Breaking News: சிவ சேனா சின்னம் முடக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 40 பேருடன் கட்சியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்த முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர்களின் குழு, பாஜக இணைந்து, கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னவீஸ்சும் உள்ளனர். இந்நிலையில் மும்பை … Read more

ராஜஸ்தான்: அடுத்தடுத்து வெடித்த 6 சிலிண்டர்கள்.! விபத்தில் 4 பேர் பலி ; 16 பேர் படுகாயம்

ராஜஸ்தான் ஜோத்பூரில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. ராஜஸ்தான் ஜோத்பூரின் கிர்த்தி நகர் பகுதியில் ஒரே நேரத்தில் பல எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பல பேர் பலியாகியனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்குக் … Read more

தவறான ஸ்கேன் ரிப்போர்ட்டால் சிகிச்சையில் குளறுபடி – கர்ப்பிணி உயிரிழப்பு

சோனோகிராபி சென்டரில் தவறான ரிப்போர்ட் வழங்கியதால் சிகிச்சையில் குளறுபடி நடந்து கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்யாணில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை செய்து வந்தார். அப்போது மருத்துவரின் பரிந்துரைபடி அங்குள்ள ஒரு சோனோகிராபி சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார். அந்த ஸ்கேன் ஆய்வு முடிவில், ‘குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லை’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். அந்த … Read more

இருவரும் வாபஸ் பெறாததால் காங்கிரஸ் தலைமை தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்-மதுசூதனன் மிஸ்டரி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருவரும் மீட்பு மனுவை திரும்ப பெறாததால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என தேர்தலை நடத்தும் குழுவின் தலைவர் மதுசூதனன் மிஸ்டரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு விலகியதற்கு பிறகு அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்ற நீண்ட நாள் … Read more

கடந்த 40 ஆண்டுகளாக குற்றங்கள் நிகழாத கிராமம்: சான்றிதழ் வழங்கிய நீதிபதி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் கமாரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெகாட்லாப்பள்ளி என்ற கிராமத்தில், 180 குடும்பங்கள் கொண்ட 930 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த குற்றமும் நிகழவில்லை, வழக்குகள் இல்லாத கிராமம் என அறிவித்து, நீதிபதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

‘விரைவில் மனிதர்கள் நிலவில் குடியேறி விவசாயம் செய்யலாம்’ – மயில்சாமி அண்ணாதுரை

நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும் எனவும் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி ஆண்டார் வீதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் (CARE ACADEMY)பயின்று, PG TRB தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பணி ஏற்க இருக்கும் 85 ஆசிரியர்கள் மற்றும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு தீபாவளி தொகுப்பு; மாநில அரசு நச் அறிவிப்பு..!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் அக்., 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், 513 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 100 ரூபாய் மானிய விலையில் 1 கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவை கொண்ட தொகுப்புகளை வழங்க மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது. தகுதி பெற்றவர்கள் இந்த தொகுப்பினை 1.5 கோடி … Read more

மதம் மாறிய பட்டியலின மக்கள் பட்டியலினத்திலேயே தொடர்வது குறித்து ஆராய முன்னாள் நீதிபதி தலைமையில் 3 நபர் குழு அமைப்பு

டெல்லி: மதம் மாறிய பட்டியலின மக்கள் பட்டியலினத்திலேயே தொடர்வது குறித்து ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களை சேர்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரையறையை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது இந்தியாவில் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதேனிடையே மதம் மாறுவார்கள் பட்டியலினத்தில் இருந்து நீக்கப்படும் சூழல் இருந்து வரும் … Read more

'அயோத்தி, மதுரா கோயில்களில் குண்டு வெடிக்கும்' -பாஜக எம்.எல்.ஏ.வுக்கு வந்த மிரட்டல் கடிதம்

மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் … Read more

‘அக்னிபாதை’யின் கீழ் அடுத்த ஆண்டு முதல் விமானப்படையில் பெண்கள் சேர்ப்பு: விமானப்படை தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் ‘அக்னிபாதை’ திட்டத்தின் கீழ் பெண்களை சேர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி தெரிவித்தார். இந்திய விமானப்படை தினம் இன்று (அக்.08) கொண்டாடப்படுகிறது. 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. விமானப்படை தினங்களின் கொண்டாட்டமானது, தலைநகர் டெல்லிக்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் … Read more