மதுபான ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை மாற்றிய 34 பேர் யார்? அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்

புதுடெல்லி: டெல்லி அரசின் ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்காக 140 செல்போன்களை துணை முதல்வர் உள்ளிட்ட 34 பேர் மாற்றியதாக அமலாக்கத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் கலால் வரிக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கலால் … Read more

போஸ் கொடுப்பதற்காக பாம்பை பிடித்து ‘செல்பி’ எடுத்த வியாபாரி பலி: உத்தரபிரதேச கண்காட்சியில் சோகம்

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகர் அடுத்த ஜோகி நவாடா பகுதியை சேர்ந்த வியாபாரி தரம்வீர் என்பவர் குடும்பத்துடன் புடான் பகுதியில் நடந்த கண்காட்சியை பார்க்க சென்றார். அப்போது பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிக் கொண்டிருந்தார். அதைபார்த்த தரம்வீர், தான் அந்த பாம்பை பிடித்து பார்க்க வேண்டும் என்று பாம்பாட்டியிடம் கேட்டார். அவரும், பாம்பை அவரது கையில் பிடித்துக் கொடுத்தார். அதனை கையில் வாங்கிய தரம்வீர், தனது செல்போனை எடுத்து படமெடுத்து ஆடிய … Read more

ஸ்பீடு ஓகே தான்.. ஆனால்!! ஷாக் கொடுக்கும் வந்தே பாரத் ரயில் பயண கட்டணம்!

சென்னை ICF -ல் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் கடந்த வாரம் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ,பொதுமக்கள் பயணம் செய்வதற்கு முன்பு ரயிலை சோதிக்கும் விதமாக சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் சோதனை ஓட்டம் இன்று துவங்கியது. இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் திட்டம் ஏற்கனவே நான்கு வழித்தடங்களில் துவங்கப்பட்ட நிலையில், ஐந்தாவதாக சென்னை – மைசூர் இடையே இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி … Read more

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு!

ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8 ஆம் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு விபத்தில் பலியான ஒவ்வோரு குடும்பத்துக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரனை எதிர்த்து … Read more

பில்கிஸ் பானோவை கற்பழித்தவர்கள், நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள் என்றவருக்கு மீண்டும் வாய்ப்பு..!

கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது, முஸ்லிம் பெண்ணான பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்களைக் கொன்ற 11 பேரை விடுதலை செய்ய, குஜராத் அரசாங்கத்தால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினராக கோத்ரா தொகுதி எம்எல்ஏ சந்திரசிங் ரவுல்ஜி இருந்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மலர்கள் மற்றும் … Read more

கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் டிஸ்மிஸ்: கேரள அரசு அதிரடி நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னர் ஆரிப் முகம்மது கானை டிஸ்மிஸ் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் சமீப காலமாக மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களை நேரடியாக அவர் விமர்சித்து வருகிறார். தனது விருப்பத்திற்கு மாறாக செயல்படும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து விடுவேன் என்றும் எச்சரித்தார். சமீபத்தில் கேரளாவில் உள்ள … Read more

ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு – பரிதாபமாக உயிரிழந்த டிவி நடிகர்

ஆனந்த் சூர்யவன்ஷி என்ற தொலைக்காட்சி நடிகர் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஆனந்த் சூர்யவன்ஷி என்று அழைக்கப்படும் நடிகர் சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான க்குசும் (Kkusum), வாரிஸ் மற்றும் சூர்யபுத்ர கர்ண் ஆகியவற்றில் சித்தான்த் நடித்த பாத்திரங்களுக்காக, அவர் நன்கு அறியப்பட்டவர். அவர் கடைசியாக சோனி எஸ்ஏபி ஷோ ஜித்தி தில் மானே நாவில் காணப்பட்டார். அவர் இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி … Read more

ரூ.200 கோடி மோசடி வழக்கு..ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் நீட்டிப்பு..!

டெல்லி தொழிலதிபர்களை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார். மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நடிகை ஜாக்குலினிடம் பலமுறை விசாரணை … Read more

பீகாரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தில் பழ வியாபாரி உட்பட 6 பேர் விஷம் குடித்து தற்கொலை: தற்கொலை குறிப்பு கடிதத்தில் பகீர் தகவல்

நவாடா: பீகாரில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாததால் பழ வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் நவாடா நகரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பீகார் மாநிலம் நவாடா பகுதியில் வாடகை வீட்டில் பழ வியாபாரி கேதர் லால் (50), அவரது மனைவி அனிதா தேவி (47), மகள்கள் ஷப்னம் குமாரி (20), குடியா குமாரி (17), சாக்ஷி குமாரி (15), மகன் பிரின்ஸ் (16) ஆகியோர் வசித்து வந்தனர். கேதர் லாலின் … Read more