தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்

சென்னை: தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், பிஹாரிக்கள் மீதான அக்கறையில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பிரசாந்த் கிஷோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே … Read more

இந்த 26 லட்சம் பெண்களுக்கு மாத ஊக்கத்தொகை வராது… மாநில அரசு அதிரடி முடிவு!

Ladki Bahin Yojana: பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுக்கும் இந்த மாநில அரசின் திட்டத்தில் இருந்து 26 லட்ச பயனர்களின் பெயர் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குரேஸ்: ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் குரேஸ் செக்டாரில் நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குரேஸ் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் இதுகுறித்து சினார் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஊடுருவல் முயற்சி … Read more

“நீண்ட போர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: புதிய தொழில்நுட்பங்கள் போரின் தன்மையை மாற்றியமைத்துள்ளதால், குறுகிய மற்றும் நீண்ட போர்களுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வீரர்களின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் மட்டுமே இனி போதுமானதாக இருக்காது. சைபர் யுத்தம், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவையே எதிர்காலப் போர்களை வடிவமைக்க உள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் … Read more

“அரசியலமைப்பை காக்க குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்” – சுதர்சன் ரெட்டி

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல் வருகிறது என்று நான் நம்புகிறேன். … Read more

கேரளா பல்கலை.யில் திருநங்கைகளுக்காக விடுதி திறப்பு

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டத்​தில் மகாத்மா காந்தி பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் பயிலும் திருநங்கை மாணவர்​கள் தனி​யாக விடுதி கட்​டித் தர வேண்​டும் என நீண்​ட​கால​மாக கோரி வந்​தனர். இதையடுத்​து, அப்​பல்​கலைக்​கழக வளாகத்​தில் மாநிலத்​திலேயே முதல் முறை​யாக திருநங்கை மாணவர்​களுக்கு தனி​யாக தங்​கும் விடுதி கட்​டப்​பட்​டுள்​ளது. இதை மாநில சமூக நீதித் துறை அமைச்​சர் ஆர்​.பிந்து நேற்று முன்​தினம் திறந்து வைத்​தார். இதுகுறித்து திருநங்கை மாணவர் ஒரு​வர் கூறும்​போது, “நாங்கள் தங்குவதற்கு வாடகை வீடுகள் கிடைப்பது … Read more

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு: எவ்வளவு நெருக்கடி வந்தாலும் கவலையில்லை –  விவசாயிகளை காப்பேன் என பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ​நாட்​டில் உள்ள சிறு நிறு​வனங்​கள், விவ​சா​யிகளை பாது​காக்​கும் விஷ​யத்​தில் எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் கவலை​யில்​லை’’ என்று பிரதமர் நரேந்​திர மோடி உறு​தி​யாக தெரி​வித்​தார். உலக நாடு​களுக்கு அதி​கபட்ச வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். உக்​ரைன் மீது போர் தொடுத்​துள்ள ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக 25% வரியை அறி​வித்​தார். இதற்​கான உத்​தர​வில் நேற்று ட்ரம்ப் கையெழுத்​திட்​டார். இதையடுத்து அமெரிக்கா​வுக்கு இந்​தி​யா​வில் இருந்து ஏற்​றுமதி … Read more

வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது. காசி எனும் வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் வகையில் அங்கு காசி தமிழ் சங்கமங்கள் (கேடிஎஸ்) நடைபெறுகின்றன. தனது மக்களவைத் தொகுதி என்பதால் பிரதமர் நரேந்திர மோடியும் கேடிஎஸ் நிகழ்ச்சியை மத்திய, மாநில அரசுகளால் நடத்தி ஆதரவளிக்கிறார். எனினும், உ.பி.யின் இந்த புண்ணியத்தலத்தில் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு அமைப்பு … Read more

‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ – பிஹாரில் ஸ்டாலின் பேச்சு!

முசாபர்பூர்: ‘பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ என பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் … Read more

‘ஹெட்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை’ – உ.பி அரசின் புதிய பிரச்சாரம்!

லக்னோ: செப்டம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற மாநில அளவிலான சாலைப் பாதுகாப்பு பிரச்சாரம் நடைபெறும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச அரசு ‘ஹெல்மெட் இல்லையெனில் எரிபொருள் இல்லை’ என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் நிலையங்களில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, எரிபொருள் நிரப்பப்படாது. மாவட்ட ஆட்சியர்கள் சாலைப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு … Read more