3 மாதத்தில் 353 சோதனைகள்; 3 ஆண்டில் 8 விமானங்கள் விபத்து: அமைச்சர் வி.கே.சிங் தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டில் 8 விமான விபத்துகள் நடந்ததாகவும், கடந்த 3 மாதத்தில் 353 சோதனைகள் நடத்தப்பட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், ‘கடந்த 2019ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி வரையிலான 3 ஆண்டுகளில் 8 விமான விபத்துகள் நடந்துள்ளன. 2019ம் ஆண்டில் ஒரே ஒரு விமான விபத்து ஏற்பட்டது. 2020ல் ஏர் … Read more

நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த … Read more

வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர்களில் 3 ஆண்டில் 2,570 இந்தியர்கள் மரணம்: வெளியுறவு துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்களில் கடந்த 3 ஆண்டில் 2,570 இந்தியர்கள் மரணம் அடைந்ததாக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இவற்றில் 2,478 இறப்பு வழக்குகள் அந்தந்த நாடுகளின் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தீர்க்கப்பட்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் இறப்புகள் அல்லது … Read more

"இந்திய ரூபாய் சரியவில்லை; புரிஞ்சுகிட்டு பேசுங்க"- நிதியமைச்சரின் விளக்கமும் விமர்சனமும்!

மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்படவில்லை என்றும், அது உண்மையில் அதன் இயல்பான போக்கைக் கடைபிடித்து வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் லுயிசின்கோ ஃபலேய்ரோ (Luizinho Faleiro) கடந்த ஆறு மாதங்களில், ரூபாயின் மதிப்பு 28 முறை சரிந்து, மொத்த மதிப்பில் 34 சதவீதம் குறைந்துள்ளது என்றும், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கையிருப்பு 572 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்றும் … Read more

மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி முகக்கவசம், பிபிஇ கிட் உபகரணங்கள் தயாரிக்க தடை

சென்னை: முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட உபகரணங்கள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் தயாரிக்க முடியாது. மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வரைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் விதிகள் 2018-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி வரும் 11.08.2022 முதல் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருத்துவ உபகரணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், இலக்க வெப்பமானி (Digital Thermo Meter), அறுவை சிகிச்சை கையுறைகள், பிபிடி கிட், மருத்துவமனை … Read more

அலகாபாத், ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் 5.63 லட்சம் வழக்கு நிலுவை: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்ததாக சென்னை ஐகோர்ட்டில் 5.63 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 59,57,454 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிகபட்சமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியா ராஜஸ்தானில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட … Read more

பார்த்தா சாட்டர்ஜி மீது இரண்டு செருப்புகள் வீச்சு – காரணம் சொன்ன பெண்

மோசடி வழக்கில் கைதான மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, பெண் ஒருவர் அவர் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த … Read more

கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது!.. ஒன்றிய நிதியமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: அண்டை நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.  எனினும், அமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் … Read more

எனது ராஜ்யசபா ஓட்டுக்கு ரூ.25 கோடி தருவதாக சொன்னார்கள் – புயலை கிளப்பிய ராஜஸ்தான் அமைச்சர்

ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்காக தனக்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசியதாக ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா பேசியிருப்பது அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர குடா நேற்று ஜுன்ஜுனுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, “ராஜ்ய சபா உறுப்பினர் தேர்தலில் குறிப்பிட்ட நபருக்கு வாக்களிப்பதற்காக எனக்கு ரூ.25 கோடி … Read more

மோடி பக்தர்களுக்கு படிப்பறிவு இல்லை?; பரபரப்பை பற்ற வைத்த பாஜக தலைவர்!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்பிரமணிய சாமி. தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணிய சாமி பல்வேறு விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அதிலும் பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை கிழித்து தொங்கப்போடுவது சுப்பிரமணிய சாமிக்கு கை வந்த கலை. ஆனாலும் பாஜக மேலிடம் அது குறித்து எவ்விதமான கருத்தையும் வெளிப்படுத்தாது. அதே சமயம், சுப்பிரமணிய சாமி கூறும் கருத்து கட்சிக்கு பாதகமாக இருக்கும் பட்சத்தில் அது, ‘சுப்பிரமணிய சாமியின் சொந்த கருத்து. கட்சியின் … Read more