ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டம்

டெல்லி : ஒன்றிய அரசின் தடை உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தடையை அடுத்த பி.எஃப்.ஐ. தொடர்புடைய செயல்பாடுகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ!! 11 நாட்கள் தொடர் விடுமுறை..

டெல்லி ஐஐடி மாணவர்கள் இருவர் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் மீஷோ என்ற ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியை தொடங்கினர். அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற பிரபல ஷாப்பிங் நிறுவனங்கள் மத்தியில், சந்தையில் நுழைந்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது மீஷோ நிறுவனம். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத் தள்ளுபடி விற்பனை தணிந்தவுடன், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களுக்கும் 11 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. We’ve announced … Read more

'மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத்தான் தடை செய்ய வேண்டும்' – கேரள சிபிஎம் கருத்து

திருவனந்தபுரம்: மதவாத சக்திகளை தடை செய்வதென்றால் முதலில் ஆர்எஸ்எஸ்ஸை தான் தடை செய்ய வேண்டும் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் … Read more

மைனர்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்! தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்

புதுடெல்லி: 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்னரே, பதின்ம பருவத்தினர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகளை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்திலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, வசதிகளை செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஜனவரி 1, 2023 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 18 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வாக்காளர் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,615 பேருக்கு கொரோனா… 22 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 3,615 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,79,088-ஆக உயர்ந்தது. * புதிதாக 22 பேர் … Read more

நாட்டிலேயே குறைவான விகிதம்… தமிழ்நாட்டில் தொடர் சரிவில் கருவுறுதல் விகிதம்!

தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்களில் மொத்த கருவுறுதல் இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் ஆண்டுதோறும் மாதிரி பதிவு அறிக்கையை  வெளியிடுவது வழக்கம். கருவுறுதல் விகிதம், இறப்பு விகிதம் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிடும் இந்த அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.4 ஆக சரிந்துள்ளது. 2011 ல் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.8 ஆக இருந்தது. இதையடுத்து தற்போது நாட்டிலேயே மிகவும் குறைவான விகிதத்தை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. … Read more

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் – வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் சசி தரூர்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 30-ம் தேதி சசி தரூர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் … Read more

மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India -PFI) மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும்  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த  தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். நேற்றும், உத்தரப்பிரதேசம், … Read more

காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்தது பாதுகாப்பு படை

காஷ்மீர்: காஷ்மீரில் இரு வேறு இடங்களில் 3 தீவிரவாதிகளை பாதிப்பு படை பிரிவினர் சுட்டுக்கொலை செய்தனர். குல்காம் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

இந்த செய்தி உங்களை அதிரவைக்கலாம்: சூனியம் வைத்தாக வாயில் மலத்தை திணித்த பயங்கரம்!

மாந்திரீகம், சூனியம் செய்ததாக குற்றஞ்சாட்டி 3 பெண்கள் உட்பட நான்கு பேரை சூடான இரும்புக் கம்பியால் தாக்கி, அவர்களது வாயில் சிறுநீரை ஊற்றி, மலத்தை உண்ண வைத்த கோர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது. ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள சரையாஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்வரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள சரையாஹத் காவல்நிலைய ஆய்வாளர் நேவல் கிஷோர் சிங், “மந்திர மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று … Read more