பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்: அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்!

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டிருந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் … Read more

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10 ஆயிரம் பேர் தங்கும் விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளன என திருமலை தேவஸ்தான அரங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சூப்பாரெட்டி பேட்டியளித்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2014-க்கு பின் தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்க கூடாது என முடிவு செய்யப்பட்டதாக சுப்பு ரெட்டி தெரிவித்தார். திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை … Read more

இந்தியாவில் 5 ஜி சேவை: அக்.1இல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அன்று இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் … Read more

தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பிஎஃப்ஐ சதி திட்டம்: என்ஐஏ

கேரளா: தீவிரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) சதி திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். 15 மாநிலங்களில் 93 இடங்களில் … Read more

மாணவர்களுக்காக தனி ஆளாக பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர்: வைரலாகும் வீடியோ

தனி ஆளாக தனியார் பேருந்தை வழி மறித்த தலைமை ஆசிரியர் ஒருவரது வீடியோ வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் செய்தியாக பேசப்பட்டு, பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பஸ் பாஸ், அரசு பேருந்தில் அதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மூன்று மாத கால கட்டணம் செலுத்தி வாங்கப்படுகிறது. தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள … Read more

ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிய பயணியை சுத்தியலால் மீட்ட போலீஸ்..! தூக்கம் சுத்தமா முடிச்சி விட்டுரும்..!

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து தூக்க கலக்கத்தில் இறங்க முயன்ற இளைஞர் கால் தவறி விழுந்து ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள பெட்டான்சேரு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். கடந்த வியாழக்கிழமை இரவு ஹூப்ளி -விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்நாடகாவில் இருந்து நந்தியாலா வந்தார். ரயிலில் அவர் தூங்கி விட்ட நிலையில் அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தாண்டி வெள்ளிக்கிழமை காலை ரயில் கிட்டலூர் ரயில் … Read more

டெல்லி, ஹரியானா மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் கனமழை: இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி

டெல்லி : டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேச எல்லைகளில் பெய்து வரும் மழையால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த தொடர் மழையால் பேகம்பூர் கிராம … Read more

Video: நிலச்சரிவால் சரிந்துவிழும் பாறைகள் – உத்தரகாண்டில் பக்தர்கள் பாதிப்பு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழை காலங்களில், உத்தரகாண்டில் அடிக்கடி நிலச்சரிவு, மேகவெடிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படும். மேலும் , உத்தரகாண்டில் 50-க்கும் மேற்பட்ட புனித தலங்கள் இருக்கிறது. இதனால், அங்குள்ள புனித தலங்களுக்கு பக்தர்கள் யாத்திரையாக செல்வார்கள். இந்நிலையில், உத்தரகாண்டில் நேற்று பெய்த கனமழை காரணத்தால், மலையில் இருந்த பாறைகளின் பெரும் பகுதிகள் உடைந்து சரிந்ததில், ஆதி … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் மலையில் இருந்து பெரிய பாறை பெயர்ந்து விழுந்ததால் தவாகாட் லிபுலேக் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நஜாங் தம்பாம கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாறை பெயர்ந்து விழுந்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 40 பேர் திரும்ப முடியாமல் உள்ளனர். Source link

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை ஒட்டி கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கொட்டத்தை கட்டுப்படுத்த சோதனை முறையில் பிரமோற்சவம் , புரட்டாசி முடிந்து பல மாற்றங்களை புகுந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பலமணிநேரம் பக்தர்கள் ஓரே இடத்தில் காத்திருப்பதை தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வதரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செய்யப்படும். திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று … Read more