குஜராத்தில் மக்கள் தவிப்பு ஒரே மாநகராட்சி வார்டுக்கு 4 எம்பி.க்கள், 5 எம்எல்ஏ.க்கள்: எல்லை குழப்பத்தால் ஒரு வசதியும் கிடைக்கவில்லை

அகமதாபாத்:  ஐந்து எம்எல்ஏ.க்கள், 5 எம்பிக்கள்  இருந்த போதிலும், ஒரு வசதியும் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். ஆச்சர்யமாக இருக்கிறது. உண்மைதான். குஜராத்தில்தான் இந்த விநோதம் அரங்கேறி வருகிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு வார்டுதான் லம்பா. 44 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கவுன்சிலாக கலு பர்வாத் என்ற சுயேச்சை இருக்கிறார். பெயருக்குதான் இவர் கவுன்சிலரே தவிர, இவரால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.  காரணம், லம்பா வார்டின் பெரும்பாலான பகுதிகள், … Read more

Gujarat Polls: தேர்தலில் நான் போட்டியிடவில்லை: மாஜி முதல்வர் விஜய் ரூபானி தகவல்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்து உள்ளார். குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் … Read more

திருப்பதியில் டிசம்பருக்கான தரிசனம் ரூ.300 டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை: திருப்பதியில் டிசம்பருக்கான ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.  கிரகணத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு … Read more

எனது செல்போன் ஒட்டுக்கேட்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகீர்!

தனது செல் போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக, குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். இதை அடுத்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த 2021 … Read more

உபி.யில் அசம்கானின் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் சதார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாக இருந்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அசம்கானுக்கு, வெறுப்பு பேச்சு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரின் எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அசம் கான் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த … Read more

Tirupati: ரூ.300 தரிசன டிக்கெட்; தேவஸ்தானம் சூப்பர் நியூஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் இலவச டோக்கன் மற்றும் ரூ.300 கட்டண டோக்கன் வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது. இந்த இலவச டோக்கன் மற்றும் ரூ. 300 கட்டண தரிசன டோக்கன்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில், மாதந்தோறும் ஆன்லைன் மூலம் … Read more

ஆசிரியர்கள் கண்டித்ததால் விபரீதம்!: பெங்களூருவில் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை..!!

பெங்களூரு: பெங்களூருவில் ஆசிரியர்கள் கண்டித்ததால் 14வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின், பள்ளியில் நடந்த தேர்வு ஒன்றில் காபி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை தந்ததாக தெரிகிறது. மனமுடைந்த மாணவன் மோஹின், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது நாகவாலா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி 14வது மாடியில் இருந்து குதித்தார். … Read more

மும்பை | கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம்

மும்பை: எதிர்பாராத அசம்பாவிதமாக தனது கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் பெண் மரணம் அடைந்துள்ளார். இந்த துயரம் கடந்த திங்கட்கிழமை அன்று மும்பை நகரின் விக்ரோளி பகுதியில் நடைபெற்றுள்ளது. அந்த பெண்ணின் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த 45 வயதான அவரது கணவர் பினு கோஷி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக சொல்லியுள்ளார். தொடர்ந்து அவரை அவரது குடும்பத்தினர் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். … Read more

காங்கிரஸின் துரோகத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது இமாச்சல மக்கள்; பிரதமர் மோடி பேச்சு.!

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இமாச்சலப் பிரதேச தேர்தலையொட்டி காங்கிரஸ் , பாஜக ஆகிய கட்சிகள் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்கனவே பாஜக ஆட்சி நடைபெற்று வரும் … Read more

புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத பிரதமர் மோடி!

டெல்லி: இன்று புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதவியேற்பு விழாவில் இருந்து, பதவியேற்பு விழாவை பிரதமர் மோடி தவறவிட்டதில்லை. இந்நிலையில் புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.