சினிமா பாடல் பயன்படுத்திய விவகாரம் காங். டிவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் உரிய அனுமதியின்றி கேஜிஎப்-2 திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்க கர்நாடகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபயணத்தை ராகுல் நிறைவு செய்துள்ளார். இதனிடையே, ராகுலின் கர்நாடக நடைபயணத்தின் வீடியோக்கள் காங்கிரஸ் … Read more

ஹேமந்த் சோரனுக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது அரசியல் ஆலோசகர் பங்கஜ் மிஸ்ரா, ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத் ஆகியோருக்கு சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்க குத்தகை வழங்கியதாக பாஜக இந்த ஆண்டு தொடக்கத்தில் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையை தொடர்ந்து பங்கஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் இருந்து வருகிறார். இது தொடர்பாக ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. … Read more

கேரள ஆளுநரால் பரபரப்பு 2 மலையாள டிவி சேனல்களுக்கு தடை

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கொச்சியில் ஆரிப் முகம்மது கான் பேட்டியளிக்கப் போவதாக பத்திரிகையாளர்களுக்கு கவர்னர் மாளிகையிலிருந்து தகவல் வந்தது. பேட்டிக்காக பத்திரிகையாளர்கள் கொச்சியிலுள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவி சேனல் உள்பட பட 2 டிவி சேனல் நிருபர்கள் வெளியேறுமாறு கவர்னர் கூறினார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் … Read more

10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட்டின் மாறுபட்ட தீர்ப்பு

பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது: நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் சினோ கமிஷன் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்த அறிக்கையை இப்போது சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோரின் (எஸ்சி) எண்ணிக்கை 7.74 சதவீதம் ஆகும். அதாவது அந்த சமுதாய மக்களில் … Read more

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு ஜார்கண்ட் முதல்வரின் மேல்முறையீடு மனு ஏற்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரில் சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டார் என்று பாஜ குற்றம்சாட்டியது. இதில் ரூ.100 கோடி மோசடி நடந்துள்ளது. எனவே, பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பாஜ கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து சட்டவிரோத சுரங்க குத்தகை ஒதுக்கீடு தொடர்பாக, சோரனின் … Read more

பதைபதைக்கும் வீடியோ..!! 19 வயது மாணவி கண் இமைக்கும் நேரத்தில் கிரேன் மோதி பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவ்பூர் பகுதியில் உள்ள ஒயிட் ஃபீல்டு – ஹோஸ்கோட் சாலை வழியாக கடந்த 2-ம் தேதி 19 வயதான மாணவி நூர் பிஜா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கிரேன் வாகனம் ஒன்று மாணவி மீது வேகமாக மோதியது. இதனால் நிலைகுலைந்த அந்த மாணவி கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தார். அந்த நேரத்தில் மோதிய கிரேனின் இடது பக்கமிருந்த முன்பக்க டயரானது மாணவியின் மீது … Read more

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு (ஓபிசி) 27%, தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்சி) 15%, பழங்குடியினருக்கு (எஸ்.டி) 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019-ல் நிறைவேற்றியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் … Read more

“இது நாங்கள் உருவாக்கிய குஜராத்” .. விமர்சிப்பவர்கள் தேர்தலில் காணாமல் போவார்கள் – பிரதமர் மோடி

குஜராத்தில் வெறுப்புணர்வை பரப்பும் சக்திகளும், குஜராத்தை அவமதிப்போரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது விரட்டியடிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வல்சாத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இது நாங்கள் உருவாக்கிய குஜராத் என்று புதிய முழக்கத்துடன் உரையை நிகழ்த்தினார் . கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும், குஜராத்தைப் பற்றிய அவதூறு பரப்புபவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று கூறிய பிரதமர், குஜராத்தில் பாஜக மீண்டும் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைத் … Read more

இன்று சந்திர கிரகணம் திருப்பதி கோயிலில் கருட சேவை ரத்து

திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி கோயிலில் இன்று கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சந்திர கிரகணத்தையொட்டி, இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனவே, அனைத்து தரிசனங்கள், சேவைகள் மற்றும் பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பிறகு கோயிலில் தோஷ நிவாரணம் பூஜைகளுக்கு பிறகு சர்வ தரிசனம் (இலவச டோக்கன் இல்லாத) பக்தர்கள் … Read more

என்னை அவமதிக்கிறார்: அர்ஜுன் மீது இளம் நடிகர் குற்றச்சாட்டு

ஐதராபாத்: அர்ஜுன் தன்னை அவமதிப்பதாக இளம் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் புகார் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த படத்தை தயாரித்து, அர்ஜுன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நடிக்க விஷ்வக் சென் என்பவரை தேர்வு செய்தார். ஆனால் படப்பிடிப்புக்கு விஷ்வக் சென் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ‘விஷ்வக் சென்னிடம் அர்ப்பணிப்பு குணம் இல்லை. அவர் படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றி விட்டார். அவர் கேட்ட … Read more