இரண்டாம் உலகப் போர் காலத்தில் குழிக்குள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு அழிப்பு; மணிப்பூரில் மக்களிடையே பீதி

இம்பால்: மணிப்பூரில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டை மக்கள் கண்டறிந்ததால், அவற்றை அதிகாரிகள் குழு அழித்தது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜப்பானியப் படைகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா மீது படையெடுத்தன. அவர்கள் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து பகுதியை தங்களது போர் தளங்களாக பயன்படுத்தினர். வெடிகுண்டுகளை ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் கிழக்கு மணிப்பூரில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட இடத்தை தோண்டும்போது அங்கு பழங்கால வெடிகுண்டு மட்கிய நிலையில் இருப்பதை பார்த்து … Read more

சட்டவிரோத கும்பலின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உதவி கோரி வீடியோ வெளியீடு

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு அடிமைப்படுத்தப்பட்டு, தாக்கியும், துன்புறுத்தியும் கஷ்டப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து தனியார் ஏஜெண்ட்டுகள் மூலம் பலர் ஐ.டி. வேலைக்காக துபாய் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணி இல்லை எனக்கூறி அங்கிருந்து தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கேயும் பணி இல்லை எனக் கூறி அவர்களை அங்கும் இங்குமாய் அலைக்கழிக்கப்பட்டுனர். மேலும் கொடுமையாக தாக்கப்பட்டும், சட்டத்திற்கு எதிராக … Read more

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் பள்ளிக் கட்டிடம் மீது கையெறி வெடிகுண்டு வீசிய சம்பவத்தால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் நேற்று மர்ம நபர்கள் கையெறி வெடிகுண்டு வீசியதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் உயிருக்கு பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்த பாரக்பூர் போலீசார், கையெறி குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர். … Read more

தோல்வி பயத்தால் பாஜக எங்களை நசுக்கத் துடிக்கிறது: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் பாஜக ஆம் ஆத்மியை நசுக்கப் பார்க்கிறது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடந்தது. இதில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அமோக வரவேற்பு உள்ளது. இதனை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே ஆம் ஆத்மி அமைச்சர்கள், தலைவர்கள் மீது … Read more

ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்! ஓணம் லாட்டரியில் 25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி

திருவனந்தபுரம்: கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் முதல் … Read more

மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க ராஜஸ்தான் காங். தீர்மானம்; அசோக் கெலாட் பின்வாங்கியதால் பரபரப்பு

ஜெய்ப்பூர்: மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்  என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தலைவர் பதவி போட்டியில் அம்மாநில அசோக் கெலாட் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் அக். 17ம் தேதி தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. ஏற்கனவே ராகுல்காந்தி தலைவர் பதவியை கடந்த … Read more

லேடீஸ் ஹாஸ்டலில் மாணவிகள் குளிக்கும் வீடியோ லீக்..! – பிரபல நடிகர் கண்டனம் ..!

சண்டிகர் பல்கலைக்கழகத்தின் லேடிஸ் ஹாஸ்டலில் மாணவிகள் குளிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகர் சோனு சூட் ட்விட்டரில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி , கல்லூரி விடுதியில் உள்ள பாத்ரூமில், கேமரா வைத்து, அங்கு குளிக்கும் மாணவிகளின் வீடியோ பதிவு செய்து, அதனை தனது ஆண் நண்பனுக்கு அனுப்பி வந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் … Read more

137 கி.மீ தூரத்திற்கு காஷ்மீரில் மின்சார ரயில் சேவை; காந்தி ஜெயந்தியன்று தொடக்கம்.! இந்திய ரயில்வே அதிகாரிகள் தகவல்

காஷ்மீர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 137 கி.மீ தூரத்திற்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர், இந்திய ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகியவை இணைந்து கடந்த 2019 முதல் பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் மின்சார ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிட்டதட்ட 137 கி.மீ தூரத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், வரும் 26ம் தேதி ஆய்வுப் … Read more

2வது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்த மனைவி; மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரி தாக்குதல்

திருமலை: தன்னை விட்டு பிரிந்து 2வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கி செருப்பு மாலை அணிவித்தார். தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் காந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் காந்த்க்கு வரதட்சணையாக ₹20 லட்சம் கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு காந்த் மனைவியை விட்டு … Read more

மியன்மார் மாஃபியா கும்பலின் பிடியில் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவிப்பு!

தமிழர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு மாஃபியா கும்பல்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர்களை மீட்க தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாய்லாந்து நாட்டில் வேலை ஏற்படுத்தி தருவதாக கூறி பின்னர் அவர்களை மாஃபியா கும்பல் மியான்மர் நாட்டுக்கு கடத்துகின்றன என்பதால் இந்த இரு நாட்டு அரசுகளின் துணையோடு இவர்களை மீட்க தொடர் முயற்சி நடைபெறுவதாக வெளிவரவுத்துறை அதிகாரிகள் புதிய தலைமுறைக்கு தகவல் … Read more