ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கருட சேவையில் மலையப்ப சுவாமி: மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருமலை: வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று நடந்த முக்கிய விழாவான கருட சேவையில் 3 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்மம், முத்து பந்தல்,  கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் … Read more

கர்நாடகாவில் நாகப்பாம்பை பிடித்து முத்தமிட்ட இளைஞரை அதே பாம்பு அவரை என்ன செய்தது பாருங்க..!!

கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பகுதியைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை … Read more

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நந்தகிராம் காவல் நிலையத்திற்குட்பட்ட சாதிக் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண் சடலங்கள் கிடப்பதாக காவல்துறை அதிகாரி முனிராஜிக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரேகா (35), அவரது 14 வயது மகள் கழுத்து அறுபட்ட நிலையில் அந்த வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ஆனால், ரேகாவின் கணவர் சஞ்சீவ் பால் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல … Read more

13 பெருநகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி – 2 ஆண்டுகளில் 90% பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 பெருநகரங்களுக்கான 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை நேற்று டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் 1995-ல் செல்போன் சேவையும், இணைய சேவையும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 2-ஜி, 3-ஜி, 4-ஜி இணைய சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகின. இந்த வரிசையில் 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையும் அவர் தொடங்கிவைத்தார். டெல்லி … Read more

கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு

டேராடூன்:  உத்தரகாண்டில் கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை கேதர்நாத் கோயிலின் பின்புறத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 6.30மணியளவில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் பக்தர்கள் அச்சமடைந்தனர். கேதர்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேதார் டோம் மற்றும் ஸ்வர்கரோகினி இடையே பெரிய … Read more

நாடாளுமன்ற கட்டிடம் மீதான தேசிய சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: இந்தியாவின் தேசியச் சின்னமான நான்முகச் சிங்கம்,புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட நான்முகச் சிங்கத்தை தாங்கிப் பிடிக்க 6,500 கிலோ எடையில் நான்குபுறமும் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில், வழக் கறிஞர்கள் அல்டானிஷ் ரெய்ன், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வாரணாசியில் உள்ள … Read more

பாலிவுட் நடிகை தூக்குபோட்டு தற்கொலை

மும்பை: மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயதுள்ள இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கினார். கடந்த 28ம் தேதி தனது அறையில் தங்கிய அவர் வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்த இளம்பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வெர்சோவா பகுதி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு … Read more

பிரிவினையை கோரவில்லை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம்: இந்திய கம்யூ. கேரள மாநில மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: சுயாட்சி தன்மை கொண்டவையாக மாநிலங்கள் இருப்பதை ஒருமைப்பாட்டிற்கு விரோதம் என்று  ஆட்சியில் உள்ள பாஜவினர் மாற்றி சொல்கிறார்கள். நாம் கேட்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தானே தவிர பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொள்பவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி என்று கேரளாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது.  இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே-சசிதரூர் நேரடி போட்டி: திரிபாதி வேட்புமனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்லிகார்ஜூனா கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. ஆரம்பத்தில் சோனியா ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சித் தலைவர் … Read more

நடிகர் கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கிய பிரபாஸ்

ஐதராபாத்: சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம் ராஜுவின் சொந்த ஊரான மொகல்தூரில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ், ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்கினார் பிரபாஸ். பிறகு ரசிகர்களிடையே அவர் பேசினார். கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கு வதாகவும், இதன் மூலம் நலிந்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் … Read more