ஒன்றிய அரசு தடை விதிக்க கோரிய 50-60% டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை: டிவிட்டர் பரபரப்பு வாதம்

பெங்களூரு: ‘ஒன்றிய அரசு தடை விதிக்கக் கோரியதில் 50- 60 சதவீத டிவிட்கள் தீங்கு ஏற்படுத்தாதவை’ என டிவிட்டர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள் மற்றும் டிவிட்களை அகற்றுமாறு டிவிட்டருக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. ‘ஒன்றிய அரசின் இந்த உத்தரவு  கருத்து சுதந்திரத்தை மீறுவதாகும், சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பாமல் குறிப்பிட்ட கணக்குகளை நீக்க உத்தரவிடக்கூடாது’ என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை எதிர்த்து  ஒன்றிய … Read more

திருப்பதி கோயிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்: 3 அடுக்கு சோதனைக்கு பின் அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பிரமோற்சவம் தொடங்க உள்ளதையொட்டி 3 அடுக்கு சோதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், கருட சேவையில் ஆரத்தியில்லை என்று முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் இன்று தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, திருமலை அன்னமய்யா பவனில் முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சமூக விரோதிகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பக்தர்களின் … Read more

சச்சின் பைலட்டை முதல்வராக்க எதிர்ப்பு – ராஜஸ்தானில் 82 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கெலாட் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், குழப்பத்துக்கு காரணமான அவரை கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசி … Read more

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் விரிவாக விசாரிக்க வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தை தசரா விடுமுறைக்கு பின்னர் விரிவாக விசாரிப்பதாக கூறி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி தாளாளர் உட்பட 4 பேருக்கு கடந்த மாதம் ஜாமீன் … Read more

நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்

புதுடெல்லி: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் மூலம் பலவகைகளில் ஆதாயம் அடைந்ததாக கூறியுள்ளது. இந்த பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14ம் தேதி விசாரணைக்காக … Read more

மகேஷ் பாபு படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

ஐதராபாத்: மகேஷ்பாபுவின் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. தோர், அவெஞ்சர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். பிரபல நடிகரான இவரை முதல்முறையாக இந்திய படத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் டைரக்டர் ராஜமவுலி. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் ராஜமவுலியின் அடுத்த படம் தொடங்க உள்ளது. இதில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. … Read more

பெண் நிருபரிடம் ஆபாசம் மலையாள நடிகர் கைது

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்கு ஸ்ரீநாத் பாசி பேட்டி கொடுத்தார். ஒரு பெண் நிருபர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கேட்ட சில கேள்விகள் ஸ்ரீநாத் பாசிக்கு பிடிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், கேமராவை ஆப் செய்யுமாறு கூறிவிட்டு, அந்த பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி … Read more

ரூ.814 கோடி கருப்பு பண விவகாரத்தில் அனில் அம்பானி மீது நடவடிக்கைக்கு தடை

மும்பை: வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 8ம் தேதி ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், அனில் அம்பானி வேண்டும் என்றே ஸ்விஸ் வங்கியில் 2 வங்கி கணக்கில் உள்ள ரூ.814 கோடி பணம் குறித்து வருமான வரித்துறையிடம் மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் கங்காபுர்வாலா, ஆர்.என். லத்தா ஆகியோர் … Read more

ராணுவ வீரர்களுடன் கால்பந்து விளையாட்டு.. வியப்பில் ஆழ்த்திய காட்டு யானை!

ராணுவ வீரர்கள் முகாமிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அவர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடி அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அசாம் மாநில கவுகாத்தியில் ராணுவ முகாம் உள்ளது. காட்டுப்பகுதியான அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிகமாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், கால்பந்து விளையாட தீர்மானிப்பதற்கு முன்பு யானை முதலில் சாலையை கடந்துவருகிறது. அதை பார்த்த வீரர்கள் உடனடியாக யானையிடமிருந்து சற்று விலகி நிற்கின்றனர். விளையாட்டு மைதானத்துக்குள் வரும் முன் தன்மீது புழுதியை அள்ளி … Read more

தமிழக கவர்னர் 5 நாள் பயணமாக டெல்லி சென்றார்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி சென்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையை தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட சில இடங்களில் பாஜ, இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் … Read more