பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ்தான் காரணம்: ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த சட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது தங்கள் கட்சிதான் என தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு இறுகும் பிடி – அரசு தரப்பு சாட்சியாக மாறிய நண்பர்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் தினேஷ் அரோரா, அரசு தரப்பு சாட்சியாக மாறி உள்ளார். டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும், ஆட்சியிலும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருப்பவர் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக, துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரையின் அடிப்படையில், கடந்த … Read more

உயர்சாதிக்கு 10 % இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை காட்டுகிறது: காங். கட்சியின் மூத்த தலைவர் உதித்ராஜ் கருத்து..!!

டெல்லி: உயர்சாதிக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் எஸ்.சி. எஸ்.டி. கூட்டமைப்புகளின் தலைவர் உதித்ராஜ் கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, ஆனால் உச்சநீதிமன்றத்தின் உயர்சாதி மனோபாவத்தை எதிர்க்கிறேன். பட்டியலினம், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு பிரச்சனையின் 50 சதவீதத்தை மொத்த ஒதுக்கீடு தாண்டக்கூடாது என்றது உச்சநீதிமன்றம். இந்திரா சஹானி வழக்கை சுட்டிக்காட்டி, 50 … Read more

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஹிஜாப்பை எதிர்த்த கேரள பெண்கள்! இந்தியாவின் முதல் குரல்

ஈரானில், ஹிஜாப்பை முறையாக அணியவில்லை என்று 22 வயது மாஷா அமினி என்ற பெண் மீது அந்நாட்டு காவல்துறையில் நடத்திய தாக்குதலில், கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரழந்தார். இதனை தொடர்ந்து ஈரானில் போராட்டம் வெடித்தது. பெண்கள் தங்களது தலை முடியை வெடிக்கொண்டும், ஹிஜாப்பை எரித்தும் வீதியில் போராட்டதில் இறங்கினர். இதனை தொடர்ந்து காவல்துறையிக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வன்முறை போக்கும் நிகழந்தது. இன்றளவு தொடரும் ஈரான் போராட்டதில் இதுவரை 150-க்கும் அதிகமான போராட்டக்கார்கள் காணாமல் சென்றுள்ளனர். 277 … Read more

ஈரான் போராட்டத்திற்கு ஆதரவு: கேரளாவில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை எரித்து முழக்கம்

கோழிக்கோடு: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் முஸ்லிம் இளம்பெண்கள் சிலர் திரண்டு ஹிஜாபை எரித்து முழக்கமிட்டனர். கோழிக்கோடு மாவட்டம் டவுன் ஹால் அருகே திரண்ட 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ”ஹிஜாப் மூலம் பெண்களை அடிமைப்படுத்த வேண்டாம். ஹிஜாபிலிருந்து விடுதலை வேண்டும்” என்று கோஷமிட்டனர். தொடர்ந்து ஒரு நீளமான குச்சியில் மாட்டிவைக்கப்பட்டிருந்த ஹிஜாபுக்கு ஒரு பெண் தீ வைக்க, சுற்றியிருந்தவர்கள் … Read more

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் மீது போலீசார் தடியடி..!

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். அம்பேத்கர்நகர் மாவட்டத்தின் ஜலால்பூர் பகுதியில், அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிலை அமைந்திருந்த இடம் தொடர்பாக, தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயற்சித்தபோது, அவர்கள் மீதும், போலீஸ் வாகனங்களின் மீதும் பெண்கள் கற்களை வீசியதாக தெரிகிறது. இதனால் தடியடி நடத்தியதாக, போலீசார் தெரிவித்தனர். Source link

நடிகை அலியா பட் குறை பிரசவத்தில் குழந்தை பெற்றாரா?: நடிகர் கேஆர்கே பதிவால் பாலிவுட்டில் சலசலப்பு

மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் – நடிகை அலியா பட் ஆகியோர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நடிகை அலியா பட்டிற்கு நேற்று மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. திருமணமான 7 மாதத்தில் அலியா பட் குழந்தை பெற்றதால், பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே அலியா பட் கர்ப்பமாக இருந்ததாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் கமல் ஆர் கான் (கேஆர்கே) வெளியிட்ட … Read more

24 மணி நேரத்திற்குள் முதல் வேட்டை: ம.பி. வனத்தில் புள்ளிமானை புசித்த சிவிங்கிப் புலிகள்

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் குனோ தேசிய பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 சிவிங்கி புலிகள் (சீட்டா) வனப்பகுதியில் திறந்துவிடப்பட்ட நிலையில், அவை முதல் வேட்டையை நடத்தியுள்ளன. பூங்காவில் விடப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அவை புள்ளிமான் ஒன்றை வேட்டையாடி புசித்துள்ளன. ஞாயிறு இரவு அல்லது திங்கள் அதிகாலை நேரத்தில் இந்த வேட்டை நடந்திருக்க வேண்டுமென்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையில் பல வகைகள் உள்ளன. இதில் சீட்டா வகைகள் சிவிங்கி புலிகள் என்று அழைக்கப்படுகின்றன. கடந்த … Read more

'தைரியம் இருந்தா உள்ளே வாங்க..!' – கேரள அரசுக்கு ஆளுநர் ஆரிப் கான் எச்சரிக்கை!

கேரள மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் தொடக்கம் முதலே ஏழாம் பொருத்தமாக உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில், ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதற்கிடையே, கேரள மாநில அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி … Read more

கோழிகளை விழுங்கி, மக்காச்சோள வயலில் பதுங்கிய மலைப்பாம்பை மீட்ட நபர்..!

கர்நாடகாவில், வயலில் இருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. ஷிமோகா மாவட்டம் குஞ்சேனஹள்ளி பகுதியில், அதிகளவில் கோழிகள் காணாமல் போன நிலையில், விவசாயி ஒருவரின் மக்காசோள வயலில் மலைப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது. தகவலின்பேரில் வந்த ஊர்வன மீட்பாளர், சுமார் ஏழரை அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தார். Source link