நாடு தழுவிய அளவில் இன்று நடக்க இருந்த வங்கி ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் நடவடிக்கை

புதுடெல்லி: அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இன்று நாடு தழுவிய அளவில் நடத்த இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கடந்த 1946ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து வங்கி ஊழியர்களின் பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. தொடர்ந்து 11 முறை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினிமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் … Read more

நிதின் கட்கரி தகவல் சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரை குறைக்க திட்டம்

புதுடெல்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். நாடு மழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள … Read more

சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்து சரியே; மகாத்மா காந்தியின் பேரன் ஆதரவு.!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்பி, “ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா அவர்களுக்கு தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் கொள்கைகளின் முன்னோடியாக கருதுகிறோம். ஆனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதி, ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் ஜி முன்னோடியாக இருக்கிறார்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் இந்து … Read more

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இவருடைய பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக ஓராண்டு பதவிக்காலம் … Read more

டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம்; பாஜக மூத்த தலைவருக்கு சம்மன் – தெலங்கானா அரசு அதிரடி.!

பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில், தற்போதைக்கு முதன்மையில் இருப்பவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். பாஜகவை வங்க கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கேசிஆர். இப்படி ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் சந்திர சேகர ராவ். அதன்படி கொரோனா காலத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வந்தபோதும் அவரை வரவேற்க முதல்வர் கேசிஆர் செல்லவில்லை. சமத்துவத்துக்கான சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தபோது, அந்த நிகழ்ச்சியிலும் … Read more

ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் தீவிரவாதத்தை அழிக்கும் வரை ஓயமாட்டோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்று டெல்லியில் நடந்த சர்வதேச தீவிரவாத ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்தார்.  தீவிரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்தில், தீவிரவாத நிதி தடுப்பு 3வது சர்வதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இதில், 70 … Read more

Gujarat Election 2022: வாக்காளர்களை கவர பாஜகவின் ஐடியாவை பாருங்க!

குஜராத் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, மத்திய் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதாலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் தேர்தல் என்பதாலும் குஜராத் மாநில பேரவைத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் , புதிதாக களமிறங்கி உள்ள ஆம் ஆத்மி என இத்தேர்தலில் மும்முனைப் போட்டி … Read more

பெண் தலைமை தேர்தல் ஆணையர் ஏன் இல்லை?..தேர்தல் ஆணையத்திற்கு பெண் ஆணையர்கள் நியமனம் முக்கியமானது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண் தலைமை தேர்தல் ஆணையரை கூட தேர்வு செய்ய இயலவில்லையா என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை சுதந்திரமான முறையில் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் … Read more

ஒரே சிறையில் 140 கைதிக்கு எய்ட்ஸ்; பாஜக ஆளும் மாநிலத்தில் பரபரப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தின் அண்டை மாவட்டமாக கிழக்கு டெல்லி உள்ளது. இங்குள்ள தஸ்னா சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று சுமார் 5500 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மாநில காவல் துறை மற்றும் சிறைத் துறை சார்பில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. அப்போது காய்ச்சல், காச நோய், எச்.ஐ.வி, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் குறித்து கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சிறையில் உள்ள 140 கைதிகளுக்கு … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது

டெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஒன்றிய வெளியுறவு அமைச்சக வாகன ஓட்டுநர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் சதி வலையில் வீழ்ந்த ஓட்டுநரை டெல்லி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்தியா குறித்த ரகசிய தகவல்களை ஓட்டுநர் பகிர்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது.