கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வர தீவிர ஆலோசனை: முதல்வர் பசவராஜ் பொம்மை

பெங்களூரு: கர்நாடகாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இது குறிப்பிடப்படுவது வழக்கமாக உள்ளது. கோவா மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்திலும், குஜராத்திலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான குழுக்கள் … Read more

நாய் குரைத்ததால் ஆஸ்திரேலிய பெண் படுகொலை; பஞ்சாப் நபர் கைது.!

வடக்கு ஆஸ்திரேலிய நகரான கெய்ர்ன்ஸ் பகுதியில் உள்ள குயின்ஸ்லேண்ட் கடற்கரையில், கடந்த 2018ம் ஆண்டு 24 வயதான பெண் சடலம் ஒன்று கிடைந்துள்ளது. விசாரணையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டோயா கோர்டிங்லே என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாராணை மேற்கொண்ட போது, மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. அதனால் கொலை வழக்கு கடந்த 4 வருடங்களாக விசாரணையில் நீடித்தது. குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து கொலையாளியை கண்டுபிடித்து தருவோருக்கு 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வெகுமதி … Read more

நீதித்துறையை மக்கள் அணுகும் நிலை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

டெல்லி: நீதித்துறையை மக்கள் அணுகும் முறை மாறி நீதித்துறை மக்களை சென்றடைய வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கொள்ளும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்; சட்டங்கள் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட விளிம்பு நிலை மக்களே காரணம் என்கிறார். மேலும் சட்டத்துறையில் ஒடுக்கப்பட்ட … Read more

டீசல் இல்லாமல் நின்ற 108 ஆம்புலன்ஸ்.. சிகிச்சையே கிடைக்காமல் நோயாளி இறந்த பரிதாபம்!

ஆம்புலன்ஸில் எரிபொருள் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல இருந்த நோயாளி உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியிருப்பது பல விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் இன்று நடந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக பலரும் கேள்விகளை முன்வைத்துள்ளனர். பன்ஸ்வாராவின் தனாப்புர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் 108 … Read more

“காலே இல்ல செருப்பு எதுக்கு?”… பாம்பை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!!

வட இந்தியா பகுதியில் பாம்பு ஒன்று செருப்பை கவ்வி செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீளமான பாம்பு ஒன்று ஒருவரது வீட்டிற்குள் நுழைய பார்க்கிறது. ஒரு பெண், தனது ரப்பர் செருப்பை அந்த பாம்பை நோக்கி தூக்கி வீசுகிறார். உடனே அந்த செருப்பை பாம்பு தனது வாயால் கவ்வி கொண்டு அந்த இடத்தை விட்டு … Read more

சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி-சி54 | வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ஓசன்சாட்

ஸ்ரீஹரிகோட்டா: புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 17 நிமிடத்தில் அதிலிருந்து பிரிந்த ஓசன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதிப்படுத்தினார். முன்னதாக, இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை காலை 10.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், சரியாக காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி – … Read more

குண்டர்கள் ஆட்சி வேண்டும் என்றால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்; அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்.!

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்தநிலையில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 … Read more

போலீஸ் எஸ்ஐ-யிடம் மோதல்; காங். மாஜி எம்எல்ஏ கைது: டெல்லி போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் போலீஸ் எஸ்ஐ-யுடன் தகராறு செய்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கானை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆசிப் கான், மாநில தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்தது. மேலும் அவர் ஷாஹீன் பாக் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக … Read more

அரசியல் சாசன தினம்: ஏன் இன்று கொண்டாடப்படுகிறது? – என்ன காரணம்; முழு விபரம்

அரசியல் அமைப்பு சட்ட தினம் இன்று கடைபிடிக்கப்படுகின்றது. இதற்கான நோக்கம் என்ன என்றும், இந்திய அரசியலமைப்பு சார்ந்த உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியமான வழக்கு ஒன்று குறித்தும், இன்றைய இந்தச் சிறப்பு தொகுப்பில் நாம் காண இருக்கின்றோம். 1949 நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனம் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமாகும். இந்தத் தினத்தை தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், அரசியல் சாசன தினம் என ஒவ்வொரு ஆண்டும் நாம் கடைப்பிடித்து … Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி ராக்கெட்!!

இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ‘ஓசன்சாட்03’ என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து சென்றது. இந்த ராக்கெட் பல்வேறு பயன்பாடுகளை கொண்டது. இதன் மூலம் கடலின் வெப்பநிலையை கண்டறியலாம். பல அளவீடுகளை முன்கூட்டியே அறிய முடியும். மேலும் கடல் பற்றிய … Read more