நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மரணம்; உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட நெஞ்சு வலி காரணம்?

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் 40 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, இந்நி திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும்போது மயங்கி கீழே விழுந்தார். உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராஜுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைக் கோள்களை அக்.22-ல் செலுத்துகிறது இஸ்ரோ

சென்னை: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் அக்.22-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக் கோள்களை செலுத்த முடியும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை செலுத்தலாம். இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (New Space India Limited) நிறுவனம் 2 ராக்கெட் ஏவுதலுக்கு புரிந்துணர்வு … Read more

நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவிப்பு

நீரா ராடியா மீதான 14 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஐ அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது தொழிலதிபர்கள் சார்பில் ஒன்றிய அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக வருமான வரித்துறை 14 வழக்குகள் பதிவு செய்து முதற்கட்ட விசாரணை தொடங்கியது. இந்நிலையில் நீரா ராடியா மீதான வழக்குகளை சிபிஐ  ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்திருந்த உணவு விநியோகம் – உத்தர பிரதேசத்தில் விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம்

சஹாரன்பூர்: உத்தர பிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த உணவு விநியோகிக்கப்பட்ட வீடியோ வெளியானதையடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் அடங்கிய பாத்திரங்கள் சிறுநீர் கழிக்கும் கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதனருகே ஒரு பேப்பரில் பூரிகளும் இருந்துள்ளன. அங்கிருந்து வீராங்கனைகள் உணவு எடுத்து வரும் வீடியோ சமூக ஊடகத்தில் … Read more

அடம் பிடிக்கும் அசோக் கெலாட் – டஃப் கொடுக்கும் சச்சின் பைலட்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், ராகுல் காந்தி போட்டியிட மறுத்து விட்டார். அவரை சமாதானம் … Read more

டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1 வரை தடை

டெல்லி: டெல்லி அரசு பட்டாசுக்கு விதித்த தடையை எதிர்த்த வழக்கு மாநில உயர்நீதிமன்றத்தில் அக்.7-ல் விசாரணைக்கு வர உள்ளது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படக்கூடும் என செப்.7-ல் மாநில அரசு பட்டாசுக்கு தடை விதித்தது. டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1 வரை அரசு தடை விதித்துள்ளது.

10 நாட்களில் 2 மாணவர்கள் தற்கொலை: பஞ்சாபில் வெடித்த மாணவ போராட்டம்

பஞ்சாபில் லவ்லி புரொபஷனல் என்ற பல்கலைக்கழகத்தில் மாணவ போராட்டங்கள் வெடித்துள்ளது. லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 நாட்களில் 2 தற்கொலைகள் நடந்துள்ளன. இதைத்தொடர்ந்து அங்கு மாணவ போராட்டங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தற்போது கட்டுப்படுத்தி உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 21 வயதான அக்னி எஸ் திலீப், டிசைனிங் பட்டப்படிப்பு படித்துவந்தார். திடீரென்று ‘’ தனிப்பட்ட பிரச்னைகளை’’ தொடர்வதால் தற்கொலை செய்து கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் … Read more

நீண்ட காலமாக அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருக்கும் சமூக விலக்கு வழக்கு: விரைவில் முடிவு 

புதுடெல்லி: தாவூதி போரா சமூகத்தின் “சமூக விலக்கு” நடைமுறை குறித்த வழக்கின் இறுதி விசாரணை அக்.11ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக அரசியல் சாசன அமர்வில் நிலைவியிலுள்ள இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, 1986ம் ஆண்டின் இந்த வழக்கை அக்.11ம் தேதி இறுதி விசாரணைக்காக ஒத்திவைத்து வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும், … Read more

கர்நாடக மாநிலத்தில் நடந்த தீண்டாமையின் உச்சம்; நடந்தது என்ன?

பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சமூக சீர்திருத்தவாதிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இந்தச் சமூகத்தில் சாதியை ஒழிப்பதற்காகப் போராடியுள்ளனர். தற்போது 21ஆம் நூற்றாண்டு நடந்துவரும் நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பங்கள் வெகுவாக வளர்ந்த போதிலும் இந்தச் சாதி ஒழிந்தபாடில்லை. இந்தகாலத்திலும் சில பழமையான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதியை ஒரு அடையாளமாகப் பின்பற்றி வருகிறார்கள். அதன்படி கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் தீண்டாமை இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் … Read more

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரச்சாரம்

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 40 சதவீத அரசு ஒப்பந்தங்களை பெற முதலமைச்சருக்கு நேரடியாக பணம் செல்லுமாறு, அவரின் புகைப்படத்தை நகர் முழுவதும் பே.டி.எம். கியூ ஆர் கோடு வடிவில் ஒட்டி பிரச்சாரம் செய்துள்ளனர்.