கடற்கரையில் 76 டன் குப்பை ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனருக்கு தடை: முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களுக்கு நேற்று முதல் தடை விதித்து முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ‘பார்லே பார் தி ஓஷன்ஸ்’ என்ற அமைப்புடன் ஆந்திர அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் பங்கேற்று பேசுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொருளாதார முன்னேற்றமும் நாணயத்தின் இரு பக்கம். உலகின் மிகப்பெரிய கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் இன்று (நேற்று) நடந்தது. இதில், ஒரே … Read more

பீகார் பேரவை ஒத்திவைப்பு

பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அதன் கூட்டணியை முறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. நிதிஷ் தனது  பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிதிஷ் பெரும்பான்மையை நிரூபித்தார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அவாத் பிகாரி சவுதாரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தேதி … Read more

‘‘விரைவில் புதிய கட்சி’’ – குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விலகி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். இதனிடையே, காங்கிரஸில் … Read more

ஏற்றுக்கொள் அல்லது வெளியேறு மக்களை எச்சரிக்கும் வாட்ஸ்அப் தந்திரம்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனர்களை கட்டாயப்படுத்துவதாக வாட்ஸ் அப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்று கொள்ளாத பயனர்களின் கணக்கு, பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் நீக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்தது சர்ச்சையானது. இதனிடையே, இதன் தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் வாட்ஸ் அப் பகிர்வதாக குற்றம்சாட்டிய பயனர்கள், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறினர். வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை எதிர்த்து, டெல்லி உயர் … Read more

பணம் வரும்… எடுக்க முடியாது ஏடிஎம்களில் இப்படியும் திருடுறாங்க ஜாக்கிரதை

திருவனந்தபுரம்: கேரளாவில் எம்டிஎம்.மில் இருந்து வடநாட்டு கும்பல் நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளது. கேரள  மாநிலம், கொச்சியில் ஒரு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்.களில் வாடிக்கையாளர்கள், கார்டை போட்ட பிறகு பணம் வருவது இல்லை. இதனால், பணமில்லை என்று திரும்பி சென்று விடுவார்கள். ஆனால், அவர்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வரும். இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின் பேரில், வங்கி அதிகாரிகள் ஏடிஎம்.களில் இருந்த கண்காணிப்பு  கேமராவை சோதித்தனர். அப்போது, சில மர்ம … Read more

குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது: உமர் அப்துல்லா ட்வீட்

ஸ்ரீநகர்: சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் விலகல் வேதனையளிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய,பழமையான கட்சி நிலைகுலைவதை பார்ப்பதற்கு கவலையாகவும், பயமாகவும் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலவசங்கள் வழங்க தடை கோரி வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: ஓய்வு பெறும் நாளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். தனது கடைசி நாள் பணியில், தேர்தல் இலவசங்கள் வழங்க தடை கோரிய வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு அவர் மாற்றினார். தேர்தலின் போதும், அதற்குப் பிறகும் அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்க தடை விதிக்கக் கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வாறு வழங்கப்படும் இலவசங்கள், மக்களுக்கு வாழ்க்கையை உயர்த்தும் நலத்திட்டங்களே என்பதால் தடை விதிக்கக் கூடாது என திமுக, … Read more

பிரபலமான உலகத் தலைவர்கள்.. பைடனை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பிரதமர் மோடி!

பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட MORNING CONSULT என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆகஸ்ட் 17 முதல் 23 வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவிகித ஆதரவுடன், பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரடார் (ANDRES MANUEL LOPEZ OBRADOR) 63 சதவிகிதத்துடன் … Read more

மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

அவுரையா: உத்தரபிரதேசத்தில் மனைவி, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரையாவை சேர்ந்த உரக்கடை உரிமையாளர் சந்தீப் போர்வால் (52), அவரது மனைவி மீரா போர்வால் (48) மகன் சிவம் போர்வால் (26) ஆகிய மூன்று பேரும் தங்களது மேல்மாடியில் இருந்தனர். நீண்ட நேரமாகியும் வீட்டிற்குள் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த … Read more

பஞ்சாபி பாடலுக்கு ஒரே நேரத்தில் நடனமாடிய இந்தியா – பாக். ராணுவ வீரர்கள் – வைரல் வீடியோ

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. பஞ்சாபி பாடகர்கள் சித்து மூஸ்வாலா மற்றும் அம்ரீத் மான் ஆகிய இருவரும் சேர்ந்து பாடிய ‘பாம்பிஹா போலே’ என்ற பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை டெல்லி காவல்துறை அதிகாரி … Read more