மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; 12 பேர் மீட்பு

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மும்பை குர்லா பகுதியில் நாயக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. 4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் சிதிலமடையும் நிலையில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்த கட்டிடத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, குடியிருப்புவாசிகள் காலி செய்யுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நாயக்நகர் சொசைட்டியின் D பிரிவு குடியிருப்பு நேற்று பின்னிரவு … Read more

திட்டமிட்டப்படி ஜூலை 11 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு – தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்.!

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, திட்டமிட்டப்படி ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு காலதாமதாக நடைபெற்றதால், இந்த ஆண்டு அவகாசம் வழங்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வும், ஜெ.இ.இ. மெயின் தேர்வும் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேசிய … Read more

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து… 8 பேர் உயிருடன் மீட்பு.. ஒருவர் பலி… 11 பேர் காயம்

மும்பை : மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனே மீட்புப் பணியை தொடங்கினர்.இதுவரை 8 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒருவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.11 பேர் காயம் அடைந்துள்ளனர்.  மேலும் 20 முதல் … Read more

“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?”- ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு

“திரௌபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்?” என ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் ராம்கோபால் வர்மா. திரைப்படங்கள் மட்டுமின்றி பொதுவெளியிலும், சமூகவலைதளங்களிலும் இவர் கூறும் கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. If DRAUPADI is the PRESIDENT who are the PANDAVAS ? And more importantly, who are the KAURAVAS? — Ram Gopal … Read more

ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக பறிப்பு

புதுடெல்லி: தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணிக்கு 153 எம்எல்ஏக்கள் இருந்தனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106, அதன் கூட்டணி கட்சிகளுக்கு … Read more

ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வீரர் கைது

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாமில் இரு அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரு ஹவில்தார்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராணுவ முகாமை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வீரர் லோகேஷ் தப்பியோடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு..!!

டெல்லி: ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு செய்துள்ளார். தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்படும் நபரை கட்சியில் இருந்து நீக்க தலைமைக்கு அதிகாரம் என ஐகோர்ட்டில் அதிமுக தகவல் அளித்திருந்தது.

அக்னிபாதை திட்டத்தை வாபஸ் பெற கோரி பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் மனு

புதுடெல்லி: ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று சத்தியாகிரகம் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். புதிய திட்டத்தால் நாட்டின் பாதுகாப்பை பாஜக அரசு … Read more

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மந்திரவாதி உட்பட 2 பேரால் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான மாணிக் எல்லப்பா, அவரது சகோதரர போபட் எல்லப்பா ஆகிய 9 பேர் வீட்டில் இருந்து இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கடன் தொல்லை கொடுத்த 25 பேர் … Read more

இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா…ஒரே நாளில் பாதிப்பு 11,793 ஆக பதிவு… 24 மணி நேரத்தில் 27 பேர் பலி!! ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 11,793 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,18,839ஆக உயர்ந்தது.* புதிதாக 27 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more