டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை; சிபிஐ நடத்தும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை முதல்-மந்திரியாக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் … Read more

POSOCO-விடம் மின்சாரம் வாங்கவும் விற்கவும் தமிழகத்துக்கு தடை! ஏன் தெரியுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் பாக்கித் தொகையை செலுத்தத் தவறியதால், தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார பரிமாற்ற மையத்திடம் மின்சாரத்தை வாங்கவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார பரிமாற்றத்திற்கான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.நரசிம்மன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் உள்ளிட்ட 13 … Read more

ட்ரம்ப்பின் 36 மணிநேர இந்திய பயணத்துக்கு ரூ.38 லட்சம் செலவு – ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் 36 மணி நேர இந்தியப் பயணத்துக்கு மத்திய அரசு சுமார் ரூ.38 லட்சம் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2020-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு அவர் வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயரதிகாரிகள் வந்திருந்தனர். … Read more

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். டெல்லி அரசின் மதுபான விற்பனை கொள்கை மாற்றப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

மதுராவில் இன்று கோகுலாஷ்டமி கோலாகல விழா – கிருஷ்ணர் உடைகள் ரூ.500 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் மதுராவில் உள்ள தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்பனையாகி வருகின்றன. இந்த உடைகளில் அதன் விலைக்கு ஏற்ற … Read more

நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யலாம்: ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு

பெங்களூரு: நித்யானந்தவிற்கு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் இருந்த பெண் சிஷ்யைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தா சாமியார் கோர்ட்டில் ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இதுவரை ஆஜராகவில்லை. … Read more

திருப்பதியில் அங்கபிரதட்சண இலவச டிக்கெட்; 22-ல் கிடைக்கும்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்தில் அங்க பிரதட்சணம் செய்ய ஆன்லைனில் இலவசமாக வழங்கும் டிக்கெட்  22ம் தேதி காலை 9 மணிக்கு  வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், வருடாந்திர  பிரமோற்சவம் நடைபெறும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அங்க பிரதட்சணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாட்களுக்கு இலவசமாக பக்தர்கள் ஆன்லைனில் https://tirupatibalaji.ap.gov.in இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் நீச்சல் உடையில் தோன்றிய பேராசிரியை – ரூ.99 கோடி நஷ்டஈடு கோரும் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக ரூ.99 கோடி கொடுக்க வேண்டும் என்று நீச்சல் உடையுடன் தோன்றிய பேராசிரியைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியாருக்கு சொந்தமான செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீச்சல் உடையுடன் புகைப்படம் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பேராசிரியையின் செயலைக் கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாகம் முடிவெடுத்தது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு … Read more

பாஜக.வில் பேசுவதற்கு வாய்ப்பு தருவதில்லை – நடிகை விஜயசாந்தி குற்றச்சாட்டு

ஹைதராபாத்: பாஜகவில் தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி புகார் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர் அக்கட்சியில் தேசிய … Read more

கோவிட்டுடன் பரவும் குளிர் ஜூரம்.. மருத்துவமனையில் பெரும்பாலானோர் அனுமதி.!

டெல்லியில் குளிர் ஜூரம் போன்ற சீசன் நோய்கள் வேகமாகப் பரவி வரும் சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலோருக்கு கோவிட் பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீத வீடுகளில் கோவிட் அல்லது ஃபுளூ காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் அதன் அண்டை நகரங்களான காசியாபாத் குருகிராம், நொய்டா, பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் சுமார் 11 ஆயிரம் வீடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இரண்டு மூன்று வாரங்களாக டெல்லியில் கோவிட் … Read more