தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற சஜித் தத், காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான பசிட் அகமது ரேஷி, காஷ்மீரின் சோபோரை சேர்ந்தவரும், தற்போது பாகிஸ்தானில் இருப்பவருமான இம்தியாஸ் அகமது கான்டூ என்ற சஜத், பூஞ்ச் பகுதியை … Read more

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17-ந் தேதி திறப்பு

பம்பை: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது.

பள்ளி சுற்றுலா பேருந்து விபத்து: மாணவ, மாணவிகள் உயிரிழப்பு! இரவில் நடந்த துயரம்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்காஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும் பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 45 படுகாயமடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவி, மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள், இரண்டு ஊழியர்கள் என 51 பேர் … Read more

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அரசு பேருந்தும் பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு.! 41 பேர் காயம்

பாலக்காடு: கேரளாவில் அரசு பேருந்தும், பள்ளி சுற்றுலா பேருந்தும் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த சுற்றுலா பஸ்சில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில், பாலக்காடு-வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற சுற்றுலா பஸ்சானது முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது … Read more

Jalpaiguri: துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடைபெற்ற தசரா விழாவில், துர்கா சிலை கரைக்கும் போது பெரும் விபத்து நடந்துள்ளது. நீரில் சிலைகளை கரைக்குக்ம் போது, ​​மால் ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்ட மக்கள் அலறி கூச்சலிட்டனர். தண்ணீரில் தத்தளித்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றுமாறு அலறினாலும் பலர் உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கியதுடன், சிலை கரைக்க வந்தவர்கள் … Read more

சிறுபான்மையினர் எந்த அபாயத்திலும் இல்லை அனைவருக்கும் சமமான மக்கள் தொகை கொள்கை: மோகன் பகவத் வலியுறுத்தல்

நாக்பூர்: அனைத்து சமுதாயத்தினருக்குமான ஒருங்கிணைந்த மக்கள் தொகைக் கொள்கை அவசியம் தேவை. சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை  என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகதவ் கூறினார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் தசரா பேரணி நடந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: சிலர், நம்மால் சிறுபான்மையினருக்கு அபாயம், அச்சுறுத்தல்கள் உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது போன்று சிறுபான்மையினர் அபாயத்தில் இல்லை. இதற்கு முன்பும் இதுபோல் நிகழ்ந்ததில்லை. எதிர்காலத்திலும் அச்சுறுத்தல் இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு … Read more

முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

லக்னோ:  உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஞாயிறன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். … Read more

காஷ்மீரில் டிஜிபி படுகொலை வீட்டு வேலைக்காரர் கைது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோகியா (57). சிறைத்துறை டிஜிபி.இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு  லோகியா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், டிஜிபி கொலை தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த யாசிர் லோகர்(23) என்பவரை போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இது குறித்து கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘இந்த கொலையில் யாசிர் லோகர் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். அவரிடம் … Read more

மலையேற்றம் சென்றபோது விபத்து இமயமலையில் பனிச்சரிவு 14 மலையேற்ற வீரர் மீட்பு: 4 சடலங்கள் கண்டெடுப்பு

டேராடூன்: உத்தரகாண்டில் ஏற்பட்ட பனிச்சரில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேறுதல் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் 28 பேர் உட்பட மொத்தம் 41 பேர், இமயமலையின் திரவுபதி கா தண்டா சிகரத்தில் இருந்து பயிற்சி முடித்து நேற்று முன்தினம் முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, 17 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அவர்கள் சிக்கினர். … Read more

இமாச்சலில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை மோடி திறந்து வைத்தார்

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1470 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 2017ம் ஆண்டு அக்டோபரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து … Read more