ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள்.. திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள் இன்று முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் … Read more

அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மாரு ஆய்வு செய்ய வேண்டும் .: மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக்

மேகாலய: அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மாரு ஆய்வு செய்ய வேண்டும் என்று மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் கோரிக்கை வைத்துள்ளார். அக்னி பாதை திட்டம் வரும் கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது, அவர்களை ஏமாற்றும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக சப்தம் எழுப்பிய பைக்குகள் பறிமுதல்.. 631 சைலன்சர்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிப்பு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அதிக சப்தம் எழுப்பிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சிறப்பு சோதனையில் அதிக சத்தத்துடன் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 631 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த சைலன்சர்களை அகற்றி சாலையில் வரிசையாக அடுக்கி வைத்து ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர். Source link

இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா…ஒரே நாளில் பாதிப்பு 17,073 ஆக பதிவு… 24 மணி நேரத்தில் 21 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 17,073 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,07,046 ஆக உயர்ந்தது.* புதிதாக 21 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

லே – மணாலி 480 கி.மீ தூரத்தை 55 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து இரு குழந்தைகளின் தாய் உலக சாதனை

லடாக்கின் லேவில் இருந்து மணாலி வரை 480 கிலோ மீட்டர் தூரத்தை 55 மணி நேரத்தில் தனி ஆளாக 2 குழந்தைகளுக்கு தாயான 45 வயதான பெண் சைக்கிளில் கடந்திருப்பது கின்னஸ் சாதனையில் இடம்பெற உள்ளது. புனேவைச் சேர்ந்த பிரீத்தி மாஸ்கே , எல்லைச் சாலை அமைப்புடன் இணைந்து லேவில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினார். 55 மணி நேரம் 13 நிமிடங்களில் மணாலியை அடைந்து அவர் சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரம் மீட்டர் உயர … Read more

அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்

புதுடெல்லி: அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி, டிடிஎஸ் செலுத்தியதாக கணக்கு காட்டி ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் அபய் காந்த், சவுரவ் சிங், ரோகித் குமார். இவர்கள் மூவரும் மூத்த அதிகாரிகளின் கணினி பாஸ்வேர்டை தவறாகப் பயன்படுத்தி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு டிடிஎஸ் திருப்பி செலுத்தியதாக ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்தனர். போலியான 11 … Read more

தொழில்துறையில் உலகை வழிநடத்தும் இந்தியா.. புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் மோடி பெருமிதம்..!

21ஆம் நூற்றாண்டில் நான்காம் தொழில் துறை புரட்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி தலைநகர் முனிச்சில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு புலம்பெயர்ந்த இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். முன்னதாக இந்திய பெருமையை பறைசாற்றும் காணொலி ஒளிபரப்பப்பட்டதுடன், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டின் நான்காம் தொழில்துறை புரட்சியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். தகவல் … Read more

அசாமில் தொடரும் மழை, வெள்ளப்பாதிப்பு – பலி எண்ணிக்கை 127 ஆக உயர்வு..!

அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 28 மாவட்டங்களை சேர்ந்த 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் விமானப்படை மூலம் குடிநீர், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சில்ச்சாரில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் … Read more

6 மாநில இடைத் தேர்தல் முடிவுகள்: உ.பி, திரிபுராவில் பாஜக வெற்றி; பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி தோல்வி

புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ 2 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வென்றது. காங்கிரஸ் ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வென்றது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் ராஜினாமா செய்த சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் சட்டப் … Read more

அசாமில் தங்கியுள்ள சிவசேனா கட்சியின் 15 எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு கமாண்டோ பாதுகாப்பு: அமித் ஷாவுடன் ஏக்நாத் ஷிண்டே ரகசிய ஆலோசனை

மும்பை: அசாமில் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் வீடுகளுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சிநடந்து வருகிறது. ‘மகா விகாஸ்அகாடி’ என்ற பெயரில் கூட்டணிஉருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. … Read more