பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாகக்கூறி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக கோயில் பூசாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பூசாரி ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அவரது தந்தை அளித்த … Read more

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: 45 பல்கலை.யில் மட்டுமே சேரலாம்

புதுடெல்லி: சீனாவில் மருத்துவம் படிக்கத் திட்டமிடும் மாணவர்கள், அங்கு என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறித்த அறிவுறுத்தலை இந்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். சீனாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கும், விசாக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அங்கு மருத்துவம் படித்த மாணவர்கள் நாடு திரும்பினர்.   சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

தமிழ்நாட்டுப் பெண்ணை கட்டிவைக்கிறோம்.. ராகுல் ரியாக்‌ஷன்!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தமிழகத்தின் மார்த்தாண்டத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பெண்கள் அவருக்கு தமிழ்நாட்டிலேயே பெண் பார்த்து திருமணம் முடித்துவைப்பதாகக் கூறிய சம்பவத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மார்த்தாண்டத்தில் அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை சந்தித்தார். அப்போது, அந்தப் பெண்கள் ராகுல் காந்தியிடம் உங்களுக்கு தமிழ்நாடு … Read more

சரிவர பணியாற்றாத காரணத்தால் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீசாரை லாக் அப்பில் அடைத்த எஸ்பி.!

பீகார் மாநிலத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களை சரிவர பணியாற்றவில்லை என கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாக் அப்பில் அடைத்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. நவடா நகர் காவல்நிலையத்தில் கடந்த 8ம் தேதி இரவு 9 மணிக்கு ஆய்வு நடத்த எஸ்பி கவுரவ் மங்க்லா வந்துள்ளார். அப்போது கோப்புகளை பார்வையிட்டபோது, சரிவர பணியாற்றாததை கண்டுபிடித்து லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து … Read more

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுவடைந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை … Read more

`இயேசுதான் உண்மையான கடவுள்’- ஜார்ஜ் பொன்னையா ஆடியோவால் ட்விட்டரில் மோதும் பாஜக – காங்.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோவொன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், `இயேசுதான் உண்மையான கடவுள்… சக்தி அல்ல’ என்றுள்ளார். அக்கருத்துதான் சர்ச்சைக்கு தொடக்கமாக இருந்துள்ளது. ராகுல் காந்தி தனது பாரத ஒற்றுமை யாத்திரையின் ஒருபகுதியாக, நடைபயணத்தின்போது பலரையும் சந்தித்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்துள்ளார். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகியிருந்தது. அந்த வீடியோவின் குறிப்பிட்ட ஒருபகுதியின்படி, ராகுல் … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் – சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22-ம் தேதி வெளியாகிறது. 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். போட்டி ஏற்படும் நிலையில் அக்டோபர் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு … Read more

கேரளா வந்தாச்சு… ஆசையாய் ஓடிவந்த இளைஞர்கள்; ராகுலுக்கு டபுள் சர்ப்ரைஸ்!

உறங்கி கிடக்கும் காங்கிரஸ் தொண்டர்களை தட்டி எழுப்பவும், சனாதன சக்திகளை ஒடுக்கவும் வீறு கொண்டு எழுந்திருக்கிறார் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டியுள்ளனர். குமரி முதல் இமயம் வரை ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) என்ற பெயரில்12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாத யாத்திரையை தொடங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கன்னியாகுமரியில் ராகுலின் பாத யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க … Read more

மரத்தில் இருந்த சிறுத்தை புலியை விரட்டி அடித்த தெரு நாய்கள்.. வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில், மரத்தில் இருந்த சிறுத்தை புலியை தெரு நாய்கள் விரட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே இருக்கும் மரத்தின் மீது சிறுத்தை புலி ஒன்று அமர்ந்திருந்தது. இதனை கவனித்த 2 தெரு நாய்கள் சிறுத்தை புலியை பார்த்து சத்தமாக குரைக்க ஆரம்பித்தன. இதனால் மரத்தை விட்டு கீழே இறங்கிய சிறுத்தைப்புலி  அந்த 2 நாய்களையும் தாக்க முயற்சி செய்தது. ஆனால் நாய்கள் இரண்டும் சிறுத்தை புலியிடம் … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவானது

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை உருவாகியுள்ளது. மேற்குமத்திய – வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை வலுவடைந்தது.