மகாராஷ்டிரா | ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் தேவேந்திர பட்னாவிஸுக்கு நிதி, உள்துறை ஒதுக்கீடு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி சிவசேனா அதிருப்தி அணியும் பாஜகவும் இணைந்து புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், 41 நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 18 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்தசூழ்நிலையில், அதி முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மற்றும்நிதி இலாகாவை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு … Read more

Shivamogga: சுதந்திர தின விழாவில் வன்முறை: ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில், போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில், நாட்டின், 76வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஒரு தரப்பினர் பாஜகவினரால் போற்றப்படும் சாவர்க்கர் படத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு வந்த மற்றொரு தரப்பினர், சாவர்க்கர் பேனரை அகற்றி விட்டு, … Read more

சமீர் வான்கடேயின் சாதி விவகாரம்; சிறையில் உள்ள மாஜி அமைச்சர் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்கீழ் வழக்கு.! மகாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை

மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதான விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள மாஜி அமைச்சர் நவாப் மாலிக் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடற்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருட்களுடன் கூடிய விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான குழு அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக் … Read more

சவர்க்கர் Vs திப்புசுல்தான்.. வன்முறை எதிரொலி.. கர்நாடகாவின் சிவமொக்காவில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் சுதந்திர தினத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில்  வீரசவர்க்கார் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர வருடம் முடிந்து 76 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் வன்முறை ஏற்பட்டு 144 தடை உத்தரவு அமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. … Read more

சுதந்திர தினவிழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவி மீது அரசு பேருந்து மோதி பலி!!

இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை குரோம்பேட்டை ராஜேந்திராபுரம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் லட்சுமிஸ்ரீ (17) என்ற மாணவி ப்ளஸ் 2 படித்து வந்தார். இன்று பள்ளியில் சுதந்திர … Read more

கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து; பெண் உட்பட இருவர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59). பிரின்டிங் பிரஸ் வைத்துள்ள இவருக்கு நித்யா தேவி (56) என்ற மனைவியும், மலையரசி (27) என்ற மகளும், அண்ணாமலை என்ற மகனும் உள்ளனர். இவரது மகள் மலையரசிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு சிவகுரு (4), குருதேவ் (2) என இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியன் தனது மனைவி, மகள் மற்றும் மகளின் இரு குழந்தைகளுடன் காரில் விளாத்திகுளத்தில் உள்ள தனது மகன் அண்ணாமலை … Read more

வாரிசு அரசியல் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் காந்தியின் எதிர்வினை என்ன?

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள இரு பெரும் சவால்கள் என பேசினார். அது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் பகுதியாக பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். அதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என பட்டியலிட்ட அவர், வாரிசு … Read more

விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்: அமித்ஷா பேட்டி

டெல்லி: இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும். நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது என்று குறிப்பிட்டுள்ளார். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக … Read more

பீட்சா மாவின் மீது தொங்கவிடப்பட்ட மாப்கள் – வைரல் புகைப்படங்களுக்கு டோமினோஸ் விளக்கம்!

பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சை எழுந்த நிலையில் டோமினோஸ் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் துஷார் என்ற நபர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருந்த படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை அவர் … Read more

வேலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பலி..!!

கோவையை சேர்ந்த வெங்கட், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தொடர் விடுமுறை நாள் என்பதால் வேலூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். நண்பரை சந்தித்துவிட்டு குடும்பத்துடன் மீண்டும் பெங்களூரு புறப்பட்டார். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாடுக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more