ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்: UIDAI அறிவிப்பு

டெல்லி: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெறுபவர்களுக்கு ஆதார் விதிகளை கடுமையாக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆதாருக்கு விண்ணப்பித்தவர், பதிவு சீட்டுடன் மாற்று அடையாள அட்டையை பயன்படுத்தி அரசின் பலன்கள், சேவைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி | 'பெஸ்ட் டீலை பெறுவது என் தார்மீகக் கடமை' – அமைச்சர் ஜெய்சங்கர்

“நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணெய் இறக்குமதியில் பெஸ்ட் டீலைப் பெறுவது என்பது தனது தார்மீகக் கடமை” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா பெற்றது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்தும்கூட அடிபணியாமல் இந்தியா ரஷ்ய எண்ணெய்யைப் பெற்றது. இந்தக் கொள்கையை எடுத்தற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் உலகளவில் பாராட்டைப் பெற்றது. அண்மையில் கூட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மோதி விபத்து- 50 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா அருகே, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சத்தீஸ்கரின் பிலாஸ்புரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு ரயில் சென்ற போது, சிக்னல் பெறுவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில், பயணிகள் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.   Source link

பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கும் போது தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.14 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் சென்றனர். நேற்று இரவு முதல்வர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இதையடுத்து, டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை … Read more

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து வரும் நேற்று இரவு டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 14வது குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார். அதன்பின்னர், இன்று மாலை பிரதமர் … Read more

புதுச்சேரி பட்ஜெட் ஆகஸ்டு 22 அன்று தாக்கல்..!

2022 – 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி வரும் 22ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகப் பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 10 ந் தேதி தொடங்கிய நிலையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 22ஆம் நாள் பட்ஜெட் … Read more

டெல்லியில் திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறனின் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

டெல்லி: திமுக அலுவலகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முரசொலி மாறனின் 89-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை அளித்தார்.

தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு…

மும்பை: தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபரை மிரட்டி பறித்த பணத்தில் ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை அவர் வாங்கி தந்துள்ளார்.    

அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் – தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ள யுயு லலித் வலியுறுத்தல்

புதுடெல்லி: அற்பமான வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யுயு லலித் நேற்று வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அற்பமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அற்ப வழக்குகளை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தின் … Read more

புதுச்சேரியில் ஆக.22ல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆகஸ்ட் 22ல் பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 10,696 கோடி புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.