Independence Day 2022: பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், உறவுமுறை, ஊழல் மற்றும் பெண்களுக்கு மரியாதை குறித்து பேசினார். உரைக்கு முன் ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகாத்மா காந்தியை வணங்கினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அதில் அவர் கூறியதாவது., * பிரதமர் மோடி உரையைத் தொடங்கிவைத்து, 75 ஆண்டுகள் … Read more

தோழியால் ஆண் நண்பருக்கு வந்த சோதனை.. விமானம் நிறுத்தம்.!

மங்களூரில் இருந்து 185 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு பீதி கிளம்பியதையடுத்து ரன்வேயில் இருந்த விமானம் நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த ஆண் பயணி ஒருவரின் செல்போனில் நீ ஒரு வெடிகுண்டு என்று அவரது தோழி வாட்சப்பில் அனுப்பிய குறுஞ்செய்தியை அருகில் இருந்த பெண் பயணி தற்செயலாகப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு அதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.  இதையடுத்து விமானத்தில் உள்ள அனைத்து பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடைபெற்றது. இதனால் 6 மணி நேரம் … Read more

மக்களை கவர முயற்சி: வருமான வரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்தாகிறது..வரிவிலக்கு இல்லாத வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்க ஒன்றிய அரசு முடிவு..!!

டெல்லி: வருமான வரி விலக்குகள், கழிவுகள் இல்லாத வரி திட்டத்தை மக்களை மேலும் கவரும் வகையில் மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வரிவிலக்கு பெறும் முறை நாளடைவில் ரத்தாகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவதில் இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒன்று வரிவிலக்கு, வரி கழிவுகளுடன் கூடிய பழைய திட்டம். மற்றொன்று வரிவிலக்கு மற்றும் கழிவுகள் இல்லாமல் வரி விகிதம் குறைக்கப்பட்ட திட்டம். இந்த இரண்டில் எந்த திட்டத்தையும் வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் … Read more

சுதந்திர தினம்: கர்நாடகா மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களால் சர்ச்சை

76-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி கர்நாடகாவில் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விளம்பரங்களில், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் படம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்ணல் காந்தியடிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் அரசு விளம்பரங்களில், நாட்டின் முதல் பிரதமர் நேருவின் படம் சேர்க்கப்படவில்லை. இதனை வன்மையாகக் கண்டித்திருக்கும் காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளது. நாட்டின் தலைவர்களை பொம்மை அவமதிப்பதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்ட 5 உறுதிமொழிகள்

புதுடெல்லி: சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 5 உறுதிமொழிகளைப் பட்டியலிட்ட்டார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம் என்று கூறிய பிரதமர் மோடி அந்த 5 உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார். பிரதமர் மோடி உரையிலிருந்து: “ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இந்திய தேசம் கடந்த 75 ஆண்டுகள் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது. நாம் பல சாதனைகளைக் கண்டுள்ளோம். அதேவேளையில் இயற்கைப் பேரிடர், போர் எனப் … Read more

இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா காந்தி, மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை பிரதமர் மோடி இழிவுப்படுத்தியுள்ளார். இந்தியாவின் ஜனநாயக மாண்பையே பிரதமர் மோடி சசீர்குலைத்து வருகிறார் என்று கடும் கண்டனம் … Read more

சுதந்திர தினம்:'சமூதாயத்தின் ஹீரோக்கள் சிறப்பு விருந்தினர்கள்'-டெல்லியில் பலத்த பாதுகாப்பு

டெல்லி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தையொட்டில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியின்போது அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் டெல்லி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுமார் 400 சிசிடிவி கேமராக்களை பொருத்தி … Read more

'நம் தேசம் வளரவேண்டுமானால் பெண்களை மதிக்க வேண்டும்' – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் பெண்களை மதிக்க வேண்டும். நமது பெண் சக்திக்கு நாம் துணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். தேசிய கீதம் ஒலிக்கப்பட மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டு மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். உரையின் துவக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி அவர்களின் கனவின்படி இந்தியாவை … Read more

இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி: சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்தார். மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என அவர் கூறினார்.

‘அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும்’ – பிரதமர் மோடி உரை

வளர்ச்சியை நோக்கி விரைவாக பயணிக்க வேண்டிய நேரமிது என்றும், ஒவ்வொரு இந்தியனும் வேகமாக அடியெடுத்து வைக்கும் நேரமிது என்றும் நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றினார். 75-ம் ஆண்டு நிறைவுபெற்று, 76-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. அதன்பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து தனது உரையை … Read more