பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை: பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு

பாட்னா: பிரதமராகும் எண்ணம் மனதில் இல்லை, மக்களுக்கு உழைப்பதே என் கடமை என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது மிக முக்கியம், அதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தெலங்கானா மாநிலத்தில் களம் இறங்கும் சுனில் பன்சால் – அடுத்த பேரவைத் தேர்தலில் அமித் ஷாவின் வியூகம் பலிக்குமா?

ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க பாஜக மும்முரமாக செயலாற்றி வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்ததில் இருந்து அங்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியே 2 முறை ஆட்சியை பிடித்து சந்திரசேகர ராவ் முதல்வரானார். இம்முறை ஆளும் கட்சிமீது உள்ள அதிருப்தி, பல திட்டங்களை அமல்படுத்தாதது, வேலை வாய்ப்பை உருவாக்கி தராதது, 2 படுக்கை அறை இலவச வீடு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதது போன்ற … Read more

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு…

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவித்துள்ளது. கூடுதல் எஸ்.பி. கனகேஸ்வரி, ஆய்வாளர் கே.அமுதா, எஸ்.சசிகலா, பாண்டிமுத்துலட்சுமி, எஸ்.ஐ. செல்வராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புலனாய்வில் சிறப்பான சேவை புரிந்ததற்காக 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.

2024-ல் மக்களவையுடன் பிஹார் பேரவை தேர்தல் – நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகி, பிஹாரில் 8-வது முறையாக முதல்வரான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தி படைத்தவராக கருதப்படுகிறார். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் ஜேடியு மீண்டும் இணைந்தது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏனெனில், 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. கடைசியாக குடியரசு … Read more

ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி; யானைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். யானைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பண்பாட்டோடும் பண்டிகைகளோடும் கலந்து விட்டவை. பலமிக்க யானை அன்பிற்கு கட்டுபட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையின் அன்பை பெற, ஆசியை பெற ஆசைப்படுவதுண்டு. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த … Read more

'நடிகர் முனாவரை தாக்குவோம்; அரங்கிற்கு தீ வைப்போம்' – பாஜக எம்எல்ஏ பகிரங்க மிரட்டல்

நடிகர் முனாவர் ஃபாரூக்கி ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்டாண்ட் அப் காமெடியனான நடிகர் முனாவர் ஃபாரூக்கி, கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் முனாவர் ஃபாரூக்கி, நிகழ்ச்சி நடத்தும் … Read more

ஹைதராபாத் காதலனை சந்திக்க இந்தியா வந்த பாகிஸ்தான் காதலி – பிஹாரில் கைது செய்து விசாரணை

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து வந்த காதலியை, பிஹார் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத் பகதூர்பூர் பகுதியை சேர்ந்தவர் அகமது (30). இவர் சவுதியில் பணியாற்றுகிறார். இவருக்கும் பாகிஸ்தான் பைசலாபாத்தை சேர்ந்த கதியா நூர் (26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறி ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளனர். அதற்கு ஹைதராபாத்தில் வசிக்கும் சகோதரர் முகமதுவின் உதவியை நாடினார் அகமது. … Read more

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் சென்ற கார் டயர்கள் வெடித்து விபத்து; காயமின்றி உயிர் தப்பினார்..!!

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா பயணம் செய்த காரின் 2 சக்கரங்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் எந்தவித காயமுமின்றி அவர் உயிர் தப்பினார். விஜயம்மா என்று ஆந்திர மக்களால் அழைக்கப்பட கூடிய ஜெகன் மோகனின் தாயார் விஜயலட்சுமி, நேற்று தனது கணவரின் நண்பரான ஐபாபு ரெட்டியின் குடும்பத்தினரை பார்க்க காரில் கர்னூல் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பி செல்லும் போது புத்தி பெட்ரோல் நிலையம் அருகே திடீரென … Read more

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் | புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுப் படுகொலை

பந்திப்போரா: காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். நேற்று காலை (ஆக..11 காலை) ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பந்திப்போரா மாவட்டத்தில் சும்பால் எனும் பகுதியில் பிஹாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வீட்டில் இருந்த முகமது அம்ரேஸ் என்ற அந்த நபரை தீவிரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்து … Read more

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிப்பு

பாரிஸ்: காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதுக்கு சசி தரூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.