நொய்டா இரட்டை கோபுரங்கள் – 28-ம் தேதி வெடிவைத்து தகர்ப்பு

நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் எமரால்டு கோர்ட் வளாகத்தில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பெயரில் பிரமாண்டமான இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. இதில், அபெக்ஸ் எனும் கட்டிடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், சியான் எனும் கட்டிடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் கொண்டவை. இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றை இடிக்க உத்தரவிட்டது. அந்த இரட்டை கோபுரங்களை இடிக்கும் பணி … Read more

பெல், எல் அண்ட் டி உட்பட 544 இந்திய நிறுவனங்கள் விக்ராந்துக்கு பங்களிப்பு

கொச்சி: உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தயாரிப்பில் 544 இந்திய நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்தியாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், வரும் செப்டம்பர் 2ம் தேதி கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடற்படை துணை அட்மிரல் ஹம்பிஹோலி கூறியதாவது:இந்திய கடற்படையில் விக்ராந்த் சேர்ப்பது மேக் இன்  இந்தியா முயற்சிக்கான ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பல் தயாரிக்கும் நாடுகளின் … Read more

திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டை – விரைவில் மத்திய அரசு அறிமுகம்

புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டு அட்டையை விரைவில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவில் திருநங்கைகள் தொடர்பான விவகாரங்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருநங்கைகளை சமூகத்தின் முக்கிய அங்கமாக கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சகம் சார்பாக திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, திருநங்கைகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தேசிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் திருநங்கைகளுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டம் வழங்க … Read more

பாகிஸ்தானை அம்பலப்படுத்திய தீவிரவாதி: கொல்ல வந்தவனுக்கு உயிர் கொடுத்த இந்திய ராணுவம்

Pakistan Army Exposed: ரஜோரியின் நவ்ஷேரா செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஆகஸ்ட் 21 அன்று நடந்த என்கவுன்டரில் பிடிபட்ட தபாரக் ஹுசைன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்கள் அம்பலமானது. 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, இந்திய ராணுவத்தை தாக்கும் வேலையை கொடுத்ததாக அந்த பயங்கரவாதி தெரிவித்தது, இந்தியாவின் அண்டை நாட்டின் கெட்ட எண்ணத்தை வெளிப்படுத்தியிஅது. தான் தற்கொலை குண்டுதாரியாக அனுப்பப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனுஸ் சுமார் 30,000 ரூபாய்க்கு தன்னை பணியமர்த்தியதாகவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதி தபாரக் ஹுசைன் … Read more

திகாரில் இருந்து சுகேஷ், மனைவி லீனா இன்று சிறை மாற்றம்

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரும், அவரது மனைவியும்  டெல்லி திகார் சிறையில் இருந்து மண்டோலி சிறைக்கு இன்று மாற்றப்பட உள்ளனர். அதிமுக.வின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை செய்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவரும், இவருக்கு உடந்தையாக இருந்த மனைவியான நடிகை லீனா மரியா பாலும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த … Read more

காங்கிரஸ் தலைவர் பதவி | ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு – தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் முடிவு?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். அவர் டெல்லி திரும்புவதற்கு முன் உடல்நலம் சரியில்லாத தனது தாயாரை சென்று பார்த்து வருவார். சோனியாவுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்கின்றனர்” என்று கூறியுள்ளார். தேதி தெரியவில்லை சோனியா காந்தி எந்த தேதியில் வெளிநாடு செல்கிறார். … Read more

தேர்தல் இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டலாமே?… உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: தேர்தல் இலவசம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், இதற்காக ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டலாமே? என கேள்வி எழுப்பி உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்கள் அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒன்றிய அரசு, நிதி ஆயோக், சட்ட ஆணையம், … Read more

ஒப்பந்ததாரர்கள் புகார் அளிக்காதது ஏன்? – கர்நாடக முதல்வர் பசவராஜ் கேள்வி

பெங்களூரு: கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் குறித்து லோக் ஆயுக்தாவிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர் கெம்பண்ணா கூறுகையில், ”கர்நாடக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலர் அரசின் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்கின்றனர். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினேன். அவர் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த … Read more

என்டிடிவி பங்குகளை வாங்குவது வெட்ககேடு: அதானி மீது காங். ஆவேசம்

புதுடெல்லி: ‘என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் வாங்குவது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வெட்கக்கேடான செயல்,’ என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். என்டிடிவி என சுருக்கமாக அழைக்கப்படும் ‘புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்’ (என்டிடிவி) தொலைக்காட்சி நிறுவனம், என்டிடிவி 24×7, என்டிடிவி இந்தி மற்றும் என்டிடிவி லாபம் ஆகிய 3 தேசிய செய்தி சேனல்களை இயக்கி வருகிறது. இதன் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் ஏற்கனவே வேறு நிறுவனங்களின் மூலம் வாங்கி விட்டது. இதனிடம் இருந்து மேலும் … Read more

ஞானவாபி மசூதி வழக்கில் இருதரப்பு வாதம் முடிந்தது: செப். 12க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதி கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க … Read more