துர்கா சிலை கரைப்பின்போது திடீர் வெள்ளப்பெருக்கு; ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேர் சாவு; 50 பேர் மாயம்: மேற்கு வங்கத்தில் சோகம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைத்து கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 50 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்படும். இந்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் … Read more

இந்த இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் உள்ள … Read more

மெல்ல மெல்ல குறையும் கொரோனா; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாய் 2,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற அளவுக்குள் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்துக்குள் தொற்று அடங்கியது. நேற்று இது சற்று அதிகரித்து 2,468 ஆக இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்து 500-க்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் … Read more

திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால சாலை பக்தர்களுக்கு திறப்பு

* 3ம் கட்ட பணி ஜனவரியில் நிறைவடையும்* அறங்காவலர் குழு தலைவர் தகவல் திருமலை: திருப்பதியில் ஏழுமலையான் கோயில்  தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகள் தீர்க்க கட்டப்படும் ஸ்ரீனிவாச சேதுவின் மூன்றாம் கட்ட கட்டுமானப் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று அறங்காவல் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி லீலா மஹால் அருகில்  இருந்து ஸ்ரீவாரி சன்னிதி வரை கட்டப்பட்ட சீனிவாச சேது மேம்பாலத்தின் 2ம் கட்ட மேம்பால … Read more

சோனியாவை காரில் வர சொன்ன ராகுல்: ஒற்றுமை பயணத்தில் நெகிழ்ச்சி!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் துவங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவிற்கு சென்ற அவர் அங்கு சுமார் 19 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது கர்நாடக மாநிலத்தில் ராகுல் … Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு: அலைகடலென திரண்ட தொண்டர்கள்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் காந்தி நடத்தி வரும் ஒற்றுமை இந்தியா நடைப்பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் 6 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், ராகுல் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைசூருவில் தனது நடைப்பயணத்தை முடித்துக்கொண்ட ராகுல்காந்தி, தசரா பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் மாண்டியா மாவட்டம் பாண்டவபூரா … Read more

பிரசாந்த் கிஷோருக்கு சி.எம் போஸ்ட்… ஆனால் அதுக்கு மட்டும் ‘நோ’- நீங்க கிளம்புங்க நிதிஷ்!

ஒருபுறம் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி கையிலெடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார். மறுபுறம் ஜன் சூராஜ் யாத்ராவை கையிலெடுத்து பிகார் மாநிலத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். அம்மாநிலத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க நடைபயணத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிகார் மாநிலத்தில் நகரங்கள், கிராமங்கள், தெருக்கள் என 3,500 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து பொதுமக்களை சந்திக்க இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் என்றால் தேர்தல் வியூக நிபுணர் என்று தான் பலருக்கும் … Read more

ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் இணைந்த வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்குகிறது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.360 கோடியில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லம் அருகே பிரதம இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமையவுள்ளது.

ஆயுதம் ஏந்திய படகுகள் பரிசோதனை! ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஆளில்லா படகு

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை கண்காட்சி அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நிலையில், அதற்குக் முன்னதாக, புனேவில் 3 ஆளில்லா தொலை கட்டுப்பாட்டு ஆயுதம் பொருத்தப்பட்ட படகுகளை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டிஆர்டிஓ சோதனை செய்தது. இந்த படகுகளை தனியார் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான சாகர் டிஃபென்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து DRDO உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள், கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும், ரோந்துப் பணிக்காகவும், உளவு பார்க்கவும் ஒட்டுமொத்த கடல் பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக … Read more

கோவிந்தா..கோவிந்தா..!: ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 நாட்களாக வெகுவிமர்சியாக நடைபெற்ற பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு முதல் வாகன புறப்பாடாக ஏழுமலையானின் பெரிய சேஷவாகன சேவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் கோயில் மாட வீதிகளில் … Read more