முதல்வர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ரோஜா நடனம்..!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். … Read more

ரூ.22,842 கோடி வங்கி மோசடி: ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி … Read more

சூட்கேஸில் இளம்பெண் சடலம்; தந்தையே சுட்டு கொன்றது அம்பலம்.!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 120 முதல் 150 ஆணவக் கொலைகள் நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கு, திருவாரூர் அபிராமி வழக்கு, நெல்லை கல்பனா வழக்கு, நாகப்பட்டினம் அமிர்தவள்ளி வழக்கு, கண்ணகி – முருகேசன் வழக்கு என ஆணவப் படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய அளவில் சாதிய ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆணவக் கொலைகளை தடுப்பது தொடர்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச … Read more

மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா; 71,000 பேருக்கு வேலை வழங்கும் பிரதமர் மோடி!

புது தில்லி: மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று விநியோகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள்.  மாபெரும் வேலை வாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு … Read more

இந்தியாவில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு..!

இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம்   தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு உள்ளது. இரண்டு மாநில கடற்பகுதிகளிலும் கடற்பகுதியில் வீசும் காற்று 12 முதல் 18 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய காற்றாலைகளை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த ஆய்வு நடைபெறுவதாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பிரிவுக்கான துணைத் தலைவர் அனில் பாட்டியா கூறி உள்ளார். காற் றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் … Read more

கர்நாடக மாநிலத்தில் யானை தாக்கி பெண் பலியானதால் சடலத்துடன் கிராம மக்கள் போராட்டம்: பா.ஜ.க., எம்.எல்.ஏ., மீது தாக்குதல்

கர்நாடகா : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் நடந்த போராட்டத்தை சமரசப்படுத்த சென்ற பா.ஜ.க., எம்.எல்.ஏ-வை பொதுமக்கள் ஆத்திரத்தில் அடித்து விரட்டி, சட்டையை கிழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலமுறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்பது கிராம மக்களின் குற்றச்சாட்டு. சிக்மகளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அவர்கள் பெண்ணின் சடலத்துடன் போராட்டம் நடத்தி … Read more

குஜராத் தேர்தல் | காங்கிரஸ் 125 இடங்களில் வெல்லும்: அசோக் கெலாட் நம்பிக்கை

சூரத்: “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறும்” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்ட … Read more

காதலியை 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய நபர்; போட்டு தள்ளிய போலீஸ்.!

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூர் கிராமத்தில், கிணற்றுக்குள் பெண் சடலம் கிடப்பதாக உள்ளூர்வாசிகள் கடந்த 15ம் தேதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தலை இல்லாமல் அரை நிர்வாணத்தில் துண்டு துண்டுகளாக கிடந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இதையடுத்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பிரன்ஸ் யாதவ் மற்றும் கொலை செய்யப்பட்ட ஆராதனா என்ற 20 வயது பெண்ணும் முன்னாள் … Read more

ஒடிஸாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் இறப்பு, 7 பேர் காயம்

ஒடிஸாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். ஜாஜ்பூர் மாவட்டம் கோரை ரயில் நிலையம் வழியாக டோங்கோபோசிலிருந்து சத்ரபூருக்கு சென்றுக் கொண்டிருந்த ரயில் அங்குள்ள சிறிய பாலத்தில் ஏறும் போது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டு ரயில் நிலையத்திற்குள் விழுந்தது. மேலும், அந்த பெட்டி ரயில் நிலையத்திற்குள்ளிருந்த காத்திருப்பு அறை, டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றின் மீதும் மோதி இடித்து தள்ளியது. இதில், 3 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதி அமர்வு  தீர்ப்பு அளித்ததை எதிர்த்து கட்சியின் ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் இரு நீதிபதிகள் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென அவர் கூறியிருந்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி  அமர்வு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. … Read more