பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்; டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு: 2 வழக்கறிஞர்கள் காயம்?

புதுடெல்லி: பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை ெதாடர்ந்து டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் டெல்லியின் ரோகிணி நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றப் பணிகள் தொடங்கின. நீதிமன்ற வளாத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையின் போது வழக்கறிஞர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்  ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு மக்கள் பாதுகாப்பான … Read more

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப்பிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் நவாப் மாலிக் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற … Read more

இந்திய கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்; நல்ல பலன் கிடைத்துள்ளது: போரிஸ் ஜான்சன் மகிழ்ச்சி

புதுடெல்லி: இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக நேற்று குஜராத் வந்தடைந்தார். அங்குள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டார். குஜராத் பயணத்தை முடித்துக் கொண்ட போரிஸ் ஜான்சன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சமாதியில் போரிஸ் ஜான்சன் மலர்வளையம் வைத்து அஞ்சலி … Read more

மனைவியை கர்ப்பமாக்க 15 நாள் பரோல் – ஆயுள் கைதிக்கு அதிர்ஷ்டம்!

மனைவி கர்ப்பம் தரிக்க, சிறையில் உள்ள கணவனுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்பவர், சந்ததி உரிமை (Right Of Progeny) அடிப்படையில், தனது கணவர் நந்த் லால் என்பவரை விடுவிக்கக் கோரி, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு … Read more

பணமோசடி வழக்கில் சிறையில் உள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சொத்து வாங்கியதில் பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை பதிந்த வழக்கில் பிப்ரவரி 23ஆம் நாள் நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். மார்ச் 15 அன்று அவரின் ஜாமீன் கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி கூறிவிட்டது. இந்நிலையில் ஜாமீன் கோரித் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று … Read more

உ.பியில் லாரி மோதி 2 ஆசிரியர்கள் பலி

ரேபரேலி: உத்திரப்பரதேசம் ரேபரேலி  மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அசோக் குமார், சூர்யாபான் என்ற இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றனர். இருவரும் திருமண நிகழ்வு ஒன்றிருக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அவர்கள் வந்துகொண்டிருந்த பைக்கில் லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கில் தூக்கியெறியப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும், உடனிருந்த உதவியாளரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு … Read more

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார்..! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

டெல்லி: 2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று இந்தியா வந்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.  இந்த பேச்சில் இருநாட்டு முக்கிய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி கூறியதாவது: இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது.  இங்கிலாந்து … Read more

காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் விருப்பம் – பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் வியூகம் அமைக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வருகை கட்சிக்கு பயனுள்ளதாக இருக்குமா என்று மூத்த தலைவர்களின் கருத்துக்களை அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். வரும் 2024-ம் ஆண்டு பொது தேர்தலில், பா.ஜ கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் கட்சியாக காங்கிரஸ் இருக்கும். வேறு எந்த கட்சியும் அகில இந்திய அளவில் பிரபலமாக இல்லை. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி … Read more

புவிநாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. இந்தியாவின் பசுமைப் பரப்பு 2261 ச.கி.மீ. அதிகரித்துள்ளதாகத் தகவல்

புவிநாளையொட்டி டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர், புவியின் கருணைக்கு நன்றி தெரிவிப்பதையும், புவியைக் காக்க நமக்குக் கடமையுள்ளதையும் வலியுறுத்தியுள்ளார். மலை, கடல், ஆறுகளில் கழிவுகள் போடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் பசுமைப் பரப்பு 2019ஆம் ஆண்டில் 2261 சதுரக்கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாகவும், பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட உழவர்கள் இயற்கை வேளாண்மையைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தப் பெருந்திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புலி, சிங்கம், காண்டாமிருகம், சிறுத்தை ஆகிய காட்டுவிலங்குகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது என்றும் பிரதமர் கூறியுள்ளார். … Read more

பிரதமர் மோடியுடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை- இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியுடன் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.  டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் மத்திய மந்திரிகள் உள்பட இரு தரப்பிலும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.   இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தின.   பின்னர் கூட்டாக … Read more