ஏவுகணை சோதனை வெற்றி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து

புதுடெல்லி: தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விஎல் – எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் … Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். தொடக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இனி வருங்காலங்களில் ஜிப்மர் … Read more

மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்: காவல்துறை அறிவிப்பு

மும்பை: மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக மும்பையில் சிவசேனா தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிவசேனா பாலாசாஹேப் கட்சி | அதிருப்தி குழுவுக்கு பெயர் வைத்த ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்

மகாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. 40 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் அசாமில் முகாமிட்டுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இந்நிலையில் அந்தக் குழுவிற்கு சிவசேனா பாலாசாஹேப் என்று அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தரப்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிருப்தி அணியில் உள்ள சிவசேனா எம்எல்ஏ தீபக் குமார் கேசர்கர், எங்கள் குழுவானது சிவசேனா பாலாசாஹேப் குழு என்றழைக்கப்படும். நாங்கள் எந்த கட்சியுடனும் சேர மாட்டோம் என்றார். கோரிக்கையும் பிடிவாதமும்: மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 … Read more

அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். ஏக்நாத் ஷிண்டே உடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 50 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மட்டும் 40 … Read more

சாலையில் வீசப்பட்ட பிறக்காத குழந்தைகளின் உடல்கள்.. சட்டவிரோத கருக்கலைப்பா?

கர்நாடகாவில் சாலையில் வீசப்பட்ட பிறக்காத குழந்தைகளின் உடல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள மூடலாகி (Mudalagi) நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஒரு கழிவுநீர் கால்வாய் பாலத்தின் கீழே 5 பிளாஸ்டிக் டப்பாக்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டு கிடந்தன. அந்த டப்பாக்களில் 7 சிசுக்களின் பிணம் இருந்தது தெரியவந்தது. கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில், சிசுக்களின் உடல்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வீசியது யார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், 8 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகப் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக டைமிங் பிரச்சனை தலைதூக்கியது. PRTC ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியதாக கூறி, அதனை கண்டித்து நேற்று முதல் PRTC ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் முன்னறிவிப்பு … Read more

சிவசேனா உடைந்த கதை: திரைமறைவில் செயலாற்றிய 3 பாஜக தலைவர்கள்: தாக்கரே குடும்பத்தினருக்கு தெரியாமல் ஷிண்டே எம்எல்ஏக்களை அழைத்துச் சென்ற பின்னணி

மும்பை: தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவசேனா கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் 40 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றநிலையில் இதன் பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சிவசேனாவை உடைத்ததன் பின்னணியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேரந்த 3 பாஜக இரண்டாம் கட்டத் தலைவர்கள் ரகசியமாக பணியாற்றியுள்ளனர். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் … Read more

கர்நாடகாவில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் திடீர் தீ.. ஒருவர் பலி.!

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மைசூரைச் சேர்ந்த சிவராமு, அனந்தராமையா ஆகிய இருவர் டி.வி.எஸ் ஜூப்பிட்டர் இருசக்கர வாகனத்தில் தாசரகுப்பா பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றியதில், நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த இருவரின் உடலிலும் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிவராமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியதால் பாடப்பட்டது. வருங்காலங்களில் ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என இயக்குநர் உறுதியளித்தார்.