காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடமாட்டார்: காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

டெல்லி: காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடமாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவார் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது போட்டியிடமாட்டார் என தகவல் பரவிவருகிறது.

ஜப்பானில் பிரதமர் மோடி: ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார். கடந்த ஜூலை 8ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். ஜப்பானை அதிககாலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள அபேவிற்கு பிரம்மாண்டமான முறையில் இறுதிச்சடங்குகள் நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இறுதிச் சடங்கில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 50 நாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் … Read more

புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை தொடங்கி வைத்தார் திரவுபதி முர்மு

பெங்களூரு: உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை குடியரசுச் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பங்கேற்பதால் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, … Read more

8 மாநிலங்களில் உள்ள பிஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை

உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அந்தந்த மாநில போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம் – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால், பிரம்மோற்சவ விழா, மாட வீதிகளில் வாகன சேவைகள் நடத்தாமல் கோயிலுக்குள் மட்டுமே பக்தர்கள் இன்றி வாகன சேவையுடன் நடத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த பிரம்மாண்ட விழாவினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இம்முறை கோலாகலமாக நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று மாலை தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. … Read more

பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: பாஸ்போர்ட்டுக்கு போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழை ஆன்லைனில் பெறும் வசதி நாளை முதல் அறிமுகம் ஆகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பெறுவதில் பல நாட்கள் ஆகிறது. இதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து சான்றிதழ் பெறும் வசதியை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதையடுத்து தபால் அலுவலக … Read more

ஹவாலா பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு அபுதாபி ஓட்டலை பயன்படுத்திய பிஎஃப்ஐ – அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி: ஹவாலா நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள ஒரு ஓட்டலை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) பயன்படுத்தியது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் தலைவர் முகமது சபீக் பயத் கைது செய்யப்பட்டார். … Read more

போலி செய்தி பரப்பிய 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோ முடக்கம்

புதுடெல்லி: சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் மத நல்லிணக்கம் மற்றும் பொதுமக்கள் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை முடக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி 10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கி ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உளவு துறை தகவலின்அடிப்படையில் போலி … Read more

ஒன்றிய அரசு தடை விதிக்க கோரிய 50-60% டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை: டிவிட்டர் பரபரப்பு வாதம்

பெங்களூரு: ‘ஒன்றிய அரசு தடை விதிக்கக் கோரியதில் 50- 60 சதவீத டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை’ என டிவிட்டர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள் மற்றும் டிவிட்களை அகற்றுமாறு டிவிட்டருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ‘ஒன்றிய அரசின் இந்த உத்தரவு  கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாமல் குறிப்பிட்ட கணக்குகளை நீக்க உத்தரவிடக்கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை எதிர்த்து  ஒன்றிய … Read more

திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்: 3 அடுக்கு சோதனைக்கு பின் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரமோற்சவம் தொடங்க உள்ளதையொட்டி 3 அடுக்கு சோதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், கருட சேவையில் ஆரத்தியில்லை என்று முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, திருமலை அன்னமய்யா பவனில் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமூக விரோதிகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பக்தர்களின் … Read more