பெரிதாக பேசுபவர்களிடம் தொலைநோக்கு இல்லை – எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள்தான் பெரிதாக பேசுவார்கள், அவர்களால் குடிநீர் பாதுகாப்பு போன்ற பெரிய தொலைநோக்குடன் பணியாற்ற முடியாது’’ என எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கோவா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்ட நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடந்தது. இந்தத் நலத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாவது: நாட்டை முன்னேற்ற நீண்ட கால அணுகுமுறை தேவை. நாட்டை பற்றி கவலைப்படாதவர்களால் மிக பெரிதாக பேச மட்டும்தான் முடியும். அவர்கள் நிறைய … Read more

கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் இல்லை; அடுத்த 3 – 4 நாட்களில் நான் கைது செய்யப்படலாம்: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கம்..!!

டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த மணீஷ் சிசோடியா, அடுத்த 3, 4 நாட்களில் அமலாக்கத்துறை என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார். சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். துணை முதல்வர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். … Read more

'2024 தேர்தலில் பாஜகவுக்கு நேரடி போட்டி ஆம் ஆத்மி தான்' – மணிஷ் சிசோடியா பேட்டி

புதுடெல்லி: சிபிஐ-யால் இன்னும் இரண்டு – மூன்று தினங்களில் தான் கைதாகலாம் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த … Read more

வாட்டிய தனிமை! 59 வயது தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்!

வாழ்க்கையில் அனைவருக்கும் துணை தேவைப்படுகிறது. தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது. இதை புரிந்துகொண்ட ஒரு மகள் செய்துள்ள ஒரு நெகிழ்வான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், … Read more

உ.பி. மதுராவில் கோயில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணன் கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியாயினர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டின்போது நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி இறந்தனர். 

உத்தரகாண்டில் மேக வெடிப்பு: அதிகாலையில் கடும் வெள்ளப் பெருக்கு; மக்கள் பாதிப்பு

உத்தரகாண்டில் ராய்பூர் – குமால்டா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”உத்தரகாண்டில் ராய்பூர் – குமால்டா பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக சாங் நதியில் கட்டப்ப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. சுற்றுலா தளங்கள் பலவற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் … Read more

பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படாது – இரயில்வே துறை

இந்திய ரயில்வேயின், டிக்கெட் வழங்கும் பிரிவான ஐஆர்சிடிசியின் டிஜிட்டல் தரவுகளை பணமாக்குவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தனிப்பட்ட தரவுகள் தனியாருக்கு அளிக்கப்படும் என வெளியான தகவலுக்கு ரயில்வேத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையின் டிஜிட்டல் தரவுகளை விற்று ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்த இரயில்வே துறை, ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு உட்பட்டு பொதுவான தரவுகளை ஆய்வு செய்து பணமாக்கல் திட்டத்துக்கு உதவும் வகையில் தற்போதைய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக … Read more

ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல அனுமதி

ஸ்ரீநகர்: ஜம்முவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் திரிகுடா மலை உச்சியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ரியாசி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

கனமழை, நிலச்சரிவு: இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள சர்கெட் என்ற கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு தாக்கமாக அதன் அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் … Read more

'26/11 தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்' – மும்பை காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து எச்சரிக்கை

மீண்டும் 26/11 போன்ற தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று மும்பை காவல்துறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆயுதங்களுடன் ஒரு கப்பல் ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிலையில், இந்த வாட்ஸ் அப் எச்சரிக்கை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்கட்டில் ஒதுங்கிய கப்பல்: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு … Read more