குண்டு வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு – கண்ணூரில் சோகம்

கண்ணூர்: கேரள மாநில போலீஸார் நேற்று கூறியதாவது: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பசல் ஹக் மற்றும் அவரது மகன் ஷஹீதுல் ஆகிய இருவரும் கண்ணூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்று வந்துள்ளனர். பழைய பொருட்களில் இருந்த ஒரு டிபன் பாக்ஸை திறந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில், பசல் ஹக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷஹீதுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, வெடிகுண்டு … Read more

வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் 3 பேர் உயிர்ப்போராட்டம்… போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

குஜராத் மாநிலம் துவாராகாவில் பெய்த கடும் மழையால் பாவடா என்ற கிராமத்தில் ஒரு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது காருக்குள் மூன்று பேர் இருந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு காரில் இருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே பஞ்சாப் மாநிலம் மோஹாலியில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஒரு பெண் உள்பட 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். Source link

மருத்துவரை மணந்தார் பஞ்சாப் முதல்வர் மான்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவர் குர்பீரித் கவுன் என்பவரை நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.  கடந்த 2015ம் ஆண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு பக்வந்த் தனியாக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்கி வெற்றி பெற்றார். பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி ஆட்சி … Read more

மகாராஷ்டிரா விவகாரம் | தகுதி நீக்க வழக்கால் 11-ம் தேதிக்குப் பிறகே அமைச்சரவை குறித்து முடிவு

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் 45 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. இதில் 25 பேர் பாஜகவையும் 13 பேர் ஷிண்டே அணியையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எஞ்சிய இருவர் சுயேச்சைகளாக இருப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசில் ஷிண்டே, பட்னாவிஸை தவிர பெரும்பாலான அமைச்சர்கள் புதியவர்களாக இருப்பார்கள். அடுத்த மகாராஷ்டிர தேர்தலுக்கு தயாராவதற்கு முன் புதிய முகங்களை பாஜக பரிசோதிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. பாஜக – ஷிண்டே அணி இடையே அமைச்சர் பதவி … Read more

புரட்டி போட்ட கனமழை… வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த பள்ளிபேருந்து…

தெற்கு பாகிஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் சூறாவளி சுழற்சியின் காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜாம்நகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கட்ச் மாவட்டத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் மஸ்கா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி … Read more

அரசியலமைப்புக்கு எதிராக பேச்சு முன்னாள் அமைச்சர் மீது கேரள போலீசார் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில்  பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் கலாசாரம் மற்றும்  மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். செங்கணூர் தொகுதி  எம்எல்ஏ.வான இவர், சில தினங்களுக்கு  முன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில், இந்திய  அரசியலமைப்பு சட்டத்தை கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால், நேற்று முன்தினம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.அதே நேரம், செரியான்  மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கேரளா முழுவதும் பல்வேறு போலீஸ்  … Read more

வகுப்புவாத மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூர் கிராமம் உள்ளது. இங்கு புதன்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணை சிலர் கேலி செய்ததாக தெரிகிறது. இதனை வேறு மதத்தை சேர்ந்த சிலர் கண்டித்தனர். இரு தரப்பினரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் வெடித்துள்ளது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு மதத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். கல்வீசியும் தாக்கி கொண்டனர். 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பேருந்து … Read more

திருப்பதியில் நிலச்சரிவு

திருமலை: இந்நிலையில், திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், சேஷாச்சல வனப்பகுதியில் தொடர்ந்து மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், திருப்பதி- திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் 10 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் மாலை திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள பாறைககள் சரிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமலை- திருப்பதி தேவஸ்தான … Read more

அரசு, டாடா நிறுவன அதிகாரிகள் கைது

புதுடெல்லி: டாடா மற்றும் பல்வேறு நிறுவனத்துக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் பணிகள் வழங்குவதில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ஜா லஞ்சம் வாங்கியதாக சிபிஐக்கு புகார் சென்றது. இதையடுத்து, காஜியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஜாவின் குருகிராம் வீட்டில் இருந்து ரூ.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டாடா நிறுவத்துக்கு ஆதரவாக பல்வேறு பணிகளை … Read more

உத்தரப் பிரதேசத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கான பெரிய சமையல் கூடத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் ஒரு இலட்சம் பேருக்கு உணவு சமைக்கும் பிரம்மாண்ட சமையல் கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி பயணமானார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு இலட்சம் பேருக்கு மதிய உணவு தயாரிக்கும் திறன்கொண்ட அட்சயப் பாத்திரம் சமையல்கூடத்தைத் திறந்து வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். Source link