கு சொந்தமாகவும் விட மாட்டோம். நாம் இணைந்திருக்கும் இந்தியாவானது ஜவகர்லால் நேரு, காந்திஜி, மவுலானா அப்துல் கலாம் ஆசாத்தால் இணைக்கப்பட்டது. இது இந்து முஸ்லிம் … Read more