பெங்களூரு விமான நிலைய 2-வது முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

பெங்களூரு: சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச‌ விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் நரேந்திர‌ மோடி நாளை திறந்து வைக்கிறார். பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி பெங்களூருவில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், ஆளுநர் மாளிகை, முக்கிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 5-வதும், தென்னிந்தியாவின் … Read more

குஜராத் தேர்தல்: 160 பெயர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வியாழக்கிழமை வெளியிட்டது. டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியிலும், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜூரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். படேல் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஹர்திக் படேல் வீரம்காம் தொகுதியிலும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியிலும் … Read more

பெங்களூருவில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

பெங்களூரு: பெங்களூருவில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பெங்களூருவின் புறநகர் பகுதியான பொம்மசந்திரா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் ஒரு தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை தொழிற்சாலையில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதை பார்த்த அங்கிருந்த காவலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தீயை அணைக்க … Read more

பாஜக சார்பில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 27 ஆண்டுகளாக அங்கு அதிகாரத்தில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது. டெல்லி மாடல், பஞ்சாப் மாடல் ஆட்சியை முன்வைத்து குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது. நீண்ட காலமாக ஆட்சிக்கு வரமுடியாத காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் குஜராத் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார்..!

குஜராத் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார். மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் … Read more

வருமான வரித் துறையினர் நடவடிக்கை: தெலங்கானா மாநில அமைச்சர் வீடு, அலுவலகத்தில் சோதனை

ஹைதராபாத்: தெலங்கானா அமைச்சர் கங்குல கமலாகர் மற்றும் கிரானைட் வியாபாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். தெலங்கானா மாநில உணவு, சமூக நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்ட விரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 20 குழுக்கள்: இதனையொட்டி, நேற்று காலைஹைதராபாத், கரீம் நகர் ஆகியபகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப் … Read more

கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு: ஒன்றிய வரித்துறை அதிகாரிகள் தகவல்

டெல்லி: கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.55,575 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவதற்கான அடையாள எண்களில் 22,300 போலிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கூடங்குளம் அணுக்கழிவு விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அணுக்கழிவுகளை பாதுகாக்க கட்டமைப்பை உருவாக்கக் கோரிய வழக்கில், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை முறையான வகையில் பாதுகாத்து சேமிக்க உரிய கட்டமைப்பை உருவாக்கக் கோரியும்,  அதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை நிறுத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அணு உலைக்கு வெளியே பாதுகாப்பான கட்டமைப்பு ஏற்படுத்த கூடுதலாக … Read more

விவாகரத்து பெறும் நட்சத்திர ஜோடி?!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். ஆனாலும் இருவரும் தங்கள் நாட்டை தங்கள் விளையாட்டுகளில் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக சானியா டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார். இதனிடையே, சானியாவும் சோயப் … Read more

அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: வீதிகளில் மக்கள் தஞ்சம்..!

அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மேற்கு சியாங்கில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பாசரில் இருந்து 52 கிமீ வடக்கு மற்றும் வடமேற்கு தொலைவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி … Read more