ஜம்மு காஷ்மீரில் டிரோனில் இருந்து பணமழை: ஆயுதங்களும் வீச்சு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் எல்லைக்கு அப்பால் இருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 5-6கி.மீ. தொலைவில் உள்ள ராம்கர் மற்றும் விஜய்பூருக்கு இடையே காலை 6.15மணியளவில் பிஸ்டல், வெடிகுண்டுகள் மற்றும் பணம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து டெட்டனேட்டர்கள் சென்று ஆய்வு செய்தபோது, இரண்டு சீன துப்பாக்கிகள், … Read more

மங்களூர் குண்டுவெடிப்புக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது..!!

மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்பு உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்து … Read more

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் – இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில், ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியும்(37), அதில் பயணம் செய்த முகமது ஷரீக்கும்(24) காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 7 தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், முகமது ஷரீக்குடன் தொடர்பில் … Read more

டெல்லியில் புகழ்பெற்ற ஜூம்மா மசூதியில் பெண்களுக்கு தடை: கவர்னர் வேண்டுகோளை ஏற்று உடனடி வாபஸ்

புதுடெல்லி: டெல்லி ஜூம்மா மசூதியில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபடுவதற்கு தடை இல்லை என்று மசூதி இமாம் தெரிவித்தார். டெல்லியில் மிகவும் புகழ்பெற்ற ஜூம்மா மசூதி இருக்கிறது. இது வழிபாட்டு தலமாகவும் பழமை வாய்ந்த சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. தொழுக்கைக்காக பக்தர்களும், பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வருகிறன்றனர். இந்நிலையில் மசூதிக்குள் பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ வர அனுமதி இல்லை என்று மசூதியின் பிரதான நுழைவு வாயிலில் நோட்டீஸ் … Read more

கேரளாவில் போதை பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேர் குத்திகொலை: 2 பேர் படுகாயம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப்பொருள் விற்பனையை தடுத்ததால் 2 பேரை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம்,  தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷமீர் (40).  இவரது மகன் ஷெபில். கடந்த சில  தினங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் விற்க  முயன்றபோது அதை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்,  ஷெபிலை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த ஷெபில் தலச்சேரி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் … Read more

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டம்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

ஜெய்ப்பூர்: ‘டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் சட்டம் உருவாக்கப்படும்’ என்று ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலில் செய்தி என்பது ஒரு வழி தொடர்பாக இருந்தது. ஆனால் எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வளர்ச்சியால் செய்திகளின் தொடர்பு என்பது பன்முகத்தன்மையாகிவிட்டது. டிஜிட்டல் ஊடகங்கள் மூலமாக நாட்டில் எதோ ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வு கூட தேசிய அளவில் பிரபலமடைகிறது. டிஜிட்டல் ஊடகங்கள் வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. … Read more

மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: அனைத்து ஆலோசனைகள், விவாதங்கள் முடிந்த பின்னர் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது என  உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது, ‘அனைவருக்கும் பொதுவான  சிவில் சட்டம்’ பற்றி  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, ‘‘பாரதிய ஜன சங்கம் காலத்தில் இருந்தே தேர்தல் வாக்குறுதியில் பொது சிவில் சட்டம் பற்றி பாஜ … Read more

ஒடிசாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம், கப்ராகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜல் மகாதேவ் கோயிலுக்கு அருகே உள்ள காட்டில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்ததை கண்டறிந்த ஒடிசாவின் உயரடுக்கு சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் போலங்கிர் மாவட்ட தன்னார்வப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, மாவோயிஸ்ட் முகாமில் இருந்து … Read more

பயிர் காப்பீடு திட்டத்தில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம்: ஒன்றிய வேளாண் அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: மாறி வரும் பருவநிலை, தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு தயாராக இருப்பதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அகுஜா கூறியதாவது:இயற்கை சீற்றம் காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க பிரதமரின் பீமா யோஜனா பயிர் காப்பீடுத் திட்டம் கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பருவநிலை மாறுபாடு காரணமாக வேளாண் விவசாயிகள், பெருமளவில் … Read more

தட்டம்மை, ருபெல்லா வைரசை தடுக்க குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் 4 கோடி குழந்தைகள் தட்டம்மைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை’ என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவில் பீகார், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட் , மகாராஷ்டிராவில் தட்டம்மை, ருபெல்லாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.   இது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதார துறை இணை செயலாளர் அசோக் பாபு அனுப்பி உள்ள … Read more