தேர்தல் பத்திர விற்பனையில் திருத்தம் | தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது: மஹூவா மொய்த்ரா

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் விற்பனை திட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள திருத்தம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா புதன்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவ.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கூடுதல் நாட்களுக்கு தேர்தல் பத்திரம் விற்பனை செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குஜராத் மாற்றும் இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக … Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ஒய்.சந்திரசூட்: அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் டி.ஒய். சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் 10 நவம்பர் 2024 வரை இருக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் டிஒய் சந்திரசூட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி சந்திரசூட், கடந்த 10 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான பல முன்னணி … Read more

நீதிபதி சந்திரசூட்டிற்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீதிபதி டி.ஒய் சந்திரசூட்டுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரசூட் வரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை பொறுப்பு வகிப்பார். நீதிபதி சந்திரசூட்டின் தந்தை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் 16வது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். நீதித்துறை வரலாற்றில் … Read more

ஆர்.எல்.வி. விண்கலம் முதன்முறையாக விமானம்போல ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனைக்கு இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: மீண்டும் பயன்படுத்த கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் தரையிறங்க வைக்கும் சோதனையை இந்திய விண்வெளி ஆய்வு மையம் விரைவில் மேற்கொள்ள உள்ளது. மீண்டும் பயன்படுத்த கூடிய ஆர்.எல்.வி. விண்கலத்தை விண்ணில் ஏவி அதை கடலில் இறக்கும் சோதனையை இஸ்ரோ கடந்த 2016-ம் ஆண்டு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக ஆர்.எல்.வி. விண்கலத்தை ஓடுதளத்தில் விமானம் போல தரையிறக்கும் சோதனையை இஸ்ரோ விரைவில் மேற்கொள்ள உள்ளது. இந்த சோதனை கர்நாடகா மாநிலம் சித்ரதுங்கா மாவட்டத்தில் … Read more

`நாங்க, 20 வருஷத்துக்கு முன் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்’-நெகிழும் சகோதரிகள்!

2002-ம் ஆண்டு, ஒட்டிப்பிறந்த 6 மாத இரட்டை குழந்தைகளை, பாதுகாப்பான அறுவை சிகிச்சை மூலம் `பிரித்து’ அவர்களுக்கு புது வாழ்வு அளித்திருந்தனர், கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர்கள் குழு. மோனா-லிசா என பெயரிடப்பட்ட இந்த இரட்டையர்கள், இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாக்களும்கூட! மோனாவும் லிசாவும், தங்களின் சுவாரஸ்யமான வாழ்வை, கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளனர். அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இரட்டையர் அம்மாக்களான மோனா-லிசாவுக்கு, கடந்த மாதம்தான் 20 வயதாகியிருந்தது. கடந்த நவம்பர் … Read more

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு..!

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். இவர், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம் 11-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, டி.ஒய்.சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மாதம் 17-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக … Read more

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஷ்மீரில் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எம்எச்ஏ வெளியிட்ட அறிவிக்கை: தீவிரவாதிகளால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள், வருமானம் ஈட்டும் ஒரேயொரு நபரை இழந்த குடும்பங்கள், நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் கடுமையான காயம் அடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23 … Read more

ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரம் ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேரள அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் சூழலில் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவினை நிறைவேற்ற பினராயி … Read more

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டிஒய் சத்திரசூட் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராஷ்ட்டிரபதி பவனில் அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித்தின் பதவிக் காலம் நவ.7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் தன்னைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரைத்திருந்தார். திங்கள் கிழமையுடன் யுயு லலித்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து … Read more

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் படம்: காங். விமர்சனத்தை அடுத்து விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு நடத்தும் ஆணைய வலைதள பக்கத்தில் இருந்து தேர்வு எழுத நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்தனர். அப்படி பதிவிறக்க செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவரின் நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது., இந்த பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் … Read more