உறவினர் போர்வையில் காம கொடூரன்; 10 வயது சிறுமக்கு வன்கொடுமை: 142 ஆண்டு சிறை.. பின்னணி இதோ!

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சார்ந்த வன்கொடுமைகள், அச்சுறுத்தல்கள், தொல்லைகள் நித்தமும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சட்ட ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முற்றிலும் தடுக்கப்பட முடியாததால் காவல் மற்றும் நீதித்துறைக்கு பெரும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன. இப்படி இருக்கையில் கேரளாவில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்த 41 வயது நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தும், … Read more

தூய்மை இந்தியா திட்டத்தால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை கைவிட்ட 60 கோடி பேர் – குடியரசுத் தலைவர் தகவல்

புதுடெல்லி: மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அதே ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் 9-வது ஆண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: தூய்மை இந்தியா (கிராமப் புறம்) திட்டம் பழக்கவழக்கத்தை மாற்றும் இயக்கமாக திகழ்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி … Read more

ஓணம் பண்டிகைக்குப்பின் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்

திருவனந்தபுரம்: இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. தொற்று பரவல் குறைந்துள்ள போதிலும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்று இந்திய மருத்துவ சங்கம் (கேரளா பிரிவு) எச்சரித்து … Read more

`காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுகிறார் பும்ரா’- பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகப் கோப்பையில் விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 16-ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா புறப்படுகின்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், வரும் … Read more

உபியில் சோகம் துர்கா பூஜை பந்தலில் தீப்பிடித்து 5 பேர் பலி: ஏற்பாட்டாளர்கள் கைது

பதோஹி: உத்தரப்பிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியானார்கள். மேலும் 64 பேர் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் பதோஹியில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த பூஜையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துர்கை அம்மனை வழிபாடு செய்தனர். விழாவையோட்டி டிஜிட்டல் விளக்குகள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது திடீரென பந்தலில் தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடினார்கள். … Read more

அமித்ஷா ஆபரேஷன்… டபுள் அட்டாக்கிற்கு ரெடியான கேசிஆர்- பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தேசிய அரசியலில் தடம் பதிக்க வியூகம் வகுத்துள்ளார். விரைவில் பாரத் ராஷ்டிர சமிதி (BRS) என்ற அரசியல் கட்சியை தொடங்குகிறார். இதையொட்டி வட இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி கைகோர்க்க திட்டமிட்டுள்ளார். வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக முக்கிய சக்தியாக BRS விளங்கும். விளங்க வேண்டும் என்பது தான் கே.சந்திரசேகர் ராவின் எண்ணமாக உள்ளது. தனது மாநில கட்சியான தெலங்கானா … Read more

இந்திய வான்பரப்பில் பரபரப்பு ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய போர் விமானங்கள்

புதுடெல்லி: இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து சீனாவின் குவாங்சூ நோக்கி மஹான் நிறுவனத்தின் டபிள்யூ581 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்திய வான் எல்லையை கடக்கும் போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது. ஈரான் விமானி உடனடியாக இந்த தகவலை டெல்லி விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனே, இந்திய விமானப்படைக்கு சொந்தமான … Read more

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: பீகார் உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நவம்பவர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் மோகாமா மற்றும் கோபால்கஞ்ச், மகாராஷ்டிராவில் அந்தேரி, அரியானாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உத்தரப்பிரதேசத்தில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான … Read more

கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் கண்ணூரில் தகனம்

திருவனந்தபுரம்: சென்னை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணனின் உடல் கண்ணூரில் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவர் கோடியேரி பாலகிருஷ்ணன்(68). கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 3 முறை மாநில மார்க்சிஸ்ட் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள … Read more

வேலையின்மை, வறுமை பற்றி ஆர்எஸ்எஸ்சை கவலைப்பட வைத்தது ராகுல் யாத்திரை: காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: நாட்டில் சமத்துவமின்மை, வேலையில்லா திண்டாட்டம், பட்டினி, வறுமை போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதை ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் மறுத்து வந்தது. ஆனால், பாஜ துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஒரு கருத்தரங்கில், ‘நாட்டில் நிலவும் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் வேலையில்லாத்  திண்டாட்டம் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்’ குறித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர் திக்விஜய் … Read more