ஐகோர்ட் உத்தரவு எதிரொலி – டெல்லி எய்ம்ஸ் நர்சுகள் சங்கத்தினர் போராட்டம் வாபஸ்

புதுடெல்லி: தலைநகர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  பணியாற்றும் நர்சுகள் கடந்த 23-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியாளர் பற்றாக்குறை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் எதிரொலியால் கிட்டத்தட்ட 50 திட்டமிடப்பட்ட ஆபரேஷன்கள் ரத்து செய்யப்பட்டன. நர்சுகள் குழு நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும், டாக்டர்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் நர்சுகள் சங்கத்தின் தலைவருமான ஹரிஷ்குமார் கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நர்சுகள் நேற்று முதல் … Read more

பேச்சை பாதியில் நிறுத்தி ஓட்டம் பிடித்த அமைச்சர்

புதுடெல்லி: ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதன் தொடக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, ரூ.300 நுழைவுக் கட்டணம் செலுத்திய பார்வையாளர்கள் பிரகதி மைதானத்தில் ஏசி, நகரும் படிக்கட்டுகள், லிப்ட் உள்ளிட்டவை … Read more

'உங்கள் மௌனம்..' – 'வெறுப்பு அரசியல்' குறித்து பிரதமர் மோடிக்கு 108 முன்னாள் அதிகாரிகள் கடிதம்

டெல்லி: நாட்டில் அதிகரித்துள்ள ‘வெறுப்பு அரசியல்’ குறித்து 100 முன்னாள் அரசு அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ நாயர் உள்ளிட்ட 108 முன்னாள் அரசு அதிகாரிகளில் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த … Read more

2020 ஊரடங்கில் 32.79 லட்சம் வெளிநாட்டினர் இந்தியா வருகை

புதுடெல்லி:  நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதால் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், மே 31ம் தேதி வரையில் இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 2020ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவிற்கு 32.79 லட்சம் வெளிநாட்டினர் வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

மீண்டும் பரவும் கொரோனா… முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 64 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அந்த மாநில மக்களை கடு அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து, மாநிலத்தில் மீண்டும் தலைத்தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார். அப்போது அவர் கூறியது: கர்நாடகாவில் பொது … Read more

5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ், கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்த அனுமதி: சைகோவ்-டியும் போடலாம்

புதுடெல்லி: பயாலஜிக்கல்-இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயது பிரிவினருக்கு செலுத்தவும், 6 முதல் 12 வயது பிரிவினருக்கு கோவாக்கின் தடுப்பூசி செலுத்தவும் இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கடந்தாண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. 12-14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 5 … Read more

பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற கேரள வாலிபர் கைது

பெங்களூரு: பெங்களூரு ஹெண்ணூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ஹெண்ணூரில் ஒரு வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டில் இருந்த ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் முகமது ரார் (வயது 27) என்பதும், அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் போதைப்பொருட்கள் … Read more

ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் : மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய முழக்கம்; ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா  திண்டாட்டம் உள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ காரணமாக 45 கோடிக்கும் அதிகமான  மக்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க வழிவகுத்துள்ளது. மேலும் 45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற … Read more

“அதிகரித்து வரும் மின் தேவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது” – மத்திய அரசு

இந்தியாவில் அதிகரித்து மின் தேவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் … Read more

வயது வந்தோரில் 86 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர்- சுகாதாரத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை தற்போது 188 கோடியை கடந்துள்ளது.  இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்தியாவில் வயது வந்தோரில் 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி … Read more