காரின் சீட்டுக்கு அடியில் இருந்த சிறிய அறை – திறந்துப் பார்த்ததும் அதிர்ந்துபோன போலீசார்!

சென்னையிலிருந்து கேரளாவிற்கு காரில் கடத்தப்பட்ட 1 கோடியே 2 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து கேரளாவிற்கு கார் ஒன்றில் மறைத்து வைத்து கள்ளநோட்டுகள் கடத்தி செல்லப்படுவதாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இடுக்கி மாவட்டம் புளியன்மலைப் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் கடந்து செல்ல முற்பட்ட கேரள பதிவு எண் … Read more

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி

புதுடெல்லி: நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் வாரத்தில் அவர் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்பார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசுத் … Read more

EXCLUSIVE: BSNL-ஐ மத்திய அரசு இருட்டடிப்பு செய்வது இப்படி தான்!

தொலைதொடர்பு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்தது. ரூ 5 லட்சம் கோடி வரை இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு வருமானம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்தது. பாஜக அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதா என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இது ஒருபுறமிருக்க ஏன் … Read more

மகாராஷ்டிராவில் ரூ1,403 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்: ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பட்டதாரி கைது

மும்பை: மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் போதைப்பொருள் பதுக்கிய விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் காட்கோபர்-மன்குர்த் இணைப்புச் சாலையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெண் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேற்கண்ட 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் ஐந்தாவது … Read more

‘கருக்கலைப்பில் திருமணமாகாத பெண்ணிற்கு மட்டும் ஏன் பாரபட்சம்?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

திருமணம் ஆன பெண்ணைப் போல, திருமணம் ஆகாத பெண்ணிற்கும் கருக்கலைப்பில் இருக்கும் சட்டரீதியான உரிமையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அழுத்தமாக கூறியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முக்கியமான கருத்துக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு பதிவு செய்துள்ளது. இன்றைய விசாரணையின் போது, நீதிபதி சந்திரசூட், “18 வயதினை கடந்த மேஜர் ஆன, திருமணம் ஆகாத ஒரு பெண், தேவையற்ற கருவை சுமக்க நேர்ந்து அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் தருணத்தில், 24 வார கருவை … Read more

ஜார்கண்டில் நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த வழக்கு: இருவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

தன்பாத்: ஜார்கண்ட் மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தன்பாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி காலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், … Read more

வெளியானது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடிவு..!

தற்பொழுது குடியரசு துணைத் தலைவராக பதவி வகிக்கும் வெங்கையா நாயுடுவின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில் இந்திய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று வந்தது. குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) களத்தில் இருந்தனர். குடியரசுத் தலைவர் தோ்தலைப் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார். நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக 11ம் தேதி பதவியேற்கிறார் ஜெகதீப் தன்கர்.

பிரபல நடிகை சென்ற கார் தீப்பற்றி எரிந்தது.. ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை சென்ற கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயமடைந்த நடிகை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1997 முதல் 1998 வரையிலான காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஆனி ஹெச். எம்மி விருதுகள் பெற்ற புகழ்பெற்ற நடிகையான ஆனி ஹெச் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று தனது காரில் பயணித்தார்.அப்போது, மார் விஸ்டா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியதில் தீப்பிடிக்கத் தொடங்கியது. … Read more

கைதாகிறார் மீரா மிதுன்!!?

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் அளித்தது . சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை … Read more