ஆசிரியரின் அலட்சியம்! – 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கி தவித்த 7 வயது சிறுமி

சரியாக கவனிக்காமல் ஆசிரியர் வகுப்பறையை பூட்டிவிட்டுச் சென்றதால் 7 வயது சிறுமி ஒருவர் 18 மணிநேரம் வகுப்பறைக்குள்ளேயே சிக்கித்தவித்த சம்பவம் உ.பியில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தொகுதி கல்வி அதிகாரி போப் சிங் கூறுகையில், குன்னாவூர் தாலுகாவின் தானாரி பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் வகுப்புக்குள்ளேயே இருந்திருக்கிறாள். ஆனால் வகுப்பு ஆசிரியர் மாணவியை கவனிக்காமல் உள்ளேயே வைத்துப் பூட்டிச் சென்றுவிட்டார். … Read more

அரசு பள்ளியில் மதுபான பெட்டிகள் ..! – காவல் துறை சோதனையில் அதிர்ச்சி தகவல்..!

பீகாரில் அரசு பள்ளியில் 140 மதுபான பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மகளிருக்கு அளித்த வாக்குறுதியின்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுபான உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் போதைக்கு மக்கள் அடிமைகளாகி உள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் செயல்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக … Read more

தொழிற்சாலை தீ விபத்தில் 3 பேர் பலி

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் ரங்காச்சாரி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(65). இவரது மகன் டில்லிபாபு (35). இவர், பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். பாஸ்கர் பிளாஸ்டிக் பேப்பர், தட்டுகள், கிளாஸ்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் டில்லிபாபுவின் பிறந்த நாள் என்பதால் பெங்களூருலிருந்து தனது நண்பரான பாலாஜி (28) என்பவருடன் வீட்டிற்கு வந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். பின்னர், அனைவரும் வீட்டில் படுத்து தூங்கினர். இந்நிலையில், நேற்று … Read more

உ.பியில் பள்ளிக்குள் ஹாயாக படுத்திருந்த முதலை – தலைதெறிக்க ஓடிய மாணவர்களால் அதிர்ச்சி!

உத்தரபிரதேசத்தில் அரசுப்பள்ளி வளாகத்திற்குள் முதலையைக் கண்ட மாணவர்கள் பீதியடைந்து ஓடியதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். காசிம்பூர் கிராமத்திலுள்ள பள்ளியில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி திவாகர் வாஷிஷ்த் கூறுகையில், ’’காலை பள்ளிக்குச் சென்றதும் வளாகத்தின் உள்ளே முதலை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கூச்சலிட்டு, ஓடியுள்ளனர். உடனடியாக ஆயுதங்கள் மற்றும் தடிகளுடன் அங்குவந்த கிராம மக்கள் முதலையை ஒரு ஓரமாக விரட்டி, வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர். பின்னர் மாவட்ட அதிகாரிகள் மற்றும் … Read more

ஆளுநர் அடித்த அந்தர் பல்டி… ஆளுங்கட்சி செம அப்செட்!

பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களில் ஆபரேஷன் திட்டத்தை அரங்கேற்றி, ஆட்சியை கவிழ்க்கும் வித்தையை காட்டி வருகிறது பாஜக. சில மாதங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, உத்தவ் தாக்கரேவை முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கி, அந்த இடத்தில் ஏக்நாத் ஷிண்டேவை அமர்த்தி அழகுப் பார்த்தது பாஜக. அதே பாணியில் பீகாரிலும் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சிக்கு முடிவுகட்ட முயற்சித்தது தாமரைக் கட்சி. சுதாரித்துக் கொண்ட … Read more

தலைவர் பதவி தேர்தல்; காங்கிரசில் குழப்பம் நீடிப்பு: ராகுல் முடிவு தெரியாமல் தொண்டர்கள் திணறல்

* அசோக் கெலாட், சசி தரூர் இடையே கடும் போட்டி புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள நிலையில், ராகுல் தொடர்ந்து மவுனம் காப்பது கட்சித் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், அசோக் கெலாட், சசிதரூர் இருவரும் போட்டியிட தயாராகி உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். பின்னர், இடைக்கால தலைவராக … Read more

வாழைப்பழத்தை தராமல் ஏய்த்த பாகன் – தூக்கிப்போட்டு மிதித்தே கொலைசெய்த யானை!

தனக்கு வாழைப்பழம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் யானை ஒன்று பாகனை தூக்கிப்போட்டு மிதித்து கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் செயோனி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செயோனி தலைநகரிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள ரஹிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பரத் வாசுதேவ். இவர் ஹீரா என்ற பெண் யானையை வைத்து ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார். அதுபோல் ஒரு ஊருக்குச் செல்லும் வழியில், வாழைப்பழங்களை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் … Read more

தொலைகாட்சிகளில் வெறுப்பு பேச்சு..! தொகுப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் அட்வைஸ்..!

தொலைகாட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் வெறுப்பு பேச்சு தடுக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. பொதுவாகவே பல தொலைகாட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அதில் சில நிகழ்ச்சிகளில் பெரும் சர்ச்சையாகும் வகையில் சிலர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது சமூகத்தில் வைரலாக பரவி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக அமைகிறது. இது சமூக ஊடகங்களிலும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் நோக்கில் உச்சநீதி மன்றம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. … Read more

தெலங்கானா, ஆந்திரா ரெய்டு விவகாரம்: ‘உபா’ சட்டத்தின் கீழ் 4 பேர் கைது; தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை

ஐதராபாத்: தெலங்கானா, ஆந்திராவில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில் உபா சட்டத்தில் 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு முன் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 38 இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற அமைப்புக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், நான்கு குற்றவாளிகளை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட சையத் யாஹியா சமீர், ஃபெரோஸ் … Read more

ஆலோசனை கூட்டத்தில் ஆவேசமாக பேசி ஆவணங்களை தூக்கி எறிந்த பெண் வட்டாட்சியர்!!

மைசூருவில் நிவாரண நிதி பற்றிய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளிடம் பெண் வட்டாட்சியர் ஆவேசமாக பேசி ஆவணங்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகம் மாநிலம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. அதுபோல் மைசூருவிலும் தொடர் கனமழை பெய்ததால் ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் எச்.டி.கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு … Read more