அப்போது ஊழியர்; இப்போது உலக பணக்கார பட்டியலில் இடம்… இந்திய வம்சாவளி பெண்ணின் சாதனை!

சமீபத்தில் 2022-கான IIFL Wealth Hurun இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் 336வது இடத்தை இந்திய வம்சாவளியான நேஹா நர்கெடே இடம் பெற்றுள்ளார். இந்திய-அமெரிக்கரான நேஹா, 2018ல் ஃபோர்ப்ஸின் இதழில் வெளியிட்ட உலகின் தொழில்நுட்பத்தின் சிறந்த 50 பெண்கள் பட்டியலிலும் இடப்பெற்றிருந்தார். மேலும் அமெரிக்காவில் சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் 57வது இடத்தில் உள்ளார். 37 வயதாகும் நேஹா, புனேவில் பிறந்தவர் ஆவார். புனே இன்ஸ்டிடியூட் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜி (PICT), புனே பல்கலைக்கழகம் மற்றும் … Read more

காங்கிரஸ் தலைவர் பதவி.. வெளியானது பரபரப்பு தகவல்..!

ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என்று கூறிவந்த அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.24-ம் தேதி) முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். வேட்புமனு மீதான பரிசீலனையும், வேட்புமனுவை வாபஸ் பெறுவதும் அக்டோபர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் … Read more

வட மாநிலங்களில் கனமழை: உ.பி.யில் மின்னல் தாக்கி 13 பேர் பலி; டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: வட மாநிலங்களில் கனமழை பெய்துவருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குர்கானில் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். டெல்லியிலும் கனமழை: டெல்லியில் நேற்று காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை 31.2 மில்லி … Read more

Congress President Election: காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட் போட்டி!

காங்கிரஸ் தலைவர் பதவி மீது ராகுல் காந்தி குடும்பத்திற்கு ஆசையில்லை எனவும், இதனால் அந்த பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி காரணமாக, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவராக பதவியேற்கும்படி … Read more

காஷ்மீர் வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவிப்பு

டெல்லி: அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தசரா விடுமுறைக்கு பின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார்.

வங்கி அட்டைகளுக்கு அடையாள எண்: ஏன், எதற்கு, எப்போது தெரியுமா..?

நவீன தொழில்நுட்ப வசதிகளின் வருகை, கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, அதிகரித்துள்ள இணைய சேவை வசதிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அதே வேளையில், இணையவழி பண மோசடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி, இணையவழி மோசடிகளால் 2019 – 2020-ம் நிதியாண்டில் 58.61 கோடி ரூபாயும், 2020 -2021-ம் நிதியாண்டில் ரூ.63.40 கோடி ரூபாயும் பண இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ‘அடையாள … Read more

என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு | கேரளாவில் பிஎஃப்ஐயின் கடையடைப்பு போராட்டத்தில் அரசுப் பேருந்து சேதம் 

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனைகளுக்கும், அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. “அதிகாலை முதல் அந்தி வரை” என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கியது. தீவிரவாதிகளுடன் தொடர்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், அதன் தலைவர்கள், நிர்வாகிகளின் … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி

வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. முதல் முறையாக ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு 81-ஐத் தாண்டியது. இது இந்திய நாணயத்தின் மிகவும் பலவீனமான அளவாகும். புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாயின் மதிப்பு அழுத்தத்தில் உள்ளது. விண்ணைத் தொடும் பணவீக்கத்திற்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் வீழிச்சியடையக்கூடும் … Read more

ஏழையிலும் ஏழையானவர்களுக்கு பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் சமத்துவமான அரசியலமைப்பா?: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு ஏழையிலும் ஏழையானவர்களுக்கு என்று கூறிவிட்டு உண்மையிலேயே பாதிக்கப்பட்ட சமூகங்களை புறக்கணித்தது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி  அமைத்த பிறகு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உடனடியாக அது அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி … Read more

தன்னுடைய ரத்தத்தை அளித்து ஓர் உயிரை காப்பாற்றிய நாய்..!

கர்நாடகாவில், உடல்நல பாதிப்பால் உயிருக்கு போராடிய நாய்க்கு மற்றொரு நாய் தன்னுடைய ரத்தத்தை தானமாக அளித்து அதன் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் பிரிவில் ஏராளமான நாய்கள் பணியாற்றி வருகின்றன. இதில், மாயா என்ற பெல்ஜியன் ஷெப்பர்ட் நாய்க்கு கடந்த வாரம் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தார்வாத்தில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை … Read more