காமன்வெல்த் தொடர்: ‘பேட்டிங்கா இது?’ -இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை விமர்சித்த அசாரூதின்

காமன்வெல்த் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மகளிர் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 9 ரன்களில் தோல்வியடைந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின் விமர்சித்துள்ளார்.  இங்கிலாந்து பர்மிங்ஹாமில் நடந்துவரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, பார்படாஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் கலந்துகொண்டன. … Read more

மகாராஷ்டிர அமைச்சரவை நாளை விஸ்தரிப்பு – பட்னவிசுக்கு எந்த துறை?

மகாராஷ்டிர மாநிலத்தில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அக்கட்சி மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே, வேறு வழியில்லாமல், முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் … Read more

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆக்ஸ்ட் 12ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருந்தது. 

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆப்சென்ட்.. பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா நிதிஷ் குமார்?

இன்று (ஆக.8) ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. பீகாரில் தனது கட்சியை சேர்ந்தவர்களை வைத்து திட்டமிடப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நிதிஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பல ஆலோசனை கூட்டங்களில் நிதிஷ் பங்கேற்காததது அவரது அதிருப்தியை காட்டுவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி பாரதிய ஜனதா கட்சியுடன் கருத்து வேற்றுமைகள் … Read more

'சென்னைக்கு வந்து செட்டில் ஆகுங்க..!' – வெங்கையா நாயுடுவுக்கு திமுக எம்பி அழைப்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விடைபெற உள்ள வெங்கையா நாயுடு, சென்னையில் செட்டில் ஆக வேண்டும் என, திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்தியத் திருநாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து நடைபெற்ற குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கர் வெற்றி … Read more

மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிப்பு…

டெல்லி: பல்வேறு எம்.பி.க்கள் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மாநிலங்களவையின் இன்றைய அமர்வு இறுதி அமர்வு என அறிவிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

காமன்வெல்த் தொடர்: முதல் முறையாக தங்கம் வென்று பி.வி.சிந்து சாதனை

காமன்வெல்த் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்த 28-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்றுடன் இந்த விளையாட்டு போட்டிகள் நிறைவடைய உள்ளநிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையான பி.வி.சிந்து, கனடாவின் … Read more

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு!: பயங்கர நிலச்சரிவால் சாலைகளில் பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பால் கொட்டிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டியது. மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் பெய்த அதி கனமழையால் மலைக்கிராமங்கள் வெள்ள காடாகின. ஆங்காங்கே அருவிகள் போல வெள்ளம் கொட்டியதால் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக காஞ்வா பகுதியில் சாலைகள், பாலங்கள் மூடப்பட்டன. கனமழை, வெள்ளப்பெருக்கால் … Read more

இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 7 மாதத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: இரட்டைப் பதிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 7 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதாருடன் இணைக்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் குறித்த விரிவான டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதேநேரம் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதால் தனியுரிமை தொடர்பான தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.இந்நிலையில் கடந்த 7 … Read more

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்/போபால்: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்த போது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.விதிஷா மாவட்டம் அகசாத் … Read more