பத்திரிகையாளர்களை அவமதிப்பதா..? – கேரள ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. இதற்கிடையே … Read more

கடுமையான காற்று மாசு பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தலைநகர்..!

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்பட்டதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு, போக்குவரத்து இயக்கத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், கடுமையான பாதிப்பு என்ற நிலையில் இருந்து சற்று மேம்பட்டு, மிகவும் மோசம் என்ற நிலைக்கு திரும்பியுள்ளது. அதாவது, காற்றின் தரக்குறியீடு 400 முதல் 500 என்பது கடுமையான பாதிப்பை குறிக்கும் நிலையில், தற்போது மிகவும் மோசம் என்பதை குறிக்கும் 300 முதல் … Read more

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கான இலச்சினையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். டிசம்பர் 1 முதல் ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா, 32 வெவ்வேறு துறைகளில் 200 கூட்டங்களை நடத்தும். ஜி20 உச்சி மாநாட்டிற்கான கருப்பொருள் மற்றும் இணையதளத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

2.5 ஆண்டுகளுக்கு பின் இந்திய கொரோனா எண்ணிக்கையில் நிகழ்ந்த மகிழ்ச்சிகர விஷயம்!

கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா உயிரிழப்பு ‘பூஜ்யம்’ நிலையை இன்று அடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்தியாவிலும் கோடிக்காணக்கானோர் பாதிக்கப்பட்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும் வந்தனர். தினசரி பாதிப்பு, உயிரிழப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில், இன்று வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் … Read more

நடைப் பயிற்சியின்போது மர்ம கார் மோதியதில் உளவுத் துறை முன்னாள் அதிகாரி உயிரிழப்பு

பெங்களூரு: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை முன்னாள் அதிகாரி ஆர்.என்.குல்கர்னி (83) மீது கார் ஏற்றி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ஆர்.என்.குல்கர்னி. முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவர், ரா அமைப்பிலும் பணியாற்றியவ‌ர். 23 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் உளவுத்துறை தொடர்பாக 3 நூல்களை எழுதியுள்ளார். மைசூருவில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் குல்கர்னி வசித்துவந்தார். மைசூரு பல்கலைக்கழகத்தின் மானச கங்கோத்ரி வளாகத்தில் கடந்த 4-ம் … Read more

புதுச்சேரி ஆரோவில்லில் வீட்டின் ரகசிய அறையில் இருந்து சிலைகள் மீட்பு

புதுச்சேரியில் அதி நவீனமாக கட்டப்பட்ட வீட்டின் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வெண்கலச் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். ஆரோவில்லில் ஜெர்மன் நாட்டினருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நடராஜ், அம்மன், சந்திரசேகரர் ஆகிய மூன்று சிலைகளும் சோழர் காலத்தை சேர்ந்தவை ஆகும். அந்த வீட்டில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தம்பதியான பாப்போ பிங்கல், மோனா ஆகியோரிடம் இதற்கான ஆவணங்கள் இல்லை. மேலும் இந்த தம்பதியினர் ஜெர்மனி நாட்டிற்கு சிலைகளை கடத்தினார்களா … Read more

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்த திட்டம்: லட்சக்கணக்கான சிறு,குறு ஆலைகள் மூடப்பட்டன

டெல்லி: பஞ்சாப் மாநிலத்தைச்ச் சேர்ந்த சுப்தேவ் தன்மகள் திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன் திருமணம் செலவுக்கு பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தைச் சேர்ந்த 75 வயது முதியவரான லக்ஷ்சுமி நாராயணா வங்கியில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து மரணம். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பல்கேலோதி என்ற விவசாயி உரம் வாங்க கையில் பணம் இல்லாததால் பூச்சிமருந்தைக் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த … Read more

`அடேய் கேமராமேன்…’- ஸ்மெல்ல வெச்சே சட்டையை கண்டுபிடித்தது பற்றி கலகலத்த அஷ்வின்!

பொதுவாக வெளியூர்களுக்கு நண்பர்களுடன் கூட்டமாக செல்லும்போது, ஒரேமாதிரி நாமும் நம்ம ஃப்ரெண்டும் ட்ரெஸ் வைத்திருந்தால், `எது நம்ம ட்ரெஸ்’ என்ற குழப்பம் நமக்கு வந்துடும். வெளியூர் ட்ரிப் கூட பரவாயில்லை… ஹாஸ்டல்ல தங்கும்போது இன்னும் மோசம். வெவ்வேறு டிரெஸ் என்றாலும்கூட, சில சட்டைகளையெல்லாம் பார்க்கும்போது `நம்ம ட்ரெஸ்தானா இது’ என்று, நமக்கே நம்ம ட்ரெஸ் மேல சந்தேகம் வந்துவிடும். அப்படியிருக்க, ஒரே மாதிரி ஆடை – அதுவும் கிட்டத்தட்ட 12 பேருக்கும் ஒரேமாதிரி ஆடையென்று இருக்கும்போது, அந்த … Read more

பயங்கரவாதத்திற்கான நிதி தடுப்பு நடவடிக்கை: இந்தியா தலைமையில் அடுத்த வாரம் டெல்லியில் சர்வதேச மாநாடு

புதுடெல்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகள் குறித்து ஆராய்வதற்கான சர்வதேச இரண்டு நாள் மாநாடு அடுத்த வாரம் புதுடெல்லியில் நடைபெற இருக்கிறது. ஃபைனான்ஷியல் இன்டெலிஜென்ஸ் யூனிட்ஸ் (Financial Intelligence Units – FIU) எனும் சர்வதேச அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி செல்லும் வழிகளை கண்டறிந்து தடுப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த அமைப்பு இந்த நோக்கத்திற்காக சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. இதன் முதல் மாநாடு கடந்த 2018-ல் பிரான்ஸ் … Read more

இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பெங்களூரு: இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் வழக்குகள் அதிகரிப்பதால், 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. காதல் என்ற பெயரில் தொடங்கி பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு வரை செல்லும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.