ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகள் மனு மீது பதிலளிக்க இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ்!

`உத்தர பிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதிக்குள் உள்ள சுவர்களில் இந்து கடவுள்களை வழிபட அனுமதி கோரி இந்து பெண்கள் தொடர்ந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது தான்’ என வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், இன்று மூல வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அதில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலையை வழிபட அனுமதி கோரி, … Read more

“கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை எனில், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் கொள்கிறோம்” – இது சோபம்மாவின் கதை

பெங்களூரு: “கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் கொள்கிறோம்” என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலினக் குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் உல்லேர்ஹல்லி மாவட்டத்தின் மலூர் தாலுகாவுக்கு உட்பட்டது கோலார் மாவட்டம். இது பெங்களூருவில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்கு சோபம்மா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சோபம்மா பட்டியலினத்தவர் நலன் சார்ந்த ஓர் அமைப்பிடம் அண்மையில் அளித்தப் பேட்டியில், “கடவுளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் அம்பேத்கரை வணங்கிக் … Read more

ராகுலின் அந்த கரிஸ்மா தான் காரணம்… பாரத் ஜோடோவில் அசர வைக்கும் கேரளா!

மத்தியில் ஆட்சிக் கட்டிலில் இருந்து காங்கிரஸ் இறங்கி 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் ராகுல் காந்தி கட்சி தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். மூத்த தலைவர்கள் பலரும் விலகி மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். பல மாநிலங்களில் பாஜக மற்றும் பிராந்திய கட்சிகளிடம் காங்கிரஸ் தோல்வி முகம் காணத் தொடங்கியுள்ளது. இனி காங்கிரஸ் அவ்வளவு தான் என்று பாஜக எண்ணிக் கொண்டிருக்கையில் இந்திய ஒற்றுமை பயணத்தை கையிலெடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் … Read more

ஞானவாபி வழக்கு: இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ்

லக்னோ: ஞானவாபி மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் புராதனத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுமதிக்கக்கோரிய வழக்கில் இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாரணாசி நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

நிர்வாணமாக 2 கி.மீ தூரம் அழுதபடியே சென்ற 15 வயது சிறுமி; உ.பியில் தொடரும் பாலியல் கொடூரம்!

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது. இத்தகைய கொடூரங்கள் நடப்பது மக்களை நடுநடுங்க வைத்து வருகிறது. இப்படி இருக்கையில், உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நிர்வாணமாக சாலையில் நடந்துச் சென்ற சிசிடிவி காட்சி ஒன்று காண்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 1 … Read more

மும்பை சிவாஜி பார்க்கில் தசரா பேரணி நடத்த சிவசேனாவின் இரு அணிகளுக்கும் அனுமதி மறுப்பு

மும்பை: மும்பை சிவாஜி பார்க்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிவசேனாவின் தசரா பேரணிக்கு, அக்கட்சியின் இரண்டு அணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒவ்வோர் ஆண்டும் மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் சிவசேனா கட்சி சார்பில் தசரா பேரணி நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் அம்மாநிலத்தில் நடத்த அரசியல் கொந்தளிப்பால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த கிளர்ச்சிக்கு பின்னர் சிவசேனா கட்சி … Read more

SDPI: அரசு முகமைகளை கைப்பாவையாக பயன்படுத்தி அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றும் பாஜக

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று அதிகாலையில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைசி கடுமையாக சாடியுள்ளார். தேசத்தின் வளர்ச்சியில் முற்றாகத் தோற்றுப்போய்விட்ட கேடுகெட்ட பாசிச ஆட்சி, ஆட்சியில் தங்களின் தோல்வியை மறைக்க நாட்டின் நிழல் எதிரியை உருவாக்குகிறது என்று எஸ்.டி.பி.ஐ தலைவர் குற்றம் சாட்டுகிறார்.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்களும், … Read more

மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்!: ஒன்றிய அரசு ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி:  மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக  ஒன்றிய அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகளில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் … Read more

குடும்பத் தகராறில் சோகம்.. மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலை..!

புதுச்சேரி அருகே, குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றதில் மாமியார், மருமகள் இறந்தனர். கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). இவரும், நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஆனந்த், மனைவி சந்தியா மற்றும் தாயார் … Read more

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) வழங்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடானது இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரம்பை மீறவில்லை. மேலும் இதில் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி, மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் மத்திய அரசு மூலம் கொண்டுவரப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் இதன்மூலம் பொருளாதார ரீதியாக பின் தங்கிய … Read more