குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை – வீரர்களிடம் மனம் திறந்தார் ராஜ்நாத் சிங்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவும் சென்றுள்ளார். அங்கு அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரை சந்தித்த ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசியதாவது: நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். இதற்காக குறுகிய கால சேவையில் பணியாற்ற தேர்வும் எழுதினேன். அந்த நேரத்தில் என் தந்தை இறந்தார். எனது குடும்பத்தில் நிலவிய சில சூழல் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர … Read more

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பனாஜி: ‘கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்தில் கிராமப்புற வீடுகளில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதை கொண்டாடும் வகையில், பனாஜியில் நடந்த விழாவில் காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டுகளில் 3 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் … Read more

மைத்துனருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிஹார் அமைச்சர் தேஜ் பிரதாப்

பாட்னா: பிஹாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த புதன்கிழமை தேஜ் பிரதாப் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க லாலு மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதியின் … Read more

இரண்டு அல்ல; ஒன்று மட்டும்தான் பாங்காங் ஏரி பகுதியில் சீனா பிரமாண்ட பாலம்: 100 அடி அகலம் கொண்டது செயற்கைக்கோள் மூலம் உறுதி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியில் சீனா 2 பாலங்கள் கட்டி வருவதாக கூறப்பட்ட நிலையில், அங்கு அது ஒரு பாலத்தை மட்டுமே கட்டுவதாகவும், அது மிகவும் பெரியது என்றும் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியை 2 ஆண்டுகளுக்கு முன் சீன ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது, இந்திய ராணுவ வீரர்கள் அதை தீரத்துடன் முறியடித்தனர். இருப்பினும், இந்த ஏரிக்கு அருகில் உள்ள அசல் கட்டுப்பாடு எல்லை … Read more

மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க குறி கேட்ட போலீஸார் – வீடியோ வைரலானதால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க துறவியிடம் போலீஸார் குறி கேட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக ஆளும் ம.பி.யின் சத்ரபூரில் உள்ளது பமிதா காவல் நிலையம். கடந்த ஜுலை 28-ம் தேதி ஒண்டா பூர்வா கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் 12 வயது சிறுமியின் உடல் கிடந்தது. புகாரின் அடிப்படையில் ஐபிசி 302 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி கொலையில் எந்த … Read more

இரட்டை கட்டிடம் தகர்ப்பு 5 ஆயிரம் மக்கள் வெளியேற உத்தரவு

நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடத்தை இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி இதை வெடி வைத்து தகர்ப்பதற்கான ஏற்படுகள் மும்முரமாக நடக்கிறது. இதற்காக 3,500 கிலோ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்படும் நாளன்று காலை 7.30க்குள், அதை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரம் பேரை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அந்த பகுதியில் உள்ள 2500 … Read more

ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் தமிழகம், ஆந்திரா உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க மத்திய அரசு தடை

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா உள்பட 13 மாநிலங்கள் ரூ.5,085 கோடி பாக்கி வைத்திருப்பதால் அந்த மாநிலங்கள் மின் சந்தையில் மின்சாரம் வாங்கவும் விற்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்யவும், தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்வற்கும், மத்திய மின் சந்தையை நிறுவியுள்ளன. இந்த சந்தையை கண்காணித்து நிர்வகிப்பதற்காக, மத்திய மின்துறை அமைச்சகம் ‘பவர் சிஸ்டம் … Read more

போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு 24 ஆண்டுக்கு பின் மாஜி எம்எல்ஏ கைது

மோதிஹரி: பீகார் மாநிலம், கோவிந்த்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரஞ்சன் திவாரி. இவர், 1998ம் ஆண்டு உபி மாநிலம்  கோரக்பூரில் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். கடந்த 24 ஆண்டுகளாக நாடு முழுவதும் போலீசார் அவரை தேடி வந்தனர். அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும் அறிவித்தனர். இந்நிலையில், பீகார் – நேபாள எல்லையில் ரக்சோல் என்ற இடத்தில் திவாரியை  உபி., பீகார் போலீசார் நேற்று கைது செய்தனர். இது … Read more

காங். புதிய தலைவர் பதவி ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு: ராகுல் மனம் மாறாததால் குழப்பம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்தாண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான தேதி இன்று முதல் தொடங்குவதால், காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், … Read more

மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு ; டெல்லி துணை முதலமைச்சர் வீடு உள்பட 21 இடங்களில் சோதனை

மதுபானக் கடை உரிமம் வழங்குவதில் முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியா வீடு உள்பட 21 இடங்களில் சோதனை நடத்தியது. சில கலால்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அரசு மட்டுமே மதுபானக் கடைகள் நடத்தும் என்று புதிய மதுபானக் கொள்கையை அறிவித்த சிசோடியா, பின்னர் அதனை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். சிசோடியாவிற்கு நெருக்கமான நபர் நடத்தும் … Read more