வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி; வணிக பயன்பாட்டுக்காக குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வீடு வாடகைக்கு எடுத்தால் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. வாடகைதாரர்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என செய்திகள் பரவியதை அடுத்து ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

அக்னிபாத் திட்டத்திற்கான முதல் ஆள் சேர்ப்பு பேரணி புனேவில் தொடக்கம்.!

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 1/2 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அக்னிபாத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றுவார்கள் என்றும், அதில் 25 சதவிகித இளைஞர்கள் மட்டும் தான் கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு பணியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்றும், மீதமுள்ள 75 சதவிகிதம் இளைஞர்கள் … Read more

காதல் வதந்தி கசப்பில் முடிந்தது; பெயர், புகழுக்காக பொய் சொல்லும் நடிகை: ரிஷப் பன்ட் பதிவால் ஊர்வசி ரவுடேலா கடுப்பு

மும்பை: ரிஷப் பன்ட் – ஊர்வசி ரவுடேலா இடையிலான காதல் புகைச்சல் தற்போது மோதலில் முடிந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணி கிரிக்கெட் வீரருமான ரிஷப் பன்ட் – பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலாவி வருகின்றன. முன்னதாக, தொலைக்காட்சி நேர்காணலில் பேட்டியளித்த ஊர்வசி: ஆர்பி (ரிஷப் பன்ட்) என்ற நபர் என்னைப் பார்ப்பதற்காக ஓட்டல் லாபியில் பல மணி … Read more

கார், பைக், ஆட்டோ மோதல் குஜராத் விபத்தில் 6 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆனந்த் நகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார், பைக், ஆட்டோ ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆனந்த் நகர் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா கூறுகையில், ‘ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும், பைக்கில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ … Read more

பணக்காரர்கள் கடனை தள்ளுபடி செய்து ஏழைகள் மீது வரி விதிப்பு – முதல்வர் கேஜ்ரிவால் புகார்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜிரிவால் நேற்று கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட் ரூ.20 லட்சம் கோடியாக இருந்தது. இது இப்போது ரூ.40 லட்சம் கோடியாகி உள்ளது. மத்திய அரசு ஒரு புறம் பணக்காரர்கள் மற்றும் தங்களது நண்பர்களின் கடனை தள்ளுபடி செய்ய ரூ.10 லட்சம் கோடியை செலவிட்டதுடன் பெரிய நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளது. மற்றொரு புறம் ஏழைகள் வாங்கும் … Read more

தொங்கவிட்ட நிதீஷ் குமார்; தூக்கம் தொலைத்த பாஜக!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதாவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனாலும் நிதீஷ்குமார், பாஜக இடையே கருத்து ஒற்றுமை இல்லாததால், இரு தரப்பினரும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். இந்நிலையில் பாஜவுடன் கூட்டணியை முறிப்பதாக நிதீஷ் குமார் திடீரென அறிவித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது தான் உறவை முறிப்பதற்கான காரணம் என நிதீஷ் குமார் அறிவித்தது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு … Read more

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு: காமெடி நடிகர் சீரியஸ்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா (58), வழக்கம் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயக்கமடைந்தார். அவரை அங்கிருந்து மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுயநினைவு அற்ற நிலையில் உள்ள ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

ஆசிய கோப்பையை தட்டி தூக்குவாரா ரோகித் சர்மா? எப்படி இருக்கிறது இந்திய அணி? – முழு அலசல்

2022 ஆம் வருடத்திற்கான ஆசிய கோப்பை தொடர் இந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் ரோகித் சர்மா தலைமையில் சிறந்த முறையில் விளையாடி வரும் இந்திய அணி இந்த முறை ஆசிய கோப்பையை வெல்லும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர்களின் ஆசிய கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இந்தியா இருக்கிறது. இதற்கு முன்பு 2021 டி20 உலககோப்பைக்கான விருப்ப அணியாக இந்தியா இருந்த நிலையில் முதல் போட்டியிலேயே … Read more

தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களைக் கோரிய உத்தராகண்ட் பாஜக தலைவர் – சர்ச்சைக்குப் பின் விளக்கம்

லக்னோ: தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அது குறித்து விளக்கமளித்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு … Read more

தேசியக்கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பவும்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் விளக்கம்

உத்தரகாண்ட்: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை எடுத்துத் தனக்கு அனுப்புமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றவில்லை என்றால் மக்களின் தேசியம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றாத … Read more