தீவிரவாதத்திற்கு நிதியுதவி கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில், பிரதமர் மோடி பேசுகையில், ‘தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது. இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை சந்தித்துவிட்டது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் இந்தியா தீவிரவாதத்தால் பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். இருந்தாலும் … Read more

ஆர்டர்லி முறை:கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சி.ஆர்.பி.எஃப். வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆர்டர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை … Read more

சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு கோவாவில் கண்காட்சி – 238 நிறுவனங்கள் பங்கேற்பு

பனாஜி: “சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி-2022” தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரத்தில் நேற்று தொடங்கியது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 238 புத்தாக்க நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும், 104 புதிய கண்டுபிடிப்புகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, போலந்து, ரஷியா, ஈரான், சவூதி அரேபியா, ஸ்பெயின், தாய்லாந்து, மக்காவ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 37 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து … Read more

மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் பங்களாவை இடிக்கும் பணி தொடக்கம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சட்ட விரோதமாக கட்டப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானே பங்களாவை இடிக்கும் பணி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சராக இருப்பவர் நாராயண் ரானே. இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் மும்பை ஜூகு கடற்கரை பகுதியில், 8 அடுக்குமாடிகள் கொண்ட ‘ஆதிஷ்’ பங்களா உள்ளது. இந்த வீடு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் விதியை மீறியும், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டுமான பரப்பளவில் … Read more

பயங்கரவாதத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும்  பாகிஸ்தானும்,  சீனாவும் ஆதரவு அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில்  தொடங்கி வைத்து பேசிய அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்காக செலவிடப்படும் நிதியை, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிடம் இருந்து பெற வழிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.    Source link

ராகுல்காந்தி நடைபயணத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கடிதத்தால் பரபரப்பு

மும்பை: ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப்பிரதேசத்தில் மர்ம நபர்கள் எழுதிய கடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடிதம் எழுதியவர்கள் யார்? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

”தவறான கேள்விக்கு க்ரேஸ் மார்க் கேட்ட பட்டியலின மாணவர்”-உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து உள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்

ஷேகான், மகாராஷ்டிரா: மாகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து காலையில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை சில மணி நேரங்கள் கழித்து ஷேகான் … Read more

ஒரு தாக்குதலைக்கூட பல தாக்குதல்களாக கருத வேண்டும்!: தீவிரவாதத்தை வேரோடு பிடுங்கும்வரை நமக்கு ஓய்வு என்பதே கிடையாது.. பிரதமர் மோடி சூளுரை..!!

டெல்லி: தீவிரவாதத்தை வேரோடு பிடிங்கி அழிக்கும் வரை நமக்கு ஓய்வு என்பதே கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். டெல்லியில் தொடங்கியுள்ள தீவிரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்கும் 3வது அமைச்சர்கள் மாநாட்டில் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். நீண்ட நாட்களுக்கு முன்பு நமது நாடு பயங்கரவாதத்தின் கோரத்தை சந்தித்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். பல பத்து ஆண்டுகளாக இந்தியாவை தீவிரவாதம் பல வடிவங்களிலும், பல பெயர்களையும் தாக்க முயற்சித்தது என்றும் கூறினார். ஒரு … Read more

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட்: ‘விக்ரம் எஸ்’ வெற்றிகரமாக ஏவப்பட்டது

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம் எஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஷன் பிரம்பா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விக்ரம் எஸ் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வானத்தை அலங்கரித்துள்ள விக்ரம் எஸ், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் … Read more