நாடாளுமன்ற வளாகத்தில் 20 எம்பிக்கள் விடிய விடிய தர்ணா.. இடைநீக்கம் ரத்து செய்யக் கோரி 50 மணி நேரமாக போராட்டம்..!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடர் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கழித்தனர். ஆறு திமுக எம்பிக்கள், ஏழு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள், டி.ஆர்எஸ். மார்க்சிஸ்ட் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரினர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்களுக்கு இட்லி சாம்பார், மதிய உணவு … Read more

கேரள சிஎஸ்ஐ பிஷப் விசாரணைக்கு ஆஜர்

திருவனந்தபுரம்: குமரி மாவட்ட எல்லையில் உள்ள காரக்கோணத்தில் சிஎஸ்ஐ சபைக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில், மாணவர்களிடம் இருந்து பல கோடி நன்கொடை வசூலித்ததாக சிஎஸ்ஐ பிஷப் ரசாலம் தர்மராஜ், கல்லூரி இயக்குனர் பென்னட் ஆபிரகாம், சிஎஸ்ஐ சபை செயலாளர் பிரவீன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிஷப் ரசாலம் தர்மராஜ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், யாரும் விசாரணைக்கு … Read more

அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் பண மோசடி தடுப்பு சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமோசடி தடுப்பு சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சொத்துகளை பறிமுதல் செய்தல், சோதனை நடத்துவது உள்ளிட்ட அதன் முக்கிய அதிகாரங்களையும் உறுதிபடுத்தி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு ஒன்றிய அரசால், ‘பண மோசடி தடுப்பு சட்டம்’ இயற்றப்பட்டு, 2005ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் செயயப்பட்ட சட்டத் திருத்தத்தில், அமலாக்கத் துறைக்கு சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட பல்வேறு புதிய … Read more

நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு எதிராக நூதன பிரசாரம்: நடிகை ஆவேசம்

இந்தூர்: தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ரன்வீர் சிங்குக்கு எதிராக இந்தூர் மக்கள் நூதனமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் கடும் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளார். அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குகளும் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகர மக்கள் மிகவும் வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் ரன்வீர் … Read more

ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு படப்பிடிப்புகள் நிறுத்தம்

ஐதராபாத்: தெலுங்கு படங்களுக்கான படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர்கள் கில்டு வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா காலத்துக்கு பிறகு திரைத்துறையின் நிலைமை சரியாக இல்லை. ஒரு சில படங்கள் பல கோடிகளை வசூல் செய்தாலும், பெரும்பாலும் படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் தயாரிப்பு செலவுகளும் கூடிக் கொண்டே செல்கிறது. பல்வேறு செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதனால் அதுவரை படப்பிடிப்புகளை நிறுத்தி … Read more

காண்டமை அதுக்கு பயன்படுத்தாமல் போதை ஏற்றும் வாலிபர்கள்: தண்ணீரில் ஊற வைத்து ஒரு சிப் அடித்தால் 12 மணி நேரம் சும்மா ஜிவ்வ்வ்வ்னு இருக்கும்

‘இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள்’ என்று கூறிவிட்டு சென்றார் மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம். இன்று இந்திய இளைஞர்களின் தேவையை அறிந்து அவர்களை இழுக்க அமெரிக்க முதல் பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகிறது. உலகளவில் முன்னணி நிறுவனங்களான கூகுள், டிவிட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்களே அலங்கரித்துள்ளனர். நமது உழைப்பின் மூலம் அந்நாடுகள் பொருளாதாரத்தில் உச்சம் கண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் கல்வியை கொண்டு சேர்க்காததுதான். இதனால், குழந்தை … Read more

மேற்குவங்க ஆசிரியர் நியமன ஊழல் | நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் மீண்டும் ரெய்டு – ரூ.15 கோடி ரொக்கம் சிக்கியது

கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் 15 கோடி ரூபாய் ரொக்கமாக மீட்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்க நகைகள், தங்க கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவின் பெல்காரியா பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் அந்த இடத்திலேயே நோட்டு எண்ணும் இயந்திரம் மூலம் பணத்தை எண்ணினர். மேலும், அலமாரியில் இருந்து சில குறிப்புகளையும் அமலாக்கத்துறை … Read more

போதை பொருள் பயன்படுத்தியதால் கார் விபத்து காதலனுடன் நடிகை கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய, மலையாள நடிகை அஸ்வதி பாபு, காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (26). ஏராளமான மலையாள படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. கடந்த 2018ல் அஸ்வதி பாபு தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் … Read more

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால் இஸ்ரோவிற்கு லாபம் ரூ.2,200 கோடி!

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவியதன் மூலம் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணியை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈட்டியுள்ளது. மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 34 நாடுகளின் 345 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதாவது … Read more

“நீங்கள் தான் மோடி ஜி, நீங்கள் தான் தினமும் டிவியில் வருவீர்கள்” – பிரதமரை சிரிக்க வைத்த 5 வயது சிறுமி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அலுவலகத்தில் அவருக்கும் ஐந்து வயது சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் தொகுதியின் பாஜக எம்பி அனில் ஃபிரோஜியாவின் குடும்பத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. காரணம், எம்பி அனில் ஃபிரோஜியாவின் 5 வயது மகள் அஹானா. பிரதமருக்கும் அஹானாவுக்கும் இடையே நடந்த வேடிக்கையான உரையாடலே சந்திப்பு பேசப்படுவதற்கு காரணம். சந்திப்பின்போது ஐந்து வயதான … Read more