குஜராத் கலவர வழக்கு | அமித் ஷா பேட்டியை அடுத்து சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா கைது

மும்பை: குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் கலவரம் ஏற்பட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை உச்ச … Read more

கார்த்திக் ஆர்யனுக்கு ரூ. 4.7 கோடி மதிப்பிலான மெக்லாரன் காரை பரிசளித்த இயக்குநர்..!

கார்த்திக் ஆர்யன் நடித்த திரைப்படம் வணிக முறையில் வெற்றிபெற்றதையடுத்து அவருக்குப் படத் தயாரிப்பாளர் பூசண் குமார் நான்கு கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள மெக் லாரன் காரைப் பரிசளித்துள்ளார். கார்த்திக் ஆர்யன் நடித்த பூல் புலையா 2 திரைப்படம் 184 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் முதல் மெக்லாரன் கார் அவருக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. காருடன் நிற்கும் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  Source link

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மும்பை தாக்குதல் தீவிரவாதிக்கு பாகிஸ்தானில் 15 ஆண்டு சிறை: சர்வதேச நெருக்கடியால் நடவடிக்கை

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு  நிதி உதவி அளித்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.  கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்காக  நிதி திரட்டிய வழக்கில் லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி  சஜித் மஜீத் மிர். … Read more

பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு வாங்கியது சொமேட்டோ..!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, அரியானாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை 4 ஆயிரத்து 447 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் உணவு டெலிவரியுடன் மளிகை பொருட்களும் டெலிவரி செய்யும் தொழிலில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.  Source link

ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?

* சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் அபாயம்* மகாராஷ்டிராவில் பதற்றம்; 144 தடை உத்தரவு அமல்புனே: அசாமில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏ.க்களால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால், சிவசேனா தொண்டர்கள் ஆவேசமாக உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏ.க்களை அச்சுறுத்தும் வகையில், மகாராஷ்டிராவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகமாகி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு … Read more

பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

பிரதமருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்த நிலையில் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அமித் ஷா பேட்டி அளித்தார். அப்போது, சில அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட சில பத்திரிகையாளர்களும் குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன என்றார். சிறப்பு புலனாய்வு குழு முன்பு … Read more

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் ஏழுமலையானை தரிசிக்க 3 கிமீ தூரம் நீண்ட வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனால், இலவச தரிசன வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 71,589 பக்தர்கள் தரிசித்தனர். இதில், 41,240 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.30 கோடியை காணிக்கையாக செலுத்தினர்.தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று காலை வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் முழுவதும் நிரம்பி ஆஸ்தான … Read more

முகநூல் காதலனுடன் தனிக்குடித்தனம் நடத்திய மனைவி! ஆத்திரத்தில் கணவர் செய்த கோரச் செயல்!

முகநூல் காதலனுடன் மனைவி தனிக்குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் கைகளை கட்டி 4வது மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரித்திகா சிங். இன்ஸ்டாகிராமில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமாக வலம்வந்தவர். ஃபேஷன், உணவு, பயணம் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். … Read more

1983… இதே நாளில் முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி!

இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய இன்றைய தினம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கு சென்ற இந்திய அணி, ஜாலி சுற்றுப்பயணமே மேற்கொள்கிறது என விமர்சிக்கப்பட்டது. அதுவும் இறுதிப் போட்டியில் 183 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆன நிலையில், எதிர் அணியான மேற்கு இந்திய தீவுகள் அணி தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எனினும், ஹரியானா சிங்கமான இந்திய அணியின் … Read more

ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் வைக்க அமைச்சரவை ஒப்புதல்

அமைச்சர் வேணுகோபால கிருஷ்ணா பேட்டிதிருமலை : ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்தை பிரித்து புதிதாக டாக்டர் அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் அமைச்சரின் வீடு, பேருந்துகள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது. இதன்பிறகு ஒரு மாதம் ஆனாலும் அமலப்புரம் நகரில் 144 தடை உத்தரவு உள்ளது. இந்தநிலையில் ஆந்திர … Read more