இது கதை அல்ல நிஜம்..!! ஒரு முழு ரயில் எஞ்சினையே களவாடிய பலே திருடர்கள்..!!

பீகார் மாநிலத்தில் வறுமை காரணமாக அம்மாநில மக்கள் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வேலை செய்து வருகின்றனர். உடம்பு வளைந்து வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய வாக்கு மூலத்தைக் கேட்டு போலீசார் ஆடிப்போயுள்ளனர். விசாரணையில், பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் … Read more

அவருக்கு வயசாயிடுச்சி… சந்திரபாபு நாயுடுவை வீட்டில் ரெஸ்ட் எடுக்க சொல்லும் ரோஜா!

ஆந்திர மாநிலம், குண்டூரில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் குப்பம் தொகுதி எம்எல்ஏவும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ அரசில் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜா பேசினார். அப்போது அவர், ‘ தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுப்பது அவருக்கும் நல்லது; மாநில மக்களுக்கும் நல்லது. அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் -இறால் … Read more

எம்எல்ஏ சீட் வாங்கி கொடுங்க… மோடியுடன் ‘செல்பி’ எடுக்க வேணும்! ‘ஹெல்ப்லைனில்’ அதிகாரிகளுக்கு டார்ச்சர்

ரேவா: முதல்வரின் ‘ஹெல்ப்லைன்’ எண்ணிற்கு எம்எல்ஏ சீட் கேட்டும், மோடியுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநில அரசின் சார்பில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்க முதல்வரின் ‘ஹெல்ப்லைன் எண்: 181’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் பலவித புகார்களை கூறிவந்த நிலையில், தற்போது விநோத புகார்களும், கோரிக்கைகளும் வருகின்றன. இந்த புகார்களில், தியோந்தர் தாலுகாவை சேர்ந்த ஜிதேந்திர மிஸ்ரா  என்பவர், ‘பிரதமர் மோடியுடன்  … Read more

டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பேரம் பேசிய வழக்கு; பாஜக தலைவரை விசாரிக்க தடை.!

பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில் இருப்பவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். பாஜகவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கேசிஆர். இப்படி ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் சந்திர சேகர ராவ். அதன்படி கொரோனா காலத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வந்தபோதும் அவரை வரவேற்க முதல்வர் கேசிஆர் செல்லவில்லை. சமத்துவத்துக்கான சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தபோது, அந்த நிகழ்ச்சியிலும் … Read more

சிறப்பாக வணிகம் செய்ய வேண்டுமா? ‘முக்தி’ நிலையில் இருங்கள்: வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை

“நீங்கள் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த விரும்பினால்,  நீங்கள் ‘முக்தி’ நிலையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்களிலும் முழுமையான ஈடுப்பாட்டோடும், அதேசமயம் அச்செயல்களில் சிக்கி போகாமலும் செயல் செய்ய வேண்டும்” என்று வர்த்தக தலைவர்களுக்கு சத்குரு ஆலோசனை வழங்கினார். ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில்  ‘ஈஷா இன்சைட்’ என்ற பெயரில் வர்த்தக தலைவர்களுக்கான தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது. முதல் நாளான நேற்று நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சத்குரு, … Read more

2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை; தமிழக அரசின் சார்பில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

புதுடெல்லி: வரும் 2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு பணிக்காக மாநில அமைச்சர்களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். இதனால் புதிய வரிகள் விதிப்பது, மாநிலங்களுக்கு வரிகளை கூடுதலாக வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் நடைபெறும் நிலையில், டிச. 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இமாச்சல் தேர்தல் முடிவுற்ற நிலையில், அம்மாநில தேர்தல் முடிவுகள் டிச. 8ம் தேதி … Read more

பாஜக இறுதி அஸ்திரம்; அடடா.. அப்ப வெற்றி கன்ஃபார்ம் தான்!

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக நடக்கும் இத்தேர்தலில், 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2வது கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறாக 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக … Read more

உடலுறவின் போது இறந்த நபர்… உதவிக்கு வந்த காதலியின் கணவர்

Bengaluru Crime: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் 67 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் கிடந்த 67 வயது ஆணின் உடலை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, அந்த மரணம் குறித்த விசாரணையில் குற்றாவாளியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “அந்த நபர் தனது கள்ளக்காதலியுடன் உடலுறவு கொள்ளும்போது திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாகத் தெரியவந்துள்ளது. போலிஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க … Read more

சூடுபிடிக்கும் கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை: உச்சநீதிமன்றத்தில் விரைவில் வழக்கு விசாரணை..!

பெங்களூரு: கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லை பிரச்சனை சூடுபிடித்துள்ள நிலையில் கர்நாடக பேருந்துகளில் மராத்தியில் எழுதும் போராட்டம் புனேவில் நடந்தது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு தரப்பிலும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்-ம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு கிராமத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என … Read more

மாதந்தோறும் 16 லட்சம் வேலை – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற சிஆர்பிஎஃப் நிகழ்ச்சியொன்றில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர்காெண்டபோதும், இந்தியா வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15-16 லட்சம் வேலைகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கொள்கைகளால் சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையும் மிக எளிதாகிவிட்டது. “முதலும், முடிவும் எப்போதுமே தேசம்தான் பெரிது” என்ற தாரக மந்திரத்தை இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் … Read more