பிறந்த நாளில் தாயை சந்திக்க முடியவில்லை – சுய உதவிக்குழுக்களின் மகளிரிடம் பிரதமர் மோடி உருக்கம்

போபால்: மத்திய பிரதேசத்தின் ஷியோ பூரில் உள்ள கரஹாலில் நேற்று நடைபெற்ற சுய உதவி குழு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது சுய உதவிக் குழு பெண்களுக்கு பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநாட்டில் அவர் பேசியதாவது: புதிய இந்தியாவில் ஊராட்சியில் தொடங்கி குடியரசுத் தலைவர் மாளிகை வரை பெண்களின் சக்தி கொடி கட்டி பறக்கிறது. மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 17,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது ஒரு பெரிய … Read more

இந்தியாவில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட சிவிங்கி புலிகள் அழிந்தது எப்படி?

புதுடெல்லி: அழிந்து போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிவிங்கி புலிகள் இந்தியாவில் கால் பதித்துள்ளன. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கி புலிகளில் மூன்றை மத்தியப் பிரதேச மாநிலம், சியோபூரில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி நேற்று கூண்டிலிருந்து விடுவித்துள்ளார். அவை 750 சதுர கிமீ பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பராமரிக்கப்பட உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் எப்படி அழிந்தன என்பது குறித்து இந்திய வன சேவை அதிகாரி பர்வீன் … Read more

சக நடிகர், நடிகைகள் எச்சரித்தபோதும் சுகேஷை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்த நடிகை ஜாக்குலின்

மும்பை: கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்து வந்தார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடன் சிறையில் இருந்த தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபரின் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மோசடி செய்த பணத்தில் இந்தி நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பொருட்களை சுகேஷ் பரிசாகக் கொடுத்ததாக அமலாக்கத் … Read more

திருப்பதியில் தரிசிக்க ஒரு நாள் காத்திருப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 425 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 693 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும், ரூ.4.86 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. … Read more

பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 56 வகையான சைவ, அசைவ உணவு – 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘56 இன்ச் மோடி ஜி’ என்ற சிறப்பு சாப்பாட்டை டெல்லியைச் சேர்ந்த உணவு விடுதி நேற்று முதல் 26-ம் தேதி வரை விற்பனை செய்கிறது. இந்த உணவை சாப்பிட வருபவர்களுக்கு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லி கன்னாட் பிளேசில் உள்ளது அர்டார் 2.1 என்ற உணவு விடுதி. இது பிரதமரின் பிறந்த நாளை தனிச்சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்த உணவு விடுதியின் உரிமையாளர் சுமித் … Read more

நேபாளத்தில் நிலச்சரிவு 17 பேர் பரிதாப பலி

காத்மண்டு: நேபாளத்தில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேரை காணவில்லை. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், லஸ்கு மற்றும் மகாகாளி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், வீடுகளும் 2  பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், அச்ஹாம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பல்வேறு இடங்களில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், 10 பேரை … Read more

92 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் பெண் விருந்தினர்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு சார்பில் நடைபெறும் விஜயதசமி விழாவில், 92 ஆண்டுகளுக்குப் பின் முக்கிய விருந்தினராக பெண் ஒருவர் பங்கேற்கிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 92 ஆண்டுகள் முடிவடைகின்றன. இந்த அமைப்பு ஆண்டுதோறும் தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளன்று விஜயதசமி விழாவை மிக விமரிசையாக நடத்தி வருகிறது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க ஆண்டுதோறும் முக்கிய விருந்தினர்களை அழைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 5-ம் … Read more

லடாக் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் பாஜ தலைமையிலான மலை மேம்பாட்டு கவுன்சிலின் திமிஸ்காம் தொகுதி காங்கிரஸ் கவுன்சிலர் சோனாம் டோர்ஜெய் சமீபத்தில் இறந்தார். இதையடுத்து, இந்த இடத்துக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் தஷி துண்டுப்பும், பாஜ சார்பில் டோர்ஜாய் நாம்கியாலும் போட்டியிட்டனர். நேற்று காலை இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 1,467 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 14 வாக்குகள் நோட்டாவிற்கு பதிவாகி இருந்தது. 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள … Read more

பிரதமர் மோடிக்கு 72-வது பிறந்த நாள் – ரஷ்ய அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளில் 4 முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றார். பிறந்த நாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் நேற்று காலை 8 சிறுத்தைகளை காட்டில் திறந்துவிட்டார். பிற்பகலில் ஷியோபூரில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் டெல்லி திரும்பிய பிரதமர், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு … Read more

ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி திருவனந்தபுரம் ஸ்டேடியத்தில் மின் இணைப்பு துண்டிப்பு

திருவனந்தபுரம்: ரூ.2.5 கோடி மின் கட்டண பாக்கி காரணமாக திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய் துதலா  3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 செப். 28ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்ட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இந்த ஸ்டேடியத்தின் மின் இணைப்பை கேரள மின்வாரியம் துண்டித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2.5 … Read more