6 மாநில இடைத்தேர்தலில் அமோக வெற்றி : 3 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 7 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திரிபுராவின் டவுன் போர்டோவலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி வாகை சூடினார். உத்தரபிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  Source link

சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!

மும்பை: மகாராஷ்டிராவில், சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. இதன் முதல்கட்டமாக, குஜராத் மாநிலம் வதோதவில் நேற்று நள்ளிரவு ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பட்னாவிசும் சந்தித்து பேசினர். இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்துகிறார். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள், முதல்வர் … Read more

தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிப்பு – சு.வெங்கடேசன் M.P

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது சென்னை தேர்வர்கள் அனைவருக்கும் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தனது போராட்டத்துக்கு கிடைத்த முழு வெற்றி என்றும் சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “சென்னை ஆர் ஆர் பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு … Read more

கிளறிய வீரமணி.. பாஜ ஷாக்; அக்னிபாத்தில் இவ்வளவு ஆபத்து?

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்தது. இதன் பின்னர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் பெருந்தோல்வி அடைந்தது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்பன உள்பட 8 … Read more

சமீபத்தில் பெய்த மழையால் குளம் போல் காணப்படும் தேசிய நெடுஞ்சாலை : வைரல் வீடியோ

பீகாரில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பள்ளங்களாக காணப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மதுபனி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 227-ல், சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி ஆங்காங்கே குளம் போல் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  

சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு

காந்திநகர்: குஜராத் வன்முறை வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் மற்றும் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து குஜராத் முழுவதும் மோதல்கள் வெடித்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் … Read more

இடைத்தேர்தல்களில் பாஜக வெற்றி – பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவு!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் இடைத்தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, சங்கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பதவி வகித்து வந்தார். இவர் நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதன் காரணமாக, சங்கரூர் மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் … Read more

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி பேச்சு?

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமின் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில், குடும்பத்தினர் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க உத்தவ் தாக்கரேவின் மனைவி மூலம் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் … Read more

நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்

காளஹஸ்தி: நடுரோட்டில் இளம்பெண்ணை கல்லால் தாக்கியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொன்று ஏரியில் சடலத்தை வீசிய கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவரது மனைவி மோகனா என்கிற ரோஜா(23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு பிரகாஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ரோஜாவை துன்புறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி கணவருடன் கோபித்துக்கொண்டு ரோஜா தனது … Read more

பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: பட்டியலின மற்றும் பழங்குடியினரை பொது இடத்தில் இழிவுபடுத்தினால் மட்டுமே எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டம் எல்முடியை சேர்ந்தவர் மோகன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஜெயகுமார் நாயர் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்தார். அப்போது ஒப்பந்ததாரர் ரத்தீஷ் ப‌யஸ், ‘இனி இங்கு வேலை செய்யக்கூடாது’ என மோகனிடம் … Read more