காட்டாற்று வெள்ளத்தின் நடுவே ஆற்றை கடக்க முயன்று சிக்கிய நபரை பத்திரமாக மீட்ட 2 போலீசார்..!

மகாராஷ்டிராவில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நபரை போலீசார் இருவர் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர். புனே அருகே பகுல் உதயன் எனும் இடத்தில் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே ஆற்றை கடக்க முயன்ற நபர் திடீரென நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், விரைந்து செயல்பட்டு அவரை போலீசார் மீட்டனர். Source link

நெட் தேர்வில் குளறுபடி 3 மணி நேரம் தாமதம்

புதுடெல்லி: சர்வர் பிரச்னையால் பல மாநிலங்களில் யுஜிசி நெட் தேர்வு துவங்க 3 மணி நேரம் தாமதமானது.இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதற்காக, பல்கலைக் கழக மானியக் குழுவால், தேசிய அளவில் ‘நெட்’ என்ற பெயரில் பொது தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2022 ஜூன்  ஆகிய 2 வருட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இம்முறை ஒன்றாக … Read more

ஜார்கண்ட் முதல்வர் நண்பருக்கு சொந்தமான 17 இடத்தில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருக்கமான எம்எல்ஏ பங்கஜ் மிஸ்ரா. இவர் மீது டோல்வரி ஒப்பந்தகாரர் ஒருவர் ஷாகிப்கன்ஜ் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார். அதில், டோல்கேட் டெண்டரில் அமைச்சர் ஒருவரின் சகோதரர் போட்டியிட்டு போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் மிக அதிகமான தொகைக்கு ஏலம் கேட்டு, பின் அதை செலுத்தவில்லை என்றும், இச்சம்பவம் தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா மற்றும் அமைச்சரின் உத்தரவின் பேரில் மோதல் நடந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் … Read more

திசை மாறி வந்த காரை நிறுத்த முயன்ற காவலருக்கு நேர்ந்த விபரீதம்.. கார் பானட்டில் வைத்து காவலரை 500மீ தூரம் இழுத்துச் சென்ற வாகனஓட்டி

மகாராஷ்ட்ரா, நவி மும்பையில் தவறான திசையில் வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை முட்டித் தள்ளி, கார் பானட்டில் வைத்து அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கோப்ரா மேம்பாலத்தில் தவறான திசையில் வந்த காரை போக்குவரத்து காவலர் நிறுத்த முயன்றார். கார் வேகமாக வந்த நிலையில் பானட்டில் தொற்றிக் கொண்ட காவலர் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். மற்றொரு வாகனம் மூலம் காரை மடக்கிப் பிடித்த … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 18,257 பேருக்கு கொரோனா… 42 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,257 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,22,651 ஆக உயர்ந்தது.* புதிதாக 42 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

சொத்து தகராறு! தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற மகன் கைது!

மும்பையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர். மும்பை நகரத்தில் வர்தமான் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வந்தவர் 46 வயதான சாயா பஞ்சால். இவரது மகன் 21 வயதான ஜெயேஷ் பஞ்சால். இவர்களது அண்டை வீட்டார் பஞ்சால் வீட்டின் வெளியே ரத்தக்கறைகள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் … Read more

குஜராத் காங். செயல் தலைவராக சுயேச்சை எம்எல்ஏ மேவானி தேர்வு – தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு

புதுடெல்லி: குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வத்காம் தொகுதியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிக்னேஷ் மேவானி. அதன்பின் அவர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சுயேச்சை எம்எல்ஏ. ஜிக்னேஷ் மேவானியை குஜராத் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக நியமிக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் வேணு … Read more

டெல்லி ஜும்மா மசூதியில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..!

பக்ரீத் பெருநாளையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தியாக திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். நாடு முழுவதிலும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Source link

அதிகாலையில் நடந்த பரபரப்பு லடாக் எல்லைக்கு அருகே பறந்து அச்சுறுத்திய சீன போர் விமானம்: இந்திய விமானப்படையின் பதிலடியால் ஓட்டம்

புதுடெல்லி: லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாடு கோட்டுக்கு  மிக அருகில் பறந்து வந்து அச்சுறுத்திய சீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்த இந்திய விமானப்படை தயாரானது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.கிழக்கு லடாக் பகுதிகளில் இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ல் நடந்த இதுபோன்ற முயற்சியை தடுத்த, இந்திய வீரர்கள் மீது  சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் வீர மரணம் … Read more

இன்னும் 5 ஆண்டுகளில் பெட்ரோல் தேவை இருக்காது – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை

அகோலா: வாகனங்களுக்கான பெட்ரோல் தேவையை, பசுமை எரிபொருட்கள் இன்னும் 5 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் அகோலா நகரில் உள்ள டாக்டர் பஞ்சப்ராவோ தேஷ்முக் கிரிஷி வித்யாபீடம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: நாட்டின் வேளாண் வளர்ச்சியை இன்னும் 5 ஆண்டுகளில் 12 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக வேளாண் விஞ்ஞானிகள் … Read more