என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர … Read more

வீடியோ: ”க்ளினிக்கை திறக்க இவ்வளவு நேரமா?” : கதவை உடைத்து டாக்டரை கடுமையாக தாக்கிய மக்கள்!

குறித்த நேரத்தில் க்ளினிக்கை திறக்காததால் வீடு புகுந்து மருத்துவரையும் அவரது மகனையும் நோயாளிகளும் அவர்களுடன் வந்தவர்கள் தாக்கிய சம்பவம் மகாராஷ்டிராவில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவம் அனைத்தும் மருத்துவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காண்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. மகாராஷ்டிராவின் பாரமதியில் உள்ள சங்கவி என்ற பகுதியில் தனது வீட்டிற்கு அருகிலேயே ஆயுர்வேத க்ளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருபவர் யுவ்ராஜ் கெயிக்வாட். … Read more

தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள அமீர்கான் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினர். பணம் எண்ணும் எந்திரங்களைக் … Read more

அடேங்கப்பா… கேரளாவில் ஒரு பூசணிக்காய் ரூ47,000க்கு ஏலம்

மூணாறு: கேரளாவில் ஒரு பூசணி ரூ.47 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாட்களில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பொது ஏலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை மக்கள் ஏலம் விடுவர். நேற்று முன்தினம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டத்தை அடுத்த செம்மண்ணாற்றில் ஊராட்சி நிர்வாகம் … Read more

"புஷ்பா'னா ப்ளவர்'னு நெனச்சியா ஃபயர் டா".. சைமா விருதுகளை அள்ளிய ‘புஷ்பா’!

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கு திரையுலகில், அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA – South Indian International Movie Awards) விழா. தேசிய விருதைப் போன்று, இந்த விருதும் திரையுலகில் … Read more

நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

அகமதாபாத்: ‘நாட்டை உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் ஒன்றிய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய ஜெய்ஜவான், ஜெய்கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன் என்ற மந்திரத்தோடு முன்னேறி வருகின்றது. இந்த அமிர்த காலத்தில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்றுவதற்கு … Read more

“வெளிப்படைத்தன்மை வேண்டும்”.. 5 எம்பிக்கள் கடிதம்.. காங். தலைவர் தேர்தலில் புதிய அறிவிப்பு

5 எம்.பி.க்களின் கடிதம் எதிரொலியாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு வாக்களிப்போரின் பட்டியல் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி உறுதியளித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. இந்த தேர்தலில் 9,000 நிர்வாகிகள் வாக்களிப்பார்கள் என்றும் அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் … Read more

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் 19 பேர் உயிரிழப்பு

மும்பை: கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதியாக நேற்று முன்தினம் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகளை கரைத்த போது, வார்தா மாவட்டம் சவாங்கி கிராமத்தில் நீரில் மூழ்கி 3 பேரும் தேவ்லி நகரில் ஒருவரும் உயிரிழந்தனர். அகமது நகரில் 2 பேரும் ஜல்கான் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுபோல மாநிலத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது விபத்து மற்றும் நீரில் மூழ்கி … Read more

அந்த இடத்தை அப்படியே வெட்டிய காதலன்! பிளாக்மெயில் செய்த காதலனுக்கு தண்டனை – தன்பாலின காதலில் கொடூரம்

உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், 32 வயதான இளைஞர் ஒருவரும், 30 வயதான இளைஞரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் பரேலி மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சில நாட்களுக்கு முன், பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் தனியாக இருந்ததை, 30 வயதான இளைஞர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.  மேலும், அந்த வீடியோவை வைத்து 32 வயதான இளைஞரை அவர் … Read more

பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பூசாரி ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரது தந்தை அளித்த … Read more