சீனாவில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை.!

சீனாவில் மருத்துவப் படிப்பு தொடர்பான எச்சரிக்கை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அவசியம் என்று மத்திய அரசு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கட்டாய சீனமொழி பயிலுதல், தகுதித்தேர்வில் தேர்ச்சி , கட்டாய நீட் தேர்வு தகுதி என்று பல்வேறு கட்டாயத் தகுதிகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதையும் இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது. சீன பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும்நிலையில், மாணவர்கள், நன்கு திட்டமிட்டு பயணத்தைத் தொடங்குமாறு இந்திய தூதரகம் … Read more

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உயிரிழப்பு

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ(83) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

திருப்பதி லட்டுவில் சர்க்கரையை குறைக்க வேண்டும் – சர்க்கரை நோயாளி பக்தர் வேண்டுகோள்

திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இதில் 30 பக்தர்கள் நிறை, குறைகளை அதிகாரியிடம் தெரிவித்தனர். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும் போது, திருமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று … Read more

பக்கத்து வீட்டுக்காரரின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நாய்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர் சங்கர் பாண்டே. இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்த்து வருகின்றார். சங்கர் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பர் சங்கல்ப் நிகாம். இந்நிலையில் கடந்த 3ம் தேதி ஜாக்ரானில் இருந்து இரவு 10.30 மணிக்கு சங்கல்ப் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சங்கரின் நாய், சங்கல்ப்பின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ளது. இதனால் அவர் கூச்சலிட்டு அலறி துடித்துள்ளார். இதனை தொடர்ந்து தானாகவே சங்கல்ப், லோக் பந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கேஜிஎம்யூ … Read more

அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு வழிவகுத்த யாத்திரைகள் – தென் மாநிலங்களில் 129 தொகுதிக்கு ராகுல் இலக்கு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ’ எனும் இந்தியாவை இணைக்கும் தேசிய ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கி உள்ளார். 2 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 12 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரையில் 22 முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 129 மக்களவை தொகுதிகளில் 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், காங்கிரஸின் சிக்கலான காலங்களில் தென் மாநிலங்களே அக்கட்சிக்கு பக்க பலமாக … Read more

பீகார் அரசு புது திட்டம் வளையல்களாக மாறும் பறிமுதல் மதுபாட்டில்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார்  தலைமையிலான அரசு மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் அதிகளவில் மதுபாட்டிகள் பிடிபடுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரத்தால் உடைக்கப்படுகின்றன. இதனால் பெரும் கண்ணாடி கழிவுகள் ஏற்படுகின்றது. இவற்றை அகற்றுவதில் சிக்கல்கள் எழுகின்றன. இந்நிலையில் பறிமுதல் செய்யும் மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஜீவிகா திட்டம் என்ற புதிய திட்டத்தை பீகார் அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கண்ணாடி … Read more

நேபாள எல்லையில் மேக வெடிப்பால் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 மாடி கட்டடம்

இந்தியா மற்றும் நேபாள எல்லையில் பித்தோராகர் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் மூன்று மாடி கட்டிடம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள தார்ச்சுலா நகரில் வெள்ளிக்கிழமை இரவு மேக வெடிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தரை பகுதிகளில் உள்ள மண் தடுப்புகளில் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக ஆற்றின் நீர்மட்டமும் அங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இதையும் படிங்க: ’26/11 மும்பை தாக்குதலில் எனது மகன்கள், … Read more

இலங்கையில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியா கடனுதவி..!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு உதவ முன்வந்துள்ளது. பள்ளிப் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான கடனுதவியை அளிப்பதாக இந்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக இலங்கை கல்வித்துறை அமைச்சர் சுசில் பிரேமஜனதா கொழும்புவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நோட்டு பாடப்புத்தகங்களை அச்சிடத் தேவையான மை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவின் கடனுதவி மூலம் பெறப்படும் என்றும் அவர் கூறினார். வரும் ஜனவரி மாதம் அச்சுப்பணிகள் முடிந்து, மார்ச் முதல் தொடங்கும் கல்வியாண்டின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்  விநியோகிக்கப்படும் என்று இலங்கை அரசு … Read more

பாதாம் பருப்பை திருடியதாக சிறுவனை மரத்தில் கட்டி சரமாரி அடி: மபி மதகுரு வெறிச்செயல்

சாகர்: மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியில் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டதாக தெரிகின்றது. இதனை பார்த்த மத குரு ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளார். மேலும் சிறுவனை அவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனிடையே தகவல் அறிந்த சிறுவனின் தந்தை அவனை மீட்டதோடு சம்பவம் குறித்து மோதிநகர் காவல்நிலையத்தில் … Read more

பஞ்சாப் பாடகர் மூசேவாலாவை கொன்ற 6வது நபர் கைது

சண்டிகர்: பிரபல பாடகர் மூசேவாலா கடந்த மே 29ம் தேதி பஞ்சாப்பில் உள்ள மான்சா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் செய்தது தெரியவந்தது. அதன்படி குற்றவாளிகளான  பிரியவ்ரத் பௌஜி, காஷிஷ் மற்றும் அங்கித் செர்சா ஆகிய 3 பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மன்பிரீத் சிங் மற்றும் ஜக்ரூப் சிங் ரூபா ஆகிய 2 பேரை பஞ்சாப் போலீசார் சுட்டுக்கொன்றனர். மற்றொரு குற்றவாளியான … Read more