இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேருக்கு கொரோனா… 47 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்தது. * புதிதாக 47 … Read more

லிங்காயத்து வாக்குகளுக்கு குறிவைத்து தேர்தலுக்காக எடியூரப்பாவுக்கு பதவி

பெங்களூரு: தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. கடந்த 2021-ம் ஆண்டு அவர் கர்நாடக முதல்வராக இருந்தபோது, வயதை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து மிகுந்த வருத்தத்துடன் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சியிலும் கட்சியிலும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகி பாஜக கூட்டங்களில் பங்கேற்பதைகூட தவிர்த்து வந்தார். இதனால் லிங்காயத்து சாதியினரும் மடாதிபதிகளும் பாஜக மேலிடத்தின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் பாஜகவின் … Read more

மின்சாரம் வாங்க, விற்க தடை: தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு உத்தரவு!

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5,085 ரூபாய் கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலங்கானா, அதிகபட்சமாக 1,381 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகம், 926 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மேலும், ராஜஸ்தான் 501 கோடி ரூபாய், ஜம்மு காஷ்மீர் 435 கோடி ரூபாய், ஆந்திரா 413 கோடி ரூபாய், … Read more

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி: 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள தடை…

டெல்லி : மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. மின் கட்டமைப்பை நிர்வகிக்கும் ஒன்றிய அரசின் பவர் சிஸ்டம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 13 மாநிலங்கள் 5,100 கோடி ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளன. மின்சார சட்டத்திருத்தத்தின் புதிய விதிகளின்படி மாநிலங்கள் உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்துவிட்டதால், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கவோ, … Read more

'பம்பாய்' பட பாணியில் காதலியை பார்க்க சென்ற காதலனுக்கு நேர்ந்த சோகம்: உ.பியில் பரபரப்பு

காதலுக்காக எதையும் செய்யத் துணியும் எண்ணம் எப்போதும் அனைவருக்கும் இருக்கும். அப்படி துணிந்து செய்யும் செயல்களில் ஒரு சிலர் சிக்கலில் சிக்கும் சூழலும் ஏற்படும். அப்படியான சூழலில்தால் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்புர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான நபர் சையிஃப் அலி. இவர் தனது காதலியை பார்க்கச் சென்று போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்கான காரணம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய் … Read more

அயோத்தி – நரசிங்கர் கோயில் மட உரிமை விவகாரம்: 2 துறவிகள் மோதல், குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இரண்டு துறவிகள் மோதலில் குண்டு வெடித்தது. அங்குள்ள நரசிங்கர் கோயில் மடத்தை சொந்தம் கொண்டாடுவதில் ஏற்பட்ட மோதலில் கலவரம் ஏற்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி நகரத்தின் ராய்கன்ச் பகுதியிலுள்ளது நரசிங்கர் கோயில். பழமையான இக்கோயிலில் நேற்று மாலை திடீர் என குண்டு வெடித்தது. இதனால், இது தீவிரவாதிகள் தாக்குதல் என அஞ்சி அப்பகுதிவாசிகள் போலீஸில் புகார் செய்தனர். நேரில் வந்து பார்த்த போலீஸார் இக்கோயிலின் மீது உரிமை கொண்டாடும் … Read more

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. தேர் திருவிழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.  

கோவை: NOC சமர்ப்பிக்காத விரக்தியில் பயிற்சி மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பிரவீன் அன்னதடா (33). இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். இந்நிலையில், தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர,; கடந்த ஓராண்டு காலமாக Tamil Nadu MGR University Medical Counsel Registration செய்ய ஜாம்ஜெட்பூரில் உள்ள தனது கல்லூரியில் NOC வாங்கி சமர்ப்பிக்காமல் … Read more

கேரளாவில் நாட்டின் முதல் ஆன்லைன் டாக்ஸி சேவை

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக அரசுக்கு சொந்தமான ஆட்டோ-டாக்ஸி சேவையை ‘‘கேரளா சவாரி’’ என்ற பெயரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கிவைத்தார். இதுகுறித்து கேரள தொழிலாளர் நலத் துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்தது: புதிய தாராளமயமாக்கல் கொள்கை என்பது நமது பாரம்பரிய தொழில்துறைகளையும், தொழிலாளர்களையும் மிகவும் எதிர்மறையாக பாதிக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், மோட்டார் வாகனப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக சுரண்டப்படாத வருமான ஆதாரத்தை உறுதி செய்யவே தொழிலாளர் துறை “கேரளா சவாரி” … Read more

பீகாரில் இது நடந்தால் எனது ஆதரவு மெகா கூட்டணிக்கு தான்: பிரசாந்த் கிஷோர் ஓப்பன் டாக்!

பீகாரில் இரு ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் எனது ஆதரவு நிதிஷ்குமார் அங்கம் வகிக்கும் மெகா கூட்டணிக்கு தான் என கூறியுள்ளார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர். தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரைச் சேர்ந்தவர். தேர்தல் வியூகப் பணிகளோடு நிதிஷ் குமாருடன் அரசியலிலும் ஈடுபட்டார். பின்னர் கருத்து வேறுபாடுகாரணமாக பிரிந்தார். அண்மையில் பீகார் அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக் கொண்டு … Read more