PFI தடை எதிரொலி… ட்விட்டரில் டிரெண்டாகும் BanRSS!

சட்டவிரோத பண பரிமாற்றம், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு காரணங்களுக்காக PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடைக்கு காங்கிரஸ், விசிக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ‘நாடு முழுவதும் இந்துத்துவாவை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் … Read more

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கியதற்கு கண்டனம்!: மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள், பணிகளை புறக்கணித்து … Read more

பசி எடுக்கும்போது ஸ்பூன்களை சாப்பிட்ட இளைஞர்?! 62 ஸ்பூன்களை போராடி அகற்றிய மருத்துவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து 62 ஸ்பூன்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் மன்சூர்பூர் நகரத்தில் போபாடா கிராமத்தில் வசித்து வந்தவர் 32 வயதான இளைஞர் விஜய். இவர் கடுமையான வயிற்றுவலி காரணமாக முசாபர்நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றை அணுகியுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். அவரது வயிற்றுவலிக்கு அது தான் காரணம் என்பதை … Read more

லதா மங்கேஷ்கர் பிறந்த நாள்: அயோத்தியில் 40 அடி நீளமுள்ள வீணை திறப்பு!

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள் தினமான இன்று அவரது நினைவை போற்றும் வகையில் 40 அடி நீளமுள்ள வீணையை, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது 93வது பிறந்த நாளை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் சரயு நதிக்கரையில் 7.9 கோடி … Read more

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்பு

திருவனந்தபுரம் : பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் ஒன்றிய அரசின் தடையை ஏற்கிறோம் என பி.எஃப்.ஐ. தெரிவித்தது.

தனியார்மயமாகும் புதுச்சேரி மின்துறை!? காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள்!

புதுச்சேரி மாநில மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் மின்துறை ஊழியர்கள்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மின்துறை தனியார் மையம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கு மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார்மயத்துக்கான டெண்டர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காரைக்காலில் … Read more

LTTE முதல் PFI வரை… இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இவைதான்!

அஹிம்சை வழியில் போராடி ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. உலகில் வேறெந்த நாட்டுக்கும் இந்த சிறப்பு இருப்பதாக தெரியவி்ல்லை. இத்தகைய சிறப்புமிக்க சுதந்திர போராட்ட வரலாற்றை கொண்ட இந்தியாவில் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல் தற்போது பிரதமர் நரேந்திர மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு வரை, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களோ, அதற்கான சதி திட்டங்களேோ நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. மும்பை குண்டுவெடிப்பு, நாடாளுமன்ற தாக்குதல், கோவை குண்டுவெடிப்பு, புல்வாமா அட்டாக் … Read more

PFI-ஐ போல RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும் -லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்

Popular Front of India Banned: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளை ஐந்தாண்டுகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசின் PFI தடை முடிவு செய்தி வெளியானவுடனே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல தலைவர்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வரிசையில் … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி உயர்வினால் 50 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் … Read more

முடிவுக்கு வந்தது என்.ஆர். காங்கிரஸ் – பாஜக எம்எல்ஏகள் இடையேயான கருத்து வேறுபாடு!

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் இல்லை என இரு கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் சட்டப் பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமென பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் … Read more