வங்கி லாக்கர்களிலும் சிபிஐ சோதனை! “எதுவும் கிடைக்காது” என மணீஷ் சிசோடியா கிண்டல்!

டெல்லி துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் ஆட்சி செய்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி டெல்லியின் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த … Read more

நடிகர் நட்டி நட்ராஜின் வீட்டில் சோகம்…!! ட்விட்டரில் வேதனைப் பதிவு..!!

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நடராஜ் தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’, ‘போங்கு’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.  மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்திலும் நட்டி மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். தற்போது மோகன்ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.  நட்டி அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, … Read more

நீங்கள் இப்படி செய்யலாமா கேஜ்ரிவால்? – அன்னா ஹசாரே கடிதமும் பின்னணியும்

புதுடெல்லி: ‘உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே…’ – இப்படித்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார். டெல்லி அரசியலில் அன்றாடம் சிபிஐ ரெய்டு, விசாரணைகள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்போது கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் அன்னா ஹசாரே. அன்னா ஹசாரே கடித விவரம்: “நீங்கள் முதல்வரான பின்னர் நான் உங்களுக்கு முதன்முறையாகக் கடிதம் எழுதுகிறேன். அதற்குக் காரணம் அண்மையில் வெளியான டெல்லி மதுபானக் … Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் – மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையையொட்டி, மாநில அரசு ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில், பொங்கல், தீபாவளி, சித்திரை திருவிழா, ஜல்லிக்கட்டு போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது போல், கேரள மாநிலத்தில், ஓணம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, கேரள மாநிலத்தில் … Read more

Ganesh Chaturthi: செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி

விநாயக சதுர்த்தி 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது .மும்பையில் உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழாக் க்குழுவான கணபதி மண்டல் 316 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளது. இந்த காப்பீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களுக்கான ₹31.97 கோடி அடங்கும். இதைத் தவிர, பந்தல், தன்னார்வலர்கள், பூசாரிகள், சமையல்காரர்கள், காலணி கடை ஊழியர்கள், பார்க்கிங் இடத்தில் பணிபுரியும் நபர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு என ₹263 கோடி தனிநபர் காப்பீடு … Read more

புதுச்சேரியில் 22ம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி: பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022ம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அணைத்து அதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்தால் மாநிலம் வளர்ச்சி அடையும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் … Read more

புதுச்சேரி: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி; இன்னும் சில அறிவிப்புகள்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நடப்பாண்டு (2022) விவசாயிகள் பெற்ற கடன்தொகை ரூ 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவயில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த 10ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 22ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இதன்பிறகு விவாதமும் வாக்கெடுப்பும் நடந்த பின்பு இறுதி நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் முதல்வர் ரங்கசாமி. … Read more

நாளை விநாயகர் சதுர்த்தி.. பூக்களின் விலை இன்று கிடுகிடு உயர்வு..!

நாளை (31-ந்தேதி) கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு அதிக அளவில் பூக்களை வாங்கி அபிஷேகம் செய்வது வழக்கம். இதனால், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மார்க்கெட்டுகளுக்கு பூக்கள் வரத்து சற்று குறைவாகவே காணப்படுகிறது. தற்போது தேவை அதிகம் என்பதால் பொதுமக்களின் ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு … Read more

சாலை விபத்தில் தாய், தந்தை, மகன் பலி.. துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியபோது சோகம்..!

செஞ்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில், தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கீரம்பாடியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன். இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது காரில் சென்றிருந்தார். அவருடன், அவர் மனைவி சாந்தி, மகன் முத்துராஜா ஆகியோர் சென்றனர். காரை முத்துராஜா ஓட்டிச் சென்றார். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட‌தற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரியில் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்த‌து. இதற்கு எதிரான வழக்கை கடந்த மார்ச் 15ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய … Read more