சென்னை- மைசூர் “வந்தே பாரத்” ரயில் சோதனை ஓட்டம் வெற்றி..!

சென்னை- மைசூர் “வந்தே பாரத்” ரயில் சோதனை ஓட்டம், வெற்றிகரமாக நிறைவுபெற்றது. சென்டிரலில் இருந்து, இன்று அதிகாலை 5.50 மணிக்கு சோதனை ஓட்டத்தை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி மல்லையா தொடங்கிவைத்தார். சுமார் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணித்து, பிற்பகல் 12.30 மணிக்கு, ரயில் மைசூர் சென்றடைந்தது. தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் சேவையை, வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். Source link

மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி: சிவாஜி சிலை அருகே சிறப்பான வரவேற்பு அளிக்க காங்கிரஸ் திட்டம்

மும்பை: தெலுங்கானா மாநிலத்தில் நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று இரவு மராட்டியத்தில் தனது பயணத்தை தொடங்குகிறார். நாடு தழுவிய பாத யாத்திரையை ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் இன்று இரவு மராட்டிய மாநிலத்தில் 61-வது நாள் நடைப்பயணத்தை தொடங்க இருக்கிறார். இரவு 9 மணியளவில் தெலுங்கானாவில் உள்ள காமரெட்டியில் இருந்து மராட்டியத்தில் … Read more

அம்பேத்கர் சிலை உடைப்பு.. போராடிய பெண்கள் மீது போலீசார் சரமாரி தாக்கு..!

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த சிலை அடையாளம் தெரியாத நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதனால், ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் … Read more

ஆம் ஆத்மிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: துணைநிலை ஆளுநருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த உடனடியாக உத்தரவிடுமாறு துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராகவும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான், தங்களுக்கு எழுதிய முதல் … Read more

லக்னோவில் பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய போலீசார்: உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

லக்னோ: அம்பேத்கார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த அம்பேத்கர் சிலை மர்மநபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், போராட்டக்காரர்கள் … Read more

10% இடஒதுக்கீடு வழக்கு ஏற்பும் மறுப்பும் – உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு முழு விவரம்!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மூன்று நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு முறையை சரி என்றும் இரண்டு நீதிபதிகள் தவறு என்றும் தீர்ப்பு வழங்கினர். இதில் மிக முக்கியமான விஷயம் 10% இட ஒதுக்கீடு முறையை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் வழங்குவது … Read more

இமாச்சலில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜக

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக கூறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: இமாச்சலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு … Read more

யார் இந்த அரிய வகை ஏழைகள்? உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யாருக்கு லாபம்?

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி. பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. அதன்படி, 5 … Read more

மடத்தில் பயின்ற சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

கர்நாடகாவில் முருக மடத்தின் மடாதிபதி முருக ஸ்ரீ மீது, இரண்டாவது போக்சோ வழக்கு பதிந்த போலீசார், 694 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகமடத்தில் பயின்ற பத்திற்கும் மேற்பட்ட சிறுமிகளை, பாலியல் வன்புணர்வு செய்ததாக, முருக ஸ்ரீ உள்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது முருக ஸ்ரீ, பெண் வாடர்ன் உட்பட 4 பேர் மீது, டி.எஸ்.பி தலைமையிலான குழுவினர், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். Source link

ராஜஸ்தானில் கோலாகலமாக தொடங்கியது 'புஷ்கர் திருவிழா': சுற்றுலாப் பயணிகளின் கண்களை கவரும் மணற்சிற்பங்கள்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. கோட்டைகள், அரண்மனைகள், கலாச்சாரம், விதவிதமான உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானுக்கு கணிசமான வருவாய் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்கர் திருவிழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இதற்காக அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஏராளமான மணற் … Read more