கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் கண்ணூரில் தகனம்

திருவனந்தபுரம்: சென்னை தனியார் மருத்துவமனையில் மரணமடைந்த கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணனின் உடல் கண்ணூரில் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கேரள மாநில மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவர் கோடியேரி பாலகிருஷ்ணன்(68). கடந்த வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 3 முறை மாநில மார்க்சிஸ்ட் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள … Read more

வேலையின்மை, வறுமை பற்றி ஆர்எஸ்எஸ்சை கவலைப்பட வைத்தது ராகுல் யாத்திரை: காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: நாட்டில் சமத்துவமின்மை, வேலையில்லா திண்டாட்டம், பட்டினி, வறுமை போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதை ஒன்றிய பாஜ அரசு முற்றிலும் மறுத்து வந்தது. ஆனால், பாஜ துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஒரு கருத்தரங்கில், ‘நாட்டில் நிலவும் வறுமை, வருமான சமத்துவமின்மை மற்றும் வேலையில்லாத்  திண்டாட்டம் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம்’ குறித்து பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த தலைவர் திக்விஜய் … Read more

திருப்பதி மலைப்பாதையில் தோளில் மனைவியை தூக்கிச்சென்ற கணவர்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் தோளில் மனைவியை கணவர் தூக்கிச்சென்ற வீடியோ வைரலானது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடையம் அடுத்த  கடியபுலங்காவை சேர்ந்தவர் வரதவீரவெங்கட சத்தியநாராயணா என்கிற (சத்திபாபு),  லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு திருமணம் ஆனது. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் தாத்தா பாட்டி ஆகினர். இந்நிலையில், இவர்களின் மூத்த மருமகன் குருதத்தா … Read more

பஞ்சாப் முதல்வருடன் செல்பி பாஜ நிர்வாகி சஸ்பெண்ட்

அகமதாபாத்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுடன் செல்பி எடுத்ததால் பாஜவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த பாஜ தலைவர் கிஷான்சின் சோலான்கி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை பாஜவின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷான்சின் தனது பேஸ்புக் பக்கத்தில் பஞ்சாப் முதல்வரான ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மானுடன் எடுத்துக்கொண்ட செல்பியை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களுக்காக நன்றி ஜீ என குறிப்பிட்டு … Read more

ஜேஇஇ தேர்வு முறைகேடு ரஷ்ய ஹேக்கர் டெல்லியில் கைது?

புதுடெல்லி: ஜேஇஇ தேர்வு முறைகேடு தொடர்பாக ரஷ்யாவில் இருந்து வந்த ஹேக்கரை சிபிஐ விசாரணக்காக அழைத்து சென்றுள்ளது. ஒன்றிய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு நடந்த இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவதாகவும், முன்னணி தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கை உறுதி செய்வதாகவும் கூறி பெரும் தொகையை பெற்று கொண்டு, மெகா முறைகேடு செய்தததாக  அபினிட்டி எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மற்றும் பலர் … Read more

பஞ்சாப் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. பஞ்சாப்பில்  ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை வாங்க பாஜ முயற்சி செய்து வருவதாக  முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டினார்.  எம்எல்ஏக்களை வளைக்க பாஜ கட்சி தலா ரூ.25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், சட்டப்ேபரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் மான் முடிவு செய்தார். … Read more

6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி: பீகார், மராட்டியம், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோக்ரநாத் (உ.பி.), தாம்நகர் (ஒடிசா), ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நவீன வசதிகளுடன் உள்நாட்டில் தயாரான இலகு ரக ஹெலிகாப்டர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: விமானப்படையின் பலம் அதிகரிக்கும்

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர் மூலம் விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் வாங்க ஒன்றிய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. … Read more

சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்-3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்.இந்த கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் … Read more

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

டெல்லி: அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் எதிர்ப்பதாக ஒன்றியகல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. உள்ளூர் மொழிகளில் பாடம் எடுக்கப்படும். மேலும் அரசு … Read more