நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி

காத்மண்டு: உலக நாடுகளில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, கொரோனா வைரசின் 4வது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 1,090 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. இதுபற்றி காத்மண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ‘4வது அலையை சுகாதார அதிகாரிகள் எதிர்கொண்டு வரும் சூழலில், கடந்த 2 மாதங்களில் … Read more

அதற்குள் அடுத்த சர்ச்சையா! இலங்கை விரையும் பாக். போர்க்கப்பல் – வலுக்கும் எதிர்ப்பு

சீன கடற்படையின் உளவு கப்பலான யுவான் வாங் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச இலங்கை அனுமதிக்க கூடாது என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு செல்வது அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தைமூர் என அழைக்கப்படும் இந்த பாகிஸ்தான் நாட்டு போர் கப்பல் சீனாவில் கட்டுமானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா நாட்டிலிருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கும் தைமூர் கப்பல், பங்களாதேஷ் நாட்டில் உள்ள சட்டோகிராம் என்கிற துறைமுகத்தில் நிறுத்த … Read more

சமூக நலத் திட்டங்களும் இலவசங்களும் வெவ்வேறானவை: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை மத்திய அரசால் நடத்த முடியாமல் போகலாம். எந்தவொரு அரசியல் கட்சிகளும் இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு விரும்பாமல் … Read more

கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறப்பு

திருமலை: கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசைலம் அணை நிரம்பி உள்ளது. இந்த காலநிலையில் முதன்முறையாக 10 மதகுகள் 10 அடி உயர்த்தப்பட்டு நாகார்ஜூனா சாகருக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஸ்ரீசைலம் அணைக்கு ஜூராலாவில் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 558 கன அடி … Read more

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய “செவாலியே” விருதை பெற்றார் காங். எம்.பி. சசி தரூர்!

காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது எழுத்து மற்றும் பேச்சுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றுள்ளார். திருவனந்தபுரம் மக்களவை தொகுதியை காங்கிரஸ் எம்பியான சசி தரூர் மிகச்சிறந்த எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் அறியப்படுகிறார். சிக்கலான பல ஆங்கில வார்த்தைகளை எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்தி பலரது சிந்தனைக்கு தீனிபோடுவது அவரது இயல்பாகும். “இந்தியாவின் இருண்ட காலம் – இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம்” (An Era of Darkness: The British Empire … Read more

“விலங்குகள் கூட இந்த உணவை சாப்பிடாது” – கண்கலங்கிய உ.பி காவலர் | வைரல் வீடியோ

ஃபிரோசாபாத்: தங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர். அந்த வீடியோ இப்போது வைரலாகி, பலரது கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் உணவின் தரம் குறித்து தனது அதிருப்தியை காவலர் மனோஜ் குமார் என தெரிவித்துள்ளார். அவர் தனக்கு வழங்கப்பட்ட உணவை கையில் ஏந்தியபடி சாலையில் பயணித்த மக்களிடம் அதனை காண்பித்துள்ளார். அதோடு சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் அமர்ந்தபடி தர்ணா போராட்டத்திலும் … Read more

உத்தரபிரதேசம் யமுனா நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாண்டா பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். யமுனா நதியில் சென்று கொண்டிருந்த படகு பழுது காரணமாக நீரில் கவிழ்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கிய 40-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. 

ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற மக்களை ஊக்குவிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வீட்டுக்கு வீடு தேசியக் கொடி என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தேசப்பக்தி உணர்வை ஏற்படுத்துவதும், நாட்டுக்காக அயராது உழைத்தவர்களின் பங்களிப்பை நினைத்து பார்க்கச் செய்வதும்தான் இந்த நடவடிக்கையின் நோக்கம். அதனால் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் … Read more

பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!

பாட்னா: குடியரசு துணை தலைவர் பதவி கனவு நிறைவேறாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனம் நகைப்புக்குறியது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாரதிய ஜனதா உடனான உறவு முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் ஆர்.ஜே.டி.யின் மகா கூட்டணியில் இணைந்து 8வது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே, நிதிஷ்குமாரின் விலகல் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட நிதிஷ்குமார் விரும்பியதாக தெரிவித்தார். … Read more

மசினகுடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது..!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  மேலும் ஊட்டியில், அருகே உள்ள கிளென் மார்கன் அணை அதன், முழு கொள்ளளவை எட்டியதால், அணையிலிருந்து சுமார் 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, வெள்ளப்பெருக்கு காரணமாக மசினகுடி தரைப்பாலம் முழுவதும்  மூழ்கியுள்ளது. இதனால், அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link