ஆர்எஸ்எஸ்ஸின் ஏஜெண்ட் கவர்னர்; அரசியல் சதிகளின் கூடாரம் ராஜ்பவன்: பினராயி விலாசல்!

பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர்த்து அவர்களுக்கு சாதகமாக இல்லாத மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் அந்தந்த அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் குடைச்சல் கொடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்கள் இதற்கு சிறந்த உதாரணம். பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால் சுமூகமாக செல்லும் புதுச்சேரி அரசில் கடந்த ஆட்சியின் போது, நடைபெற்ற சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏஜெண்ட் என … Read more

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எவ்விதமான குற்ற நோக்கமும் இல்லை; அவர் மீதான 14 வழக்குகள் ரத்து: சிபிஐ அறிவிப்பு

டெல்லி: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில் எவ்விதமான குற்ற நோக்கமும் இல்லை என அவர் மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர்களின் சார்பாக ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் பலரிடம் நீரா ராடியா தொலைபேசியில் உரையாடியதாக சர்ச்சை புயல் கிளம்பியது. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பெரும் புள்ளிகளோடு நீரா ராடியா பேசியதாக வெளியான ஆடியோ இந்திய அரசியலையே உலுக்கியது. இந்த உரையாடல்கள் தொடர்பாக வருமானவரித்துறை … Read more

சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்: தலாய் லாமா

தரம்சாலா: சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவிலேயே இறக்க விரும்புவதாகவும், சீனாவில் இறக்க விரும்பவில்லை என்றும் தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு, அவரது சீடர்களும், அரசு அதிகாரிகளும் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அவர்கள், ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய தலாய் லாமா, … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்த அங்கப்பிரதட்சண டிக்கெட்கள்: பக்தர்கள் ஏமாற்றம்..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 5 நிமிடங்களிலேயே முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று கோயில் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இவை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்று முதல் 5ம் தேதி வரையும், வெள்ளிக்கிழமைகள் தவிர்த்தும் பிற நாட்களில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகளாகும். நாள் ஒன்றுக்கு 1500 டிக்கெட்கள் வீதம் வெளியிடப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | மும்முனைப் போட்டிக்கு வழிவகுக்கிறாரா திக்விஜய் சிங்?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் ஆகியோர் முடிவு செய்துள்ள நிலையில், இந்தப் போட்டியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் … Read more

கூட்டு பாலியல் வன்மொடுமை… நிர்வாணமாக நடந்த சிறுமி: மாண்ட மனிதநேயம்!

நள்ளிரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்ததாக உணரப்படும் என மகாத்மா காந்தி சொன்னார். அந்த சுதந்திரம் இன்று வரை பெண்களுக்கு எட்டாக்கணியாகவே இருக்கிறது. அவர்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. காந்தி சொன்னது போல, சிறுமி ஒருவர் நடு இரவில் நடந்து வந்துள்ளார். ஆனால், நகைகள் அணிந்து அல்ல; ஆடைகளின்றி நிர்வாணமாக. கேட்கவே பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் அரங்கேறியது உத்தரப்பிரதேச மாநிலத்தில். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் … Read more

நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; பாஜகவுடன் சமரசம் ஆக மாட்டேன்: லாலு பிரசாத் பேச்சு

டெல்லி: நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; ஆனால் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். 2024-ல் பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்; இறுதி வாதங்களின் விவரம்

புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது. கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த அம்மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் இஸ்லாத்தின் அடிப்படையான விஷயம் அல்ல. சீருடை விவகாரத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் … Read more

இந்து சிலையை தொட்ட தலித் சிறுவனுக்கு 60 ஆயிரம் அபராதம் – தாய் எடுத்த சபதம்

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ளது உல்லேரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். அதில், 80 சதவீதம் பேர் ஒக்கலிகா என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் உள்ள உயர் சமூக பட்டியலில் ஒரு வகை சாதிதான் இந்த ஒக்கலிகா. இதே கிராமத்தின் எல்லையில் பத்து பட்டியலின சமுகத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி கிராம மக்கள் பூதையம்மா திருவிழாவை நடத்தியுள்ளனர். ஆதிக்க சாதியினர் … Read more

'கூட்டு பாலியல் வன்புணர்வு' – ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக நடந்தசென்ற சிறுமி; 2 கி.மீ.,க்கு யாருமே உதவவில்லை

உத்தரப் பிரதேசத்தில் நம் மனதையே உலுக்கக்கூடிய ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமி, 5 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பின், 2 கி.மீ தூரம் உள்ள தனது வீட்டிற்கு ரத்தம் சொட்ட, சொட்ட நிர்வாணமாக சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.  இந்த சம்பவம் நிகழ்ந்து 15 நாள்களுக்கு பின், தற்போது அந்த பெண் சாலையில் நிர்வாணமாக நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 30 விநாடிகள் உள்ள … Read more