கணவரின் சம்பளத்தை அறிய மனைவி போட்ட பலே ஐடியா.. IT, RTI என எதையும் விட்டுவைக்காத உ.பி பெண்!

கணவரின் சம்பள வருமானம் எவ்வளவு என தெரிந்துகொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அணுகியிருக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. பொதுவாக எவருக்குமே தங்களது சம்பளம் எவ்வளவு என கேட்பதை விரும்பமாட்டார்கள். நெருங்கிய குடும்பத்தினரோ அல்லது துணையோ தவிர வெறு எவரிடமும் சம்பள விவரங்களை பகிர மாட்டார்கள். ஆனால் சமயங்களில் கணவன் மனைவியிடையேவும் இந்த வேறுபாடு ஏற்படும். குறிப்பாக விவாகரத்து பெற நேர்ந்தால் கணவனிடம் இருந்து மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் … Read more

மே.வங்க துர்கா பூஜைக்கு ரூ.40 ஆயிரம் கோடி செலவு: 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப் படுவது வழக்கம். குறிப்பாக, மாநிலம் முழுவதும் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சமுதாய குழுக்கள் மூலம் பூஜைகள் நடைபெறுகின்றன. தசரா பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒவ்வொரு சமுதாய குழு சார்பிலும் சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைகள் நிறுவப்படும். முன்னதாக சிலைகளை ஓரிடத்தில் செய்து, பூஜை நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்வார்கள். பூஜை நடைபெறும் இடம் மின் விளக்கு கள் … Read more

ஒன்றிய அமைச்சர் தகவல் 200 ரயில் நிலையம் நவீனமாக்கப்படும்

அவுரங்காபாத்: ‘நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்படும்’ என்று ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில், ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி கூறுகையில், ‘‘200 ரயில்நிலையங்களை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. ரயில்நிலையத்தின் மேல் தளத்தில் ஓய்வறைகள், உணவகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் உள்பட … Read more

மட்டன், சிக்கன் என விருந்து வைத்து கைதிகளை குஷிபடுத்திய கொல்கத்தா சிறை: ஏன் தெரியுமா?

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளையோடு (அக்.,05) முடிவுக்கு வருகிறது. இதனால் தாண்டியா, கர்பா போன்ற நடனங்களை ஆடியும், பூஜைகள் செய்தும் மக்கள் தங்களது கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகு விமர்சியாக கொண்டாடப்படும் நிலையில் கொல்கத்தாவில் உள்ள சிறை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சைவ, அசைவ விருந்து கொடுத்து ஜமாய்த்திருக்கிறார்கள். கொல்கத்தாவின் Presidency Central Correctional Home என்ற சிறையில் உள்ள … Read more

ஆர்எஸ்எஸ் தலைவரை தேச தந்தை என புகழ்ந்த இமாம் தலைவருக்கு கொலை மிரட்டல் – வெளிநாட்டு சதி என டெல்லி காவல்துறை தகவல்

புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத்தை, தேசத்தந்தை எனப் புகழ்ந்த, அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மசூதிகளில் முஸ்லிம்களின் தொழுகையை முன்னின்று நடத்துவோர் இமாம் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களது தேசிய அளவிலான அமைப்பின் தலைவராக இருக்கும் டாக்டர் உமர் அகமது இலியாஸி, தனது அலுவலக வளாகத்திலேயே வசித்தும் வருகிறார். டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்கில் மசூதியுடன் இணைந்து அகில இந்திய இமாம்கள் அமைப்பின் … Read more

Incredible Temple: பனிக்குள் சிவன் கோவில்: உலகிலேயே உயரமான ஆலயத்தின் அற்புத தரிசனம்

புதுடெல்லி: உலகின் மிக உயரமான சிவபெருமானின் ஆலயம், பனி படர்ந்து காணப்படும் புகைப்படங்கள் அனைவரையும் பரவசமூட்டுகின்றன. தற்போது நவராத்திரி திருவிழா கோலாகலமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் கண்கள், கலாச்சார பாரம்பரிய மிக்க இந்தியாவின் வழிபாடுகள் மீது நிலை கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்கள், தெய்வங்கள், பூஜைகள் கொண்டாட்டங்கள் என இந்தியாவின் இந்து மத நிகழ்வுகளை உலகமே, பரவசமாக பார்க்கிறது. இமயமலையில், இமவான் மகள் அன்னை பார்வதி பிறந்தாள் என்பதும், சிவனின் இருப்பிடமும் கைலாசம் என்பதாலும் இந்தியாவின் ஆன்மீக … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி தினம் தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம்,  சிங்கம், அண்ணப்பறவை, முத்து பந்தல்,  சர்வ பூபாலம்,  மோகினி அவதாரம் , கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் … Read more

உறவினர் போர்வையில் காம கொடூரன்; 10 வயது சிறுமக்கு வன்கொடுமை: 142 ஆண்டு சிறை.. பின்னணி இதோ!

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சார்ந்த வன்கொடுமைகள், அச்சுறுத்தல்கள், தொல்லைகள் நித்தமும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சட்ட ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முற்றிலும் தடுக்கப்பட முடியாததால் காவல் மற்றும் நீதித்துறைக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன. இப்படி இருக்கையில் கேரளாவில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்த 41 வயது நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தும், … Read more

தூய்மை இந்தியா திட்டத்தால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்ட 60 கோடி பேர் – குடியரசுத் தலைவர் தகவல்

புதுடெல்லி: மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதே ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் 9-வது ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: தூய்மை இந்தியா (கிராமப் புறம்) திட்டம் பழக்கவழக்கத்தை மாற்றும் இயக்கமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி … Read more

ஓணம் பண்டிகைக்குப்பின் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்

திருவனந்தபுரம்: இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. தொற்று பரவல் குறைந்துள்ள போதிலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று இந்திய மருத்துவ சங்கம் (கேரளா பிரிவு) எச்சரித்து … Read more