மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு ; டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்பட 21 இடங்களில் சோதனை

மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சோதனை நடத்தியது. சில கலால்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அரசு மட்டுமே மதுபானக் கடைகள் நடத்தும் என்று புதிய மதுபானக் கொள்கையை அறிவித்த சிசோடியா, பின்னர் அதனை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். சிசோடியாவிற்கு நெருக்கமான நபர் நடத்தும் … Read more

கேரள முதல்வரின் செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி: நியமனத்தை நிறுத்தி ஆளுநர் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக் கழகத்தில் மலையாளம் இணை பேராசிரியர் பணிக்கு சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனி செயலாளரான ராகேஷின் மனைவி பிரியா வர்கீசும் பங்கேற்றார். பல்கலைக் கழக விதிகளின்படி, தகுதிப் பட்டியலில் இவர் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், நேர்முகத் தேர்வுக்குப் பிறகு வெளியான ரேங்க் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இணை பேராசிரியர் பணி நியமனம் வழங்க பல்கலை.யின் சிண்டிகேட் தீர்மானித்தது. இதை நேர்முகத் … Read more

வங்கதேச எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்: பிஎஸ்எப் வீரர் வீரமரணம்

அகர்தலா: இந்திய – வங்கதேச எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். திரிபுரா மாநிலத்தில் காஞ்சன்பூர் உட்கோட்ட பகுதியில் வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாம் உள்ளது.  திரிபுரா தேசிய விடுதலை முன்னணியை  சேர்ந்த தீவிரவாதிகள் பலர் வங்கதேச எல்லை ஒரமாக பதுங்கி உள்ளனர். தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேசத்தின் ஜூபுய் என்ற இடத்தில் … Read more

“3 ஆண்டுகளில் 7 கோடி ஊரக குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு” – ஜல் ஜீவன் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: கோவாவின் பனாஜியில் நடைபெற்ற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகள் குழாய் மூலம் தூய்மையான குடிநீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அனைவரின் முயற்சி என்பதற்கான மாபெரும் உதாரணமாக, இது உள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது வீட்டுக்கு வீடு … Read more

தண்டனையை அதிகரிக்கும்போது குற்றவாளிகளுக்கு வாய்ப்பு தரணும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனையை அதிகரிக்கும் முன்பாக, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க வாய்ப்பளிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, வாழ்நாள் ஆயுள் தண்டனையாக மாற்றி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய திட்டம்..! – “மேக் இந்தியா நம்பர் 1”

மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்பவர்களில் முக்கிய தலைவராக திகழ்பவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவ்வப்போது அவரின் அறிவிப்புகளும் திட்டங்களும் பலரது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் மிஸ்டுகால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. … Read more

பில்கிஸ் பானு குற்றவாளிகளில் நல்ல பிராமணர்கள் இருந்ததால் விடுதலை: பாஜ எம்எல்ஏ சர்ச்சை கருத்து

அகமதாபாத்: குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய குழந்தை உட்பட  குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களை சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான … Read more

இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் கொரோனா..!- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கொரோனா கடும் வேகமாக பரவி சில தினங்களுக்கு முன்பாக குறைந்தது. தற்பொழுது கொரோனா மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 … Read more

கேரளா: அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு! தடுப்புகளை உடைத்து மீனவர்கள் போராட்டம்

கேரளாவில் விழிஞத்தில் அதானி நிறுவனம் செயல்படுத்த உள்ள துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுப்புகளை உடைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். விழிஞம் துறைமுகத்தில், அதானி நிறுவனம் ₹7,525 கோடி மதிப்பிலான ஆழ்கடல், பல்நோக்கு, சர்வதேச துறைமுகம் மற்றும் கொள்கலன் மாற்று முனையத்தை செயல்படுத்த உள்ளது. விழிஞம் துறைமுக திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், கடற்கரை பகுதிகள் அலைகளால் அரிக்கப்படும் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீனவர்கள் 4ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானம் நடந்து வரும் பகுதியில் … Read more

ஆன்லைன் பரிவர்தனை ஆப்களுக்கு புதிய ஆப்பு..! – ரிசர்வ் வங்கி சொல்வது என்ன..?

டீ கடை முதல் ஐ.டி கம்பெனி வரை கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பரிவர்தனை ஆப்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆன்லைன் ஆப்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில் கூகிள் பே உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளிலும் பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் நிர்ணயிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பின் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளின் … Read more