’2 கி.மீக்கு 100 ரூபாயா?!’.. அதிகரித்த புகாரால் கர்நாடகாவில் ஓலா, ரேபிடோ, ஊபருக்கு தடை!

கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆன்லைன் ஆட்டோ வாகன சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் ஆட்டோ, கார் வாகன சேவைகளுக்கு தொடர்ந்து அதிகம் கட்டணம் வசூலிப்பதாக கர்நாடகாவில் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். சிலர் டிவிட்டரில் சம்பந்தப்பட்ட நிறுவங்களை நேரடியாக இணைந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் , சரியான பதிலும் கிடைப்பெறவில்லை. இருப்பினும் குறைந்த தூரங்களுக்கும், இந்த ஆட்டோ சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக … Read more

டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

பெங்களூரு: காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் யங் இந்தியா அறக்கட்டளைக்கு கைமாற்றப்பட்டதில் நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை சோனியா, ராகுல்காந்தி உள்ளிட் டோரிடம் விசாரணை நடத்தியது. இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று அதிகாலை தனது சகோதரரும் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே.சுரேஷூடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அமலாக்கத் துறை அதிகாரிகள் இருவரிடமும் தனித்தனியாக சுமார் 5 மணி நேரம் … Read more

பி.என்.ஜி. மற்றும் சி.என்.ஜி இயற்கை எரிவாயு விலை உயர்வு..!

ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படும் பி.என்.ஜி., மற்றும் குழாய் வழியாக பயன்படுத்தப்படும் எரிவாயுவான சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட நகரங்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை கிலோ 75 ரூபாய் 10 காசுகளாக இருந்த நிலையில் 3 ரூபாய் உயர்ந்து 78 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பி.என்.ஜி. உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருவதாகவும் … Read more

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது  பேருந்து மோதி தீப்பிடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நாசிக்கில் சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரித்தது. சில நொடிகளில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உ.பி.யில் டி-90 பீரங்கி பேரல் வெடித்து ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே பாபினா கன்டோன்மென்ட் பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி-90 பீரங்கி ஒன்றின் பேரல் வெடித்ததில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக பாபினாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும் 2 வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு அண்ணன், தம்பியிடம் ஒரே நாளில் குடைச்சல்: அமலாக்கத் துறை விசாரணை

பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அவரின் தம்பியும் எம்பி.யுமான சுரேஷிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் பரிமாற்றம் செய்ததில் முறைகேடு நடந்துள்ள புகாரில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதையேற்று நேற்று டெல்லி சென்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் … Read more

மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம்

புதுடெல்லி: மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்க கோரு வது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த போது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. முன்னாள் … Read more

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்? ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி தலைமை நீதிபதி யுயு.லலித்துக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது, வழக்கமான நடைமுறை. கடந்த முறை தலைமை நீதபதியாக இருந்த என்.வி.ரமணா, தான் ஓய்வு பெறும் முன்பாக தற்போதுள்ள … Read more

அதிரடி! ஓலா, ஊபர், ரேபிடோ-வுக்கு தடை!!

ஆன்லைன் வாடகை டாக்ஸி சேவையை அரசே மேற்கொள்ளும் வகையில் புதிய செயலியை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ஓலா, ஊபர், ரேபிடோ வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில், இது போன்ற நடவடிக்கையை எடுக்காமல் ஆன்லைன் வாடகை ஆட்டோ சேவையில் அதிக அளவிலான புகார்கள் வருவதால் கர்நாடகாவில் செயலிகள் மூலம் ஆட்டோ புக் செய்யும் சேவையைத் தடை செய்வதாக கர்நாடக போக்குவரத்துத் … Read more

வந்தே பாரத் ரயில் 2-வது நாளாக மாடு மீது மோதியதில் சேதம்

மும்பை: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. அகமதாபாத் அருகே நேற்று காலை 11.15 மணிக்கு இந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, எருமை மாடுகள் மீது மோதியது. இதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த பாகம் பிளாஸ்டிக் ஃபைபரில் தயாரிக்கப்பட்டது. இதனால் ரயில் இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் இந்த ரயில் காந்திநகர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மும்பை புறப்பட்டு … Read more