ரயில்களில் சலுகை ரத்து செய்யப்பட்டதால் மூத்த குடிமக்கள் பயணம் 24% சரிவு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது.  ஆனால், கொரோனா காலத்துக்குப் பிறகு, அவர்களுக்கு இருந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் முதியோர்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாகப் அளித்த பதிலில், ‘ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டால் அது ரயில்வே துறையைக் கடுமையாகப் பாதிக்கும். ஆகவே, மூத்த … Read more

அரசு பங்களாவை காலி செய்ய மெகபூபாவுக்கு 2வது நோட்டீஸ்

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அரசு பங்களாவை 24 மணி நேரத்துக்குள் காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக விரைவில் சட்டப்பேரவை தேர்தல்நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்ய அம்மாநில நிர்வாகம் உத்தரவிட்டு வருகிறது. அனந்தனக் மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு மிகுந்த குப்கர் சாலையில் உள்ள … Read more

ஆந்திரா ரயில் நிலையத்தில் பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் உடமைகளுடன் கீழே இறங்கி அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. பின்னர்,  தீ மளமளவென எரிந்ததால், ரயில் நின்றவுடன் இதை பார்த்த பயணிகள் தங்கள் உடமைகளுடன் ரயிலில் இருந்து கீழே … Read more

மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறினால் வாக்குரிமையை பறிக்க வேண்டும்; ஒன்றிய அமைச்சர் அதிரடி

புதுடெல்லி: ‘மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்தை மீறுவோரின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசி உள்ளார். ஐநாவின் உலக மக்கள்தொகை கணிப்பின்படி, அடுத்த ஆண்டில் இந்தியா, சீனாவை பின்னுக்கு தள்ளி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறிவிடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார்.  … Read more

அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகிறது

புதுடெல்லி: அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுதொடர்பான சட்ட திருத்த மசோதாவை  வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை பெறவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரவும் பிறப்பு சான்றிதழ் ஓர் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. ஆனாலும், 1990ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களில் பலருக்கும் பிறப்பு … Read more

திருச்சானூரில் நாளை பஞ்சமி தீர்த்தத்துடன் பிரமோற்சவம் நிறைவு: தெப்பகுளத்தில் நீராட 3 இடங்களில் பக்தர்களுக்கு சிறப்பு மையங்கள்

திருமலை: திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் கடைசி நாளான தாயார் தோன்றிய பத்மசரோவரத்தில் (தெப்பக்குளத்தில்) நாளை  பஞ்சமி தீர்த்தம் நடைபெற உள்ளது.  இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்  புனித நீராட உள்ளனர். இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தலைமையில்   முதன்முறையாக  பக்தர்கள் தங்குவதற்கு  நவஜீவன் கண் மருத்துவமனை, … Read more

பெண் ஆசிரியரிடம் வகுப்பறையில் அத்துமீறிய மாணவர்கள் – பாய்ந்தது வழக்கு

உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியில் இருக்கும் பள்ளியின் வகுப்பு ஒன்றில், பெண் ஆசிரியரிடம் மாணவர்கள் தகாத முறையில் பேசியுள்ளனர். பள்ளியில் அந்த பெண் ஆசிரியர் நடந்து செல்லும் போதெல்லாம், ‘I Love U’ என்று கூச்சலிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அதனை வீடியோகவும் எடுத்து, அவற்றை போலி கணக்குகள் மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், அந்த ஆரிசியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, குறிக்கிட்ட அந்த மாணவர்கள் தகாத வகையில் மோசமான … Read more

6 பேர் கொல்லப்பட்ட விவகாரம்; அமித் ஷாவின் உருவ பொம்பை எரிப்பு: மேகாலயாவில் தொடர் பதற்றம்

கவுகாத்தி: அசாம் எல்லையில் 6 பேர் கொல்லப்பட்டத்தை கண்டித்து மேகாலயாவில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அசாம்-மேகாலயா எல்லையில் முக்ரோஹ் கிராமத்தில் அசாம் வனத்துறையினர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். அதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு வனக் காவலர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு மாநில எல்லைகளிலும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் மேகாலயாவுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என்று … Read more

சிறுநீரக கோளாறுடன் சிங்கப்பூர் பறந்த லாலு பிரசாத் யாதவ்… மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நல குறைவால் தொடர்ந்து அவதியுற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்தவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்ய இதனையடுத்து கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். ஆனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு சிபிஐ நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக அவர் 23 ஆம் … Read more

ஐஎஃப்ஏ மாத்திரைகள் சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி: மருத்துவமனையில் அட்மிட்

கவுகாத்தி: அசாமில் ஐஎஃப்ஏ மாத்திரைகள் சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் செயல்படும் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்களுக்கு உள்ளூர் சுகாதாரத் துறையின் மூலம் இரும்பு-ஃபோலிக் அமில (ஐஎஃப்ஏ) மாத்திரைகள் வழங்கப்பட்டன. அந்த மாத்திரைகளை மாணவர்கள் உட்கொண்டதால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ‘பாட்சாகு பிளாக் … Read more