வாரிசு அரசியல் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் காந்தியின் எதிர்வினை என்ன?

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள இரு பெரும் சவால்கள் என பேசினார். அது தொடர்பாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் பகுதியாக பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். அதில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என பட்டியலிட்ட அவர், வாரிசு … Read more

விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்: அமித்ஷா பேட்டி

டெல்லி: இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும். நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது என்று குறிப்பிட்டுள்ளார். நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக … Read more

பீட்சா மாவின் மீது தொங்கவிடப்பட்ட மாப்கள் – வைரல் புகைப்படங்களுக்கு டோமினோஸ் விளக்கம்!

பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சை எழுந்த நிலையில் டோமினோஸ் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் துஷார் என்ற நபர் தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்திருந்த படம் ஒன்று சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பெங்களூருவில் உள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சா மாவின் மீது தரையை துடைக்கும் மாப்கள் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை அவர் … Read more

வேலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பலி..!!

கோவையை சேர்ந்த வெங்கட், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தொடர் விடுமுறை நாள் என்பதால் வேலூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். நண்பரை சந்தித்துவிட்டு குடும்பத்துடன் மீண்டும் பெங்களூரு புறப்பட்டார். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாடுக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more

பாஜகவிலிருந்து மாவட்டச் செயலாளர் விலகல்!!

கடந்த 2021ம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காத திமுக என்று கூறி தடாலடியாக பாஜகவில் இணைந்து போட்டியிட்டார் டாக்டர் சரவணன்.. மதுரை மாநகர பாஜக மாவட்டச் செயலாளாராகவும் பொறுப்பேற்றார். காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை … Read more

சுதந்திர தினத்தையொட்டி 1,082 போலீஸாருக்கு காவல் துறை பதக்கங்கள்

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி 1,082போலீஸாருக்கு காவல் துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தையொட்டி 1,082 போலீஸாருக்கு காவல் துறை பதக்கங்கள் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் வீரச்செயலுக்கான காவல் பதக்கங்கள் 347 பேருக்கு வழங்கப்படுகின்றன. மிகவும் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம் 87 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 648 பேருக்கும் வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் துணிச்சலாக பணியாற்றிய 204 போலீஸாருக்கும், … Read more

சுதந்திர தினத்தில் வெடிகுண்டு சதி முறியடிப்பு; மணிப்பூரில் 7 போராளிகள் கைது

தவுபால்: மணிப்பூரில் சுதந்திர தினத்தில் வெடிகுண்டுகளை வைக்க திட்டமிட்டிருந்த 7 பேர் கொண்ட போராளிகளை கூட்டுப் படை குழு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் போராளிகள் அமைப்பை சேர்ந்த சிலர், சதி வேலைகளில் ஈடுபட தயாராக இருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தன. அதையடுத்து மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையின் கூட்டுக் குழு, மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனைகளை … Read more

சுதந்திர தின கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழப்பு

76வது சுதந்திர தினவிழா கொடியேற்றத்தின் போது திடீரென மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலம் தட்சினகன்னடாவில் நடந்துள்ளது.  75 வது சுதந்திர விழா முடிந்து 76 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே இன்று தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பஞ்சாயத்து … Read more

சுதந்திர தின விழா | டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

நாடு 76வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில் பிரதமர் நரேந்திர டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக பிரதமர் மோடி, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை வருகை தந்த அவரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். பின்னர் முப்படைகளின் மரியாதையை ஏற்று விழா மேடைக்குச் சென்றார். சரியாக 7.30 மணிக்கு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவது இது … Read more

Video: உலகின் 6 கண்டங்களில் இந்திய கடற்கடை மூவர்ணக்கொடி ஏற்றிய அற்புத காட்சி!

இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆறு கண்டங்கள், மூன்று பெருங்கடல்கள் மற்றும் ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளன. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 15 அன்று பல்வேறு துறைமுகங்களை அடைந்து இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற உயர்மட்ட தலைமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டின் உள்ளூர் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய மூவர்ணக்கொடியை ஏற்றியது. ஒரு வீடியோவை ட்வீட் செய்த இந்திய கடற்படை, “75 ஆண்டு சுதந்திரத்தை … Read more