2000, 500, 200… ரூ.8 கோடி மதிப்புள்ள நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை!

ஆந்திராவில் புகழ் பெற்ற வாசவி கன்யாக பரமேஸ்வரி தேவி கோயில் 135 ஆண்டுகள் பழமையான கோவில். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வரும் பாரம்பரிய நிகழ்வு எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஷேச நாட்களில் கோவிலை மலர்களால் அங்கலரித்து நாம் பார்த்திருப்போம் ஆனால் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்திருந்தால்? பார்ப்பவர்களில் கண்களைக் கவரும் வகையில் இக்கோவிலில் தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் கோவிலின் சுவர் முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோயிலில் அம்மனுக்கு நவராத்திரி … Read more

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!!

12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் சிறுவன் அந்த சிறுமியை தனியே ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட … Read more

திருமணம் நடக்காததால் ஆத்திரம்… பூசாரியின் காதை கடித்த இளைஞர்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மி காந்த் சர்மா என்பவருக்கு விபுல், அருண் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் நீண்ட காலம் திருமணம் தள்ளிச் சென்றுள்ளது. இதனால் மன வருத்தம் அடைந்த லக்ஷ்மி காந்த் சிலரின் அறிவுரையை அடுத்து, வீட்டில் பூஜை நடத்த ஏற்பாடு செய்தார். மகன்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்ற நோக்கில் ராஜஸ்தானின் கோட்டா என்ற பகுதியைச் சேர்ந்த குஞ்ச்பீகாரி சர்மா என்ற புரோஹிதரை அழைத்து தனது வீட்டில் பூஜை செய்துள்ளார். பூஜை … Read more

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை – சிறுவர்களின் விளையாட்டுக்கு மோடி பாராட்டு

புதுடெல்லி: சமஸ்கிருத மொழியில் கிரிக்கெட் வர்ணனை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் வைரலாகியுள்ள சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் குறித்த எத்தனையோ வீடியோக்கள் வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. எனினும், பழமையான, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியில் வர்ணனை செய்யப்பட்ட கிரிக்கெட் வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். பெருங்களூருவில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் வீதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிரிக்கெட் விளையாட்டை சிறுவன் … Read more

தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தையும் வாக்காளர்களிடம் விளக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்

டெல்லி: அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தையும் வாக்காளர்களிடம் விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதியாக அளித்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என கூறி வழக்கு 3 … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள கர்நாடகா செல்லும் சோனியா காந்தி

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி திங்கள் கிழமை கர்நாடக செல்கிறார். அக்.6-ம் தேதி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைக் கடந்த தற்போது பாஜக ஆளும் கர்நாடகாவில் நடந்து … Read more

ஓ மை காட்… பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி; மேலும் 11 பேர் கதி?

உத்தரகண்ட் மாநிலத்தில் கர்வால் இமயமலையின் கங்கோத்ரி மலைத்தொடர் திரவுபதி தண்டா-2 உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த தனியார் மலையேறும் நிறுவனத்தை சேர்ந்த 29 பேர் இன்று திடீரென பனிச்சரிவில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகம் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அதிரடியாக களம் இறங்கியது. மாவட்ட நிர்வாகத்துடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும், ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, இந்திய விமான படையின் 2 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. … Read more

நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்களை இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: நவராத்திரி, தீபாவளி விழாவை ஒட்டி நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட்: பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி! 8 பேர் மீட்பு! எஞ்சிய 11 பேர் கதி என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று காலை 9 மணி அளவில் நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 34 பயிற்சியாளர்கள் மற்றும் 7 பயிற்றுனர்கள் உட்பட மொத்தம் 41 பேர் பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் அந்தக் குழு சிக்கியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், … Read more

“ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” – பசவராஜ் பொம்மை

பெங்களூரு: “ராகுல் காந்தி ஒரு போலி காந்தி” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ஒரு ஊழல் அரசு என்றும், 40 சதவீத கமிஷன் வாங்கும் அரசு என்றும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின்போது ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதனை பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமே ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். கர்நாடகாவில் … Read more