குஜராத்தில் சீட் கிடைக்காத கோபம் பாஜவுக்கு குழிபறிக்கும் எம்எல்ஏக்கள்: சுயேச்சைகளை தூண்டிவிட்டு போட்டி 12 அதிருப்தியாளர்கள் 6 ஆண்டு நீக்கம்

சூரத்: குஜராத்தில் பாஜ சார்பில் போட்டியிட சீட் கிடைகாததால், கட்சிக்கு எதிராக குழிபறிக்கும் வேலையில் எம்எல்ஏக்கள் இறங்கி உள்ளனர். அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்ட 12 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

2வது நாளாக 50 இடங்களில் ரெய்டு தெலங்கானா அமைச்சர் மகனுக்கு மாரடைப்பு: வருமான வரித்துறை தாக்கியதாக குற்றச்சாட்டு

திருமலை: தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவரின் மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வருமானவரி அதிகாரிகள் தனது மகனை தாக்கியதாக மல்லரெட்டி குற்றம்சாட்டி உள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மல்லாரெட்டியின் வீட்டில் … Read more

தேர்தல் பிரசாரத்துக்கு தடை… ஆனா ஓட்டு போடாதவங்களுக்கு அபராதம்… இது எப்படி இருக்கு?

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு அனல் பறந்தவரும் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் … Read more

முல்லைப் பெரியாறு விவகாரம் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை  உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து உத்தரவிட்டதோடு, அணை தொடர்பான விவகாரங்களை அக்குழுவிடம் முறையிட வேண்டும் என்றும், இதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை … Read more

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு மனுத்தாக்கல்

புதுடெல்லி: தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார். காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து ஒன்றிய அரசு நீக்கியதால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த … Read more

‘அரிவாள்’ நோயில் இருந்து தப்பிக்க திருமணத்திற்கு முன் ரத்த ‘டெஸ்ட்’ கட்டாயம்: மத்திய பிரதேச ஆளுநர் வலியுறுத்தல்

நரசிங்பூர்: ‘அரிவாள்’ நோயில் இருந்து தப்பிக்க நரசிங்பூர் பகுதியினர் திருமணத்திற்கு முன் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் மத்திய பிரதேச ஆளுநர் வலியுறுத்தினார். மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், நரசிங்பூர் மாவட்டத்தில் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘அரிவாள் செல் நோய் என்பது பரம்பரை பரம்பரையாக வரும் மரபணு சார்ந்த நோயாகும். ரத்த சிவப்பணுக்களின் வழியாக இந்நோய் ஊடுருவுகிறது. ‘அரிவாள்’ போன்று (ஆங்கில எழுத்து ‘சி’ … Read more

குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்கிய பிரின்சிபல் – வைரலாகும் வீடியோ

மகாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திவிட்டு வகுப்பறையிலேயே பிரின்சிபல் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் மேக்லாத் பகுதியிலுள்ள பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மதுபோதையிலிருந்த பிரின்சிபல், சட்டையை கழற்றிய நிலையில், வகுப்பறையின் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ இணையங்களில் பரவிய நிலையில் பிரின்சிபல் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் பல கேள்விகளை எழுப்பி … Read more

மத்திய பிரதேச வனப்பகுதியில் புலிகள் மீது கற்கள் வீசுவதாக நடிகை புகார்: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

போபால்: வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சிலர் கற்களை வீசுவதாக நடிகை  ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ, மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சினிமா பட ஷூட்டிங்கிற்காக கடந்த வாரம் போபால் சென்றடைந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வான் விஹார் வனப்பகுதியில் வசிக்கும் புலிகள் மீது சுற்றுலா பயணிகள் கல் எறிந்து தாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக ரவீனா டாண்டன் வெளியிட்ட வீடியோ பதிவில், … Read more

"நான் ராமர், சந்திரபாபு ராவணன்" – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி பேச்சு

தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுவை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ‘இன்றைய ராவணன்’ என விமர்சித்துள்ளது பேசுப் பொருளாகி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், ’ என்டிஆரை முதுகில் குத்தி சந்திரபாபு நாயுடு எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதை மக்களுக்கு நினைவூட்டி, அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் நாளுமன்ற தேர்தலில் சந்திரபாபுக்கு பை பை … Read more

மாதம் ரூ.15,000 செலவு செய்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 கிளிகள் திருட்டு: குஜராத் போலீசார் வழக்குபதிவு

சூரத்: குஜராத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெளிநாட்டு கிளிகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத் அடுத்த ஜஹாங்கிர்புரா பகுதியில் விஷால் பாய் படேல் என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் பறவைகள் பண்ணையை நடத்தி வருகிறார். மற்ற பறவைகளுடன் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த இரண்டு கிளிகளையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த கிளிகள் இரண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் திருட்டு போனது. … Read more