வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழைக்கு … Read more

பழங்குடியின மாணவர்கள் போராட்டம்: மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

இம்ப்பால்: மணிப்பூரில் உள்ள பழங்குடியின பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்க மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது திருத்தங்களுடன் சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது பழங்குடியின மக்களின் கோரிக்கைகளின்படி இல்லை. இதனால் புதிய மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கத்தினர் கடந்த சில நாட்களாக போாரட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் நேற்று முன்தினம் கண்டன பேரணி நடத்திய போது, அவர்களை போலீஸார் தடுத்து … Read more

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து இளம்பெண்ணை மிரட்டியதாகப் புகார்

நொய்டாவில் இளம் பெண்ணை மிரட்டி தாக்கிய வீடியோ வைரலானதையடுத்து தலைமறைவான பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகியின் அடியாட்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அந்தப் பெண்ணை மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. குடியிருப்பு வாசிகள் உறுதியுடன் நின்று ரவுடிகளை உள்ளே வர விடாமல் தடுத்துள்ளனர். இதையடுத்து தியாகி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனிடையே பாஜக எம்பி மகேஷ் சர்மா உத்தரப்பிரதேச உள்துறை செயலர் அவிநாஷ் அஸ்வதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு … Read more

விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு

டெல்லி: விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக் கொடுத்துள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மட்டும் கிள்ளிக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. விளையாட்டை விரிவுப்படுத்தவும், மற்றும் ஊக்கப்படுத்தவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மக்களவை எம்பிக்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் அழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் Khelo India எனப்படும் விளையாட்டு திட்டத்தின் கீழ் அதிகபட்சமா குஜராத்திற்கு ரூ.608 … Read more

பழி வாங்கும் குணமுடையவர் நிதிஷ் குமார்: கட்சியில் இருந்து விலகிய சிங் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹாரில் ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.சி.பி.சிங், ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் அவரது பதவி முடிந்தது. ஆனால், மறுவாய்ப்பு வழங்கவில்லை. இதன் காரணமாக மத்திய அரசில் உருக்கு துறை அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்த சூழலில் கடந்த 2013 முதல் 2022 வரை சிங் மற்றும் அவரது மனைவி, 2 மகள்கள் பெயரில் அதிக சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் … Read more

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு

பாட்னா: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்தாலும் நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆனதில் இருந்தே அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே உரசல்கள் தொடர்கின்றன. அண்மை காலமாக உரசல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் … Read more

மகாராஷ்டிர அமைச்சரவை ஆகஸ்ட் 15-க்குள் விரிவாக்கம்: உள்துறை பட்னாவிஸ் வசமாக வாய்ப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜக.வுடன் இணைந்து கடந்த ஜூன் 30-ம் தேதி புதிய அரசை அமைத்தனர். முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே வும் துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னா விஸும் பதவியேற்றனர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக் கம் செய்யப்படவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வருவதற்கு, தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட எதிர்க் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் … Read more

நிர்பயா வழக்கு எதிரொலி பலாத்கார குற்றங்களில் கொலைகள் அதிகரிப்பு; ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை கருத்து

புதுடெல்லி: ‘நிர்பயா வழக்குக்கு பின்னர் பலாத்காரத்துக்கு பின் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன’என்று  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘டெல்லியில் நிர்பயா பாலியல் மற்றும் கொலை வழக்குக்கு பிறகு  பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு,  பெண்கள்  அதிகளவில் கொல்லப்படுகிறார்கள். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் … Read more

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழப்பு: திட்டத்தில் பின்னடைவு – இஸ்ரோ

எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தவறான சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதால் அவை செயலிழந்ததாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இந்நிலையில், சர்வதேச விண்வெளி … Read more

மாணவ அமைப்பு போராட்டம்; மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூரில் மாணவ அமைப்புகளின் போராட்டம் காரணமக 5 நாட்களுக்கு இணைய சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் திருத்தம் மசோதா 2021 சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் மலை மாவட்டங்கள் வழியாக  செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கும் வகையில் காலவரையற்ற பொருளாதார  முற்றுகை போராட்டத்தை தொடங்கினர். இதனால், பள்ளத்தாக்கு பகுதிக்கான விநியோகம் … Read more