திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தருக்கு மசாஜ் – பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம்

புதுடெல்லி: திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் … Read more

கர்நாடகாவில் பயங்கரவாத தாக்குதல்: காவல்துறை அதிர்ச்சி தகவல்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அதில் பயணம் செய்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் மங்களூருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பயணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் … Read more

இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மறைந்த நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன்,’ என்று பதிவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, … Read more

காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு நள்ளிரவில் வந்த தமிழர்களை ரயில் நிலையத்தில் வரவேற்ற மத்திய அமைச்சர்

புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் நள்ளிரவு வாரணாசி வந்த தமிழர்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரயில் நிலையம் சென்று வரவேற்றார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கார்த்திகை மாத முதல் நாளான நவம்பர் 17 முதல் ஒரு மாதத்திற்கு காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து காசி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட 3 சிறப்பு … Read more

மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல்: கர்நாடக டிஜிபி அறிவிப்பு

மங்களூரு: மங்களூருவில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என கர்நாடக டிஜிபி அறிவித்துள்ளார். மங்களூருவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் வெடிபொருள் நேற்று வெடித்து சிதறியது. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த பெங்களூருவில் இருந்து தனிப்படை மங்களூரு விரைகிறது. ஆட்டோவில் பயணித்தவர் கொண்டு வந்த சாக்கு முட்டையிலிருந்து வெடிபொருள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தராகண்டில் ஆழமான பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு

சாமோலி: உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் இருந்து 16 பேர்பல்லா ஜகோல் என்ற கிராமத்துக்கு நேற்று முன்தினம் சுமோ காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் இடமில்லாத நிலையில், அதன் கூரை மீதும் சிலர் அமர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஜோஷிமத் அருகே உர்கம் என்ற இடத்தில் சுமார் 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் சுமோ கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. தகவல் அறிந்து போலீஸாரும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த … Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: மத்திய அரசு சூப்பர் திட்டம்!

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்பிக்கும் சேவையை அஞ்சல் துறை வழங்குகிறது. மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் EPFO ஓய்வூதியம் பெறுவோர்களை 1 நவம்பர் 2022 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு்ள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை … Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு … Read more

தோற்ற வேட்பாளருக்கு ரூ.2.11 கோடி, கார் பரிசு: ஹரியாணா கிராம மக்கள் வழங்கினர்

ரோத்தக்: ஹரியாணாவில் கடந்த ஜூன் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ரோத்தக் மாவட்டம், சிரி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தரம்பால் என்பவர் போட்டியிட்டார். இவர் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தரம்பாலுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். கிராம மக்களால் அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரம்பாலை கவுரவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழாவை நடத்தினர். அப்போது கிராம மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.2.11 கோடி ரொக்கம் மற்றும் மஹிந்திரா … Read more

பட்டியல் இன பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!

தேசிய எஸ்.சி-எஸ்.டி மையத்தின் கீழ் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் டெல்லியில் நடத்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டிற்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தலைமை வகித்தார். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி தெரிந்து கொண்டு, அந்த நிறுவனங்களுடன் கலந்தரையாடும் … Read more