'அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது' – அமைச்சர் நிதின் கட்கரி!

வாகனங்களுக்கான பெட்ரோல் தேவையை, பசுமை எரிபொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலம், அகோலா பகுதியில் உள்ள பஞ்சப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம் சார்பில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: மாற்று எரிசக்தியை நோக்கி … Read more

DHFL நிறுவன இயக்குநர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள 22 கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தது சிபிஐ..!

DHFL எனப்படும் திவான் வீட்டு வசதி நிதி கழக நிறுவனத்தின் இயக்குநர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 22 கைக்கடிகாரங்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. யூனியன் பேங்க் இந்தியா உள்பட 17 வங்கிகள் கூட்டமைப்பில் 34 ஆயிரத்து 615 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் DHFL நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீரஜ் வதாவன் தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளியன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், வங்கியில் பெற்ற பணத்தை … Read more

குஜராத் மாநிலம் சூரத்தில் இயற்கை விவசாய மாநாடு: பிரதமர் மோடி உரை

சூரத்: இயற்கை விவசாயம் செய்தல் அது இயற்கை சுற்றுச் சுழலுக்கு சேவை செய்வதாக அர்த்தம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இயற்கை விவசாயம் செய்யும்போது பூமித்தாய்க்கு சேவை செய்கிறீர்கள் என்றும் மண்ணின் தரத்தை பாதுகாக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்

குடும்பத் தகராறு: தந்தையை இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்த மகன் கைது

ஹரியானா மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தையை மகன் இரும்புக் குழாயால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட்டின் ஜவஹர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 65 வயதான மங்கத் ராம். இவருக்கும் இவரது மகன் பிரேம் குமாருக்கும் ஜூலை 8 அன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம் தனது தந்தை மங்கத் ராமை குச்சிகளாலும் இரும்புக் குழாயாலும் சரமாரியாக தாக்கத் துவங்கியுள்ளார். அப்போது தாக்குதலை தடுக்க … Read more

பக்ரித் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து..!

பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துச் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தப் பண்டிகை தியாகம் மற்றும் மனித சேவையின் சின்னம் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில், மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.  Source link

கர்நாடகா கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு 21,600 கன அடியில் இருந்து 32,500 கன அடியாக உயர்வு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை

கர்நாடகா: கர்நாடகா கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு 21,600 கன அடியில் இருந்து 32,500 கன அடியாக உயர்தப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரப்பி வருகின்றது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இரு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

2022 அக்டோபருக்கு பின் பணவீக்கம் கட்டுக்குள் வரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டின் 2ஆவது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.பணவீக்கத்தை 6 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்நிலையில். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி … Read more

திருப்பதியில் தரிசனம் ரத்து – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் வரும் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில் . இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, … Read more

அட்டாரி-வாகா எல்லையில் பக்ரித் பண்டிகையையொட்டி இனிப்பு பரிமாறி கொண்ட இருநாட்டு வீரர்கள்..!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி-வாகா எல்லையில் பக்ரித் பண்டிகையையொட்டி இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பக்ரித் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குளுக்கி, இனிப்பு பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர்.  Source link

ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு

டெல்லி: ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நாளை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகாமை தெரிவித்துளளது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http:/neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் UG வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது அந்த வகையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் … Read more