வேதாந்தா – ஃபாக்ஸ்கான் விவகாரம் | 'குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை' – தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

மும்பை: ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் மகாராஷ்ட்ராவில் அமைய இருந்த தொழிற்சாலை, குஜராத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், குஜராத் ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை; நாம் அனைவரும் ஒன்றே என்று மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேதாந்தா நிறுவனமும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இணைந்து செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்கப் போவதாக அறித்திருந்தன. ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலையை அமைக்க இருப்பதாகவும் அவை அறிவித்தன. இந்த தொழிற்சாலையின் மூலம் நேரடியாக 70 ஆயிரம் … Read more

பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, சசி தரூர் வாழ்த்து 

புதுடெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இன்று(செப்.17) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் மோடிக்கு ஒரு நாள் … Read more

PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் வாழ்க்கை, போராட்டம், விடா முயற்சி மற்றும் உறுதியான தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அவர் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் மற்றும் ஊக்கத்தை அளிக்கும் ஒரு ஆளுமையாக உள்ளார்.  குஜராத்தின் வாட்நகரில் பிறந்து … Read more

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாள்: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் … Read more

அமேசானை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்த அதானி – முதல் இடம் பிடிப்பாரா?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. சமீப காலமாகவே அதானி குழுமத் தலைவரும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி வேகமாக முன்னேறி வருகிறார். இச்சூழலில் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் … Read more

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் 150 குழந்தைகள் அனுமதி: சுகாதார இயக்குநர் ஸ்ரீராமலு தகவல்

புதுச்சேரி: காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு தினமும் காய்ச்சலால் 50 முதல் 100 வரை வருகின்றனர். தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் இருப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை; தற்போது காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  

“பதவி அல்ல… பொறுப்புதான் மிக முக்கியம்” – பிரதமர் மோடி பேருரைகளின் 10 துளிகள் | பிறந்தநாள் சிறப்பு

இந்தியாவின் அரசியல் வரலாற்றை நரேந்திர மோடிக்கு முன்னர் நரேந்திர மோடிக்கு பின்னர் என்று பிரித்து குறிப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய வீச்சு அவரது அரசியல் பாணியில் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. மோடி அலையாக இருக்கட்டும், மோடி எதிர்ப்பாக இருக்கட்டும் எல்லாவற்றின் வீச்சுமே அதிகம்தான். இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். குஜராத் மாநிலத்தில் ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று தன்னை இந்தியாவின் முகமாக நிலைநிறுத்திக் கொண்டிருப்பது வரை அவரது வாழ்க்கை வியத்தகு … Read more

உ.பி.யில் கனமழை சுவர் இடிந்து 13 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தில்குஷா பகுதியில் ராணுவ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதன் அருகே ஊழியர்கள் சிலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர்.  இந்நிலையில் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால், நேற்று அதிகாலை சுற்றுசுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்தது. இதில் 13 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை போலீசார் மீட்டனர். மேலும் பலத்த காயமுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதேபோல் உன்னாவ் மாவட்டத்தில் கன்தா, ஜாலிஹய் ஆகிய கிராமங்களில் … Read more

புதுச்சேரி: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தம்பதியர் உட்பட 22 பேர் கைது

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய தம்பதியர் உட்பட 27 மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு … Read more